முஸ்லிம் சமுதாயத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து இருக்கிறது.
இந்த நிலையில், இந்த சிபாரிசுப்படி முதல் முறையாக மேற்கு வங்காள அரசு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடை அறிவித்து உள்ளது.

முஸ்லிம் மக்களில் சமூக, பொருளாதார மற்றும் கல்விரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, மேற்கு வங்காள முதல்-மந்திரி பட்டாச்சார்யா அறிவித்தார்.
மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய 10 சதவீத ஒதுக்கீடு மூலம் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு 17 சதவீதமாக அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த சிபாரிசுப்படி முதல் முறையாக மேற்கு வங்காள அரசு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடை அறிவித்து உள்ளது.

முஸ்லிம் மக்களில் சமூக, பொருளாதார மற்றும் கல்விரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, மேற்கு வங்காள முதல்-மந்திரி பட்டாச்சார்யா அறிவித்தார்.
மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கனவே 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய 10 சதவீத ஒதுக்கீடு மூலம் இதர பிற்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு 17 சதவீதமாக அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
Posted by
Unknown
Labels:
இடஒதுக்கீடு
0 comments:
Post a Comment