2012 ஒலிம்பிக் இறுதிநாள் நிகழ்வின் மர்மங்கள்.
வணங்கப்படும் பிரமிட் 
இந்த தளத்தில் இதற்கு முன் பதிவிடப்பட்ட பதவில் 2012 ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் அரங்கேற்றப்பட்ட மர்மமான விடயங்கள் பற்றிப் பார்த்தோம்.TO READ CLICK HERE.பிரித்தானியாவின் இலக்கியம் வரலாறு போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களது மர்மமான விடயங்களை அரங்கேற்றினார்கள்.இன்று இந்த பதிவில் இறுதி விழாவில் அரங்கேற்றப்பட்ட மர்மமான விடயங்கள் பற்றிப் பார்ப்போம்.

நிறைவு விழா

ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வு பிரித்தானியாவின் கடந்த காலத்தை பிரதிபலிப்பதாக இருந்தது, ஆனால் இறுதிநாள் நிறைவு விழாவோ எதிர்காலத்தை பிரதிபலிப்பதாக உருவாக்கப்பட்டிருந்தது.

புகழப்படும் இலுமினாடிகள்.

 NWO அல்லது New World Order அதாவது புதிய உலகுக்கான பிரகடனம்.இந்த பிரகடனத்தை ஏற்று அதன்படி இந்த உலகை தமது ஆயுத பலத்தால் வழிநடத்திச் செல்லும் மேற்குலகின் உயரடுக்கு மக்களின் ஒரே குறிக்கோள் முழு உலகமும் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.ஒரே ஆட்சி முழு உலகையும் ஆள வேண்டும்.முழு உலகத்திலும் ஒரே நாணயம் பயன்படவேண்டும்.இந்த குறிகோளுடன் இருப்பவர்களுக்கு தமது செய்தியை சொல்ல மிக பொருத்தமான இடங்களில் மிக முக்கியமான இடம்தான் ஒலிம்பிக்.இதை இவர்கள் சொன்ன விதம் மிகவும் மர்மமானது.எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் ஒரு மேடையை சுற்றி ஒன்று சேர்ந்தனர்.அப்போது நடனமாடியவ்ர்கள் மெது மெதுவாய் ஒரு பிரமிட்டை கட்டம் கட்டமாக கட்டி எழுப்பினர்.பின்னர் அவர்கள் தரையில் விழுந்து அந்த பிரமிட்டை வணங்கினர்.கடைசியில் மேடையில் கட்டி எழுப்பப்பட்ட பிரமிட்டை சுற்றி எல்லா நாட்டு வீரர்களும் தமது நாட்டுக் கொடியுடன் திரண்டிருந்தனர்.

இதன் நோக்கம் தான் என்ன ? இன்னும் புரியவில்லையா ? 
1)கட்டி எழுப்பப்படும் பிரமிட்டும் அதை சுற்றி காணப்படும் உலக நாட்டுக் கொடிகளும் 
2)கட்டி எழுப்பப்பட்ட பிரமிட்டும் அதை வணங்கும் நடனக்குளுவினரும்

 Imagine - கற்பனை செய்துபார் 

இறுதி விழாவின் இசை நிகழ்ச்சிகள் குறிப்பிட்டுக் கூறத்தக்க வரிகளைக்கொண்ட John Lennon இனால் பாடப்பட்ட " Imagine " என்ற பாடலுடன் ஆரம்பமானது.இந்த பாடல் இப்படிப்பட்ட ஒரு உலக நிகழ்வொன்றின் போது பாவிக்கப்பட்டதின் உள்நோக்கம் என்ன ? அது அந்த பாடலின் வரிகளை கவனித்தாலே இலகுவாக புரிந்துவிடும்.

Imagine there’s no countries 
It isn’t hard to do
Nothing to kill or die for
And no religion too                    
Imagine all the people living life in peace

You, you may say
I’m a dreamer, but I’m not the only one
I hope some day you’ll join us
And the world will be as one

Imagine no possessions             
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man
Imagine all the people sharing all the world

ஒலிம்பிக் போன்ற அகில உலக நிகழ்வொன்றின் போது இப்படிப்பட்ட பாடல் வரிகளைக் கொண்ட பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டதன் உள் நோக்கம் என்ன ?
அதுவும்  Imagine No Countries - Imagine No Religion - Imagine No Possession போன்ற வரிகள் சொல்லவரும் செய்திதான் என்ன ?

இந்த உலகை ஒரே குடையின் கீழ் ஆள நினைக்கும் மேட்டுக் குடியினரின் நோக்கங்கள் மேலே உள்ள வரிகள் மூலம் அவர்கள் சொல்லியிருப்பது தெளிவாக தெரிகிறது.இந்த பாடலைப் பாடியவர்களின் நோக்கம் வேற ஒன்றாக இருக்கலாம், ஆனால் இதை இந்த இடத்தில் பாவித்தவர்களின் நோக்கம் நிச்சயம் வேற ஒன்றே.

பீனிக்ஸ் வழிபாடு.

பலவிதமான கலை நிகழ்வுகளுக்குப் பிறகு எல்லோரினதும் கவனம் ஒலிம்பிக் தீப்பந்தத்தின் மீதே இருந்தது, அது அனைக்கப்படுவதட்கு முன் அதிலிருந்து கிளம்பி மேலே எழுந்து வந்தது ஒரு பீனிக்ஸ் பறவை.தனது சாம்பலிலிருந்து மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்துவருவதாக கூறப்படும் இந்த கற்பனைப் பறவை இரகசிய சமுதாயங்களின் மிக முக்கியமான  புதிர் நிறைந்த ஒரு சின்னமாகும்.

பண்டைய இரகசிய சமுதாயங்கள் மூலம் உச்ச அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பறவையே இந்த பீனிக்ஸ் எனப்படும் கற்பனைப் பறவை,இது அவர்களின் ஒரு ரகசிய குறியீடாக பயன்பட்டது.

பீனிக்ஸ் பற்றி Manly P Hall எழுதிய Secret Teaching Of All Ages இப்படி கூறப்பட்டுள்ளது.

“The phoenix is the most celebrated of all the symbolic creatures fabricated by the ancient Mysteries for the purpose of concealing the great truths of esoteric philosophy. (…) Medieval Hermetists regarded the phoenix as a symbol of the accomplishment of alchemical transmutation, a process equivalent to human regeneration. The name phoenix was also given to one of the secret alchemical formula. (…) In the Mysteries it was customary to refer to initiates as phoenixes or men who had been born again, for just as physical birth gives man consciousness in the physical world, so the neophyte, after nine degrees in the womb of the Mysteries, was born into a consciousness of the Spiritual world. This is the mystery of initiation to which Christ referred when he said, “Except a man be born again, he cannot see the kingdom of God” (John iii. 3). The phoenix is a fitting symbol of this spiritual truth.”

பீனிக்ஸ் இன் வருகைக்குப் பிறகு அரங்கத்தில் ஒலித்த பாடல் இன்னும் ஆச்சரியத்துக்குரிய வரிகளையுடையது.
" Rule The World " 
" RULE THE WORLD பாடும் காட்சி.
இந்த பதிவு மூலம் நான் தந்தது ஒரு அறிமுகம் மட்டுமே ஆனால் இந்த இறுதி நாள் நிகழ்வில் இடம்பெற்ற இன்னும் பல மர்ம விடயங்கள் இருக்கின்றன..அது பற்றி மிகத் தெளிவாக விளக்கும் ஒரு காணொளி ஒன்று YOUTUBE இல் கிடைத்தது.அதை கட்டாயம் பார்க்கவும்.
மேலும் படங்கள்
ஒற்றைக் கண் MASCOTS
சியோனிச ZION LOGO

SOMETHING OUT THERE ???
ARTICLE FROM TAMILKHILAFA.BLOGSPOT.COM 


2012 - ஒலிம்பிக் துவக்க விழாவின் மர்மங்கள் 
இந்த வருடம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான நிகழ்வுதான் 2102 ஒலிம்பிக், அதன் துவக்க விழா பிரித்தானியாவின் ஒலிம்பிக் கிராமத்தில் மிகப் பிரம்மாண்டமாக நிகழ்ந்தது.இந்த நிகழ்வை உலகின் நாளா பக்கங்களிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து ரசித்தனர்.ஆனால் இந்த ஆண்டின் ஒலிம்பிக் நிகவின் துவக்க மற்றும் இறுதி நிகழ்வுகளின் மறைந்த மர்மமான தகவல்கள் என்ன ?

துவக்க விழா

  TRAINSPOTTING SLUMDOG MILLIONAIRE போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பிரித்தானிய திரைப்பட இயக்குனர் Danny Boyle தான் இந்த நிகழ்வினதும் இயக்குனர்." Isle Of Wonder " இதுதான் இந்த நிகழ்வின் சாராம்சம் அல்லது தீம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.ஆரம்ப விழாவின் நிகழ்வுகள் பிரித்தானிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.ஆரம்ப கால புராணக்கதைகளில் துவங்கி தொழில் புரட்சி மற்றும் நவீன காலம் என செல்கிறது களியாட்டங்கள்.இந்த விடயங்களை அவர்கள் சொல்லப் பயன்படுத்திய சில மர்மமான குறியீடுகளே இங்கு மிகவும் முக்கியமானது.அது பற்றி இப்போது அலசுவோம்.

பச்சைப் பசேலான சந்தோசமான நிலம்.

ஆரம்ப நிகழ்வின் தொடக்கம் பண்டைய நாட்டுபுற இங்கிலாத்தைக் குறிக்கும் விதமாக விவசாயிகளையும் கிரிக்கெட் வீரர்களையும் கொண்டு ஆரம்பிக்கிறது.மேலும் அதன்போது பல மாயமான விசித்திரமான குறியீடுகளும் காட்டப்படுகின்றன.அப்படி காட்டப்பட்ட விசித்திரமான குறியீடுகளின் மிக முக்கியமானதும் ஆரம்ப நிகழ்வின் மையைப் புள்ளியுமானதுமான ஒரு குறியீடே அந்த மலை உச்சி. " Glastonbury Tor " என்று அழைக்கப்படும் இந்த மலை உச்சிக்கு மந்திர சக்திகள் உள்ளதாக இன்றும் அப்பகுதிகளில் நம்பப்படுகிறது.
சுருள் வடிவில் அமைந்த அந்த Glastonbury Tor மலையுச்சி நாட்டுப்புற விவசாயிகளையும் கிரிக்கெட் வீரரகளையும் மேலிருந்து நோக்கும்விதமாக அந்த காட்சி அமைக்கப்பட்டிருந்தது.மேலும் அம் மலையுச்சியில் ஒரு ஓக் மரம் (கருவாலி) நடப்பட்டிருந்தது.ஓக் மரம் ஆங்கிலேயர்களின் மூதாதையர்களான " செல்டிக் " இனத்தவர்களின் மிகப் புனிதமான மரமாகும், இம்மரம் செல்டிக் இனத்தவர்களின் பாதிரிமார்களின் மிகப்புனிதமான மரமாகும்.மேலும் அவர்களின் கருத்துப்படி அது தெய்வத்தன்மையின் உச்ச நிலைப் பிரதிநிதியாகும்.
Glastonbury Tor இங்கிலாந்தின் பழைமையான புனிதத் தளங்களில் ஒன்று.பல விசித்திரமான கற்பனைக் கதைகளுடன் மற்றும் வரலாறுகளுடன் தொடர்புபட்டுள்ளது  இந்த இடம்.உதாரணத்துக்கு இந்த புராணக்கதையைக் கூறலாம், வராலற்று ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்கப்படாத ஆனால் வரலாற்றில் இருந்ததாக விவாதிக்கப்படும் பிரித்தானிய அரசரே கிங் ஆர்தர் ஆவார்.இவரின் இருப்பு பற்றி வரலாற்றுரீதியாக எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை, ஆனால் இவரைப் பற்றி அப்பகுதிகளில் பரவியிருக்கும் கிராமக்கதைகள் மற்றும் இலக்கிய தொகுப்புகள் மூலமே இவரைப் பற்றி அறியக் கிடைக்கிறது.ஆனால் ஒருசாரார் இவர் வரலாற்றில் வாழ்ந்த ஒருவர் என்று விவாதிக்கின்றனர்.இவரைப் பற்றிய வரலாற்றை எழுதியவர் " Geoffrey Of Monmouth " ஆவார். இவர் எழுதிய வரலாற்றுப் புத்தகத்தின் பெயர் " Historia Regum Britania " என்ற லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்படும் " Avalon " என்ற இடமே இந்த Glastonbury Tor ஆகும். கிங் ஆதரின் வரலாற்றில், கிங் ஆதருடன் 12 போர் வீரர்கள் பற்றியும் கூறப்படுகிறது.

  இன்னொரு புராணக்கதையின் அடிப்படையில், Glastonbury பிரதேசத்தில் காணப்படும் இன்னொரு விசித்திரமான இடம் தான் " Chalice well ".கிறிஸ்தவர்களின் நற்செய்திகளின் அடிப்படையில் ( Gospels ) இயேசு கிறிஸ்துவுக்கு தனது கல்லறையை வழங்கிய Joseph Of Arimathea என்பவர் பிற்காலத்தில் இந்த இடத்துக்கு வந்து இயேசு கிருஸ்துவை சிலுவையில் அறைந்த போது சிந்திய ரத்தம் அடங்கிய மதுக்கோப்பையை அங்கு இருந்த கிணற்றில் விசியதாக கூறப்படுகிறது.அந்த கிணறே இன்று  அங்கு காணப்படும் Chalice Well என ஒரு புராணக்கதையும் உண்டு.அகல்வாராய்ச்சியாலர்களின் கருத்துக்கு அமைய இங்கு காணப்படும் GLASTONBURY ABBEY என்ற ஆலயம் எகிப்தின் பிரமிட்களை கட்டப் பயன்பட்ட கேத்திர கணித முறையே இங்கும் பயன்பட்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.
GLASTONBURY ABBEY.
அசல் GLASTONBURY.
இன்று இந்த இடம் கிறிஸ்தவர்களின் புனிதப் பிரதேசமாக இருந்தாலும் இன்றும் இங்கு கிறிஸ்தவத்துக்கு முன் பின்பற்றப்பட்டு வந்த எல்லா விதமான மாய மந்திர சடங்குகள் வருடாவருடம் நடைபெற்றே வருகிறது.
Glastonbury Festival இல் பிரமிட்டின் ஆதிக்கம்.
 ஒலிம்பிக் ஸ்டேடியத்துக்கு முன்னாள் Glastonbury Tor வைக்கப்பட்டதில் நமக்குப் புரியாத விசித்திரமான விஷயங்கள் அடங்கியுள்ளது என்பது உறுதி,ஏனெனில் அந்த இடம் அன்று முதல் இன்று வரை மாய மந்திர சடங்குகளுக்கு பிரசித்திபெற்ற இடம் என்பதால்.

கிராமத்து மக்கள் வேலை செய்துகொண்டு மேபோலை (Maypole) சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்து எழும்பும் ஒரு சிறுவன் ஆங்கிலக் கவிஞ்சன் வில்லியம் ப்ளேக் அவர்களின் கவிதை ஒன்றை படித்தபடி எழுந்து வருகிறான்.இந்த கவிதை அவரின் Jerusalem - The Emanation of the Giant Albion என்ற நூலில் இடம்பெற்ற ஒன்றாகும்.

ஞானமார்க்கம் (Gnosticism), Druid (செல்டிக் மத போதகர்கள் ) மற்றும் பிரீமேசனரி போன்ற விசித்திரக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கவிஞ்சர் வில்லியம் ப்ளேக் பிரித்தானிய இலக்கிய உலகில் எப்பவும் ஒரு தூரநோக்குள்ள கலைஞ்சராக பார்க்கப்படுகிறார்.அவரது சில படைப்புக்கள் கிறிஸ்தவத்துடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் பல படைப்புக்கள் புரியாத விசித்திரமான கொள்கைகளை அடிப்படையாக கொண்டிருந்தன.   இவரின்    "ஜெருசலம் " என்ற படைப்பு ஜீசஸ் அவரது மாமாவான ஜோசப்புடன் Glastonbury வந்ததாக கூறப்படும் உறுதிப்படுத்தப்படாத புராணக்கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

அந்த கவிதை வரிகள் ஜீசஸ் அவர்கள் தனது மாமாவுடன் இங்கு வந்து ஜெருசலத்தை இந்த சாத்தானிய இருண்ட ஆலைகளுக்கு மத்தியில் நிறுவியிருந்தால் என கேட்கிறது.இப்படி அந்த கவி வரிகள் ஒலித்துக்கொண்டிருக்கும் போது காட்சிகள் மாறுகின்றன.பசுமை நிறைந்த இங்கிலாந்தின் நிலங்களில் அந்த கவி வரிகள் குறிப்பிடும் சாத்தானிய இருண்ட ஆலைகள் தோன்றுகின்றன.அத்துடன் துவங்குகிறது தொழில்புரட்சி தொடர்பான காட்சிகள்.

தொழில் புரட்சி

அந்த கவிவரிகள் வசிக்கப்பட்டதன் பின், இங்கிலாந்தின் பசுமையான பச்சைப்பசெலான நிலங்களில் காலடி வைக்கின்றனர் நீண்ட தொப்பிகளை அணிந்த ஒரு குழுவினர்.அக்குழுவினர் அந்த நிலங்களில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை துவங்குகின்றனர்.
ஒருவருக்கொருவர் கைகளைக் குலுக்கிக் கொள்ளும் அந்த குழுவினர் தொழில் புரட்சியை ஒருங்கிணைக்கின்றனர்.அந்த நீண்ட தொப்பிகளை அணிந்த குழுவினரை Isambard Kingdom Brunel என்றழைக்கப்படும் சிவில் இஞ்சினியர் வழிநடத்துகிறார்.

Isambard Kingdom Brunel போன்று சித்தரிக்கப்பட்ட ஒருவர் Glastanbury Tor அருகிலிருந்து கொண்டு ஷேக்ஸ்பியரின் The Tempest பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு ஓக் மரம் நிலத்திலிருந்து வெளியாகி வருகிறது அதனுடன் சேர்த்து நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் Glastanbury Tor இன் அடியிலிருந்து வெளியாகின்றனர்.

இந்த காட்சியில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய மிக முக்கியமான மூன்று அம்சங்கள் இருக்கின்றன.

    கிங் ஆர்தர் புராணக்கதையில் Annwn என்றழைக்கப்படும் பாதாள உலகுக்கு நுழைவு Glastonbury Tor இன் மேலால் என்பது,

    தொழில் புரட்சி பற்றிய இந்த நிகழ்வுக்கு விழ ஏற்பாட்டுக் குழுவினர் வைத்த அதிகார்வபூர்வமான பெயர் " Pandemonium " ஆகும்.ஆங்கில எழுத்தாளர் John Milton எழுதிய " Paradise Lost " என்ற காவியத்தில் வரும் நரகத்தின் தலைநகரமே இந்த " Pandemonium " ஆகும்.இதன் மூலம் அவர்கள் கூறவரும் தகவல் ஆங்கில கவி வில்லியம் ப்ளேக் குருப்பிட்டது போல் இங்கிலாந்து ஒரு புதிய ஜெருசலம் ஆக மாற்றமடையாது மாறாக அது இந்த பூமியின் நரகமாகவேமாறும் என்றா ?

    உலகில் காணப்பட்ட முடியாட்சிகளை கவிழ்த்துவிட்டு அந்த நாடுகளை தொழில் புரட்சியின் பக்கம் கொண்டு சென்றவர்கள் யாரெனில் உலகின் மிக பலம்வாய்ந்த இரகசிய சமூகங்களான Orient Freemasons மற்றும் Bavarian Illuminati போன்றவையாகும்.18 ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சிக்குப் பிற்பாடு உலக அரங்கில் பல சமூக கலாச்சார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 இன்னும் சில மர்மங்கள்....
மேலிருந்து பார்க்கும் போது தெரியும் பாரிய ஒற்றைக் கண்.

ARTICLE FROM TAMILKHILAFA.BLOGSPOT.COM  




சாமிரியின் தங்கக் காளையும் பண்டைய எகிப்தும்.
 Exodus என்பது யூதர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத் வேதத்தின் இரண்டாவது  நூலாகும்.இந்த நூலே அவர்கள் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் எப்படி இருந்தார்கள் என்பது பற்றி கூறுகிறது.எகிப்தை ஆண்ட பாரோக்கள் இஸ்ரவேலர்களை அடிமையாக பயன்படுத்தி வந்தனர்.அப்படிப்பட்ட சமூகத்துக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க அல்லாவின் புறத்திலிருந்து வந்தவரே ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளைக் கொண்டு மூஸா நபியவர்கள் தனது சமூகத்தை பரோக்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தார்.
சாமிரியின் தங்கக் காளை
 யூதர்களின் இரண்டாவது நூலான Exodus இல் குறிப்பிடப்பட்டுள்ளதும் இஸ்லாமியர்களின் திருக் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான மிக முக்கியமான சம்பவமே சாமிரியின் தங்கக் காளை  பற்றிய சம்பவமாகும்.அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் எகிப்திய ஆட்சியாளர்களிடமிருந்து யூதர்களை காப்பாற்றிய மூஸா (அலை) அவர்களின் கட்டளைக்கு அச்சமூகம் காது கொடுக்காமல் சாமிரியின் பேச்சில் மயங்கி காளை ஒன்றை   வணங்கினர்.இப்படிப்பட்ட ஒரு நிலைமை உருவாக மிக முக்கியமான காரணம் மூஸா நபியவர்கள் அவர்களுக்கு போதித்த ஒரு கடவுட் கொள்கையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.இதனால் அவர்கள் உருவ  வழிபாட்டின் பக்கம் மிக இலகுவாக சாய்ந்தனர்.

இது பற்றி திருக் குர்ஆன் இப்படி கூறுகிறது.

"நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்."

''நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே'' (என்றும் கூறினார்)."

''அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்'' என்றும் அவர் கூறினார்."

சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
(138-140)
ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள்  அவ்வளவு எச்சரித்தும் அறிவுரை வழங்கிய போதிலும் அவரின் பேச்சைக் கேட்காத இஸ்ரவேலர்கள் தொடர்ந்தும் அவரின் பேச்சை புறக்கணித்து வந்தனர்.ஹஸ்ரத் மூசா (அலை) அவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வை சந்திக்க தூர் சினை மலைக்கு சென்ற நேரம் பார்த்து அந்த சமுகத்தில் இருந்த சாமிரி என்பவன் அவர்களை வழிகெடுத்து விடுகிறான்.அவன் ஒரு காளை ஒன்றின்  சிலையை செய்து அதை இஸ்ரவேலர்களுக்கு வணங்குமாறு கூற,அவர்களும் அதை வணங்க துவங்குகின்றனர்.

இது பற்றி திருமறையின் சூரதுத் தாஹா இப்படி கூறுகிறது.

''நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்'' என்று (அல்லாஹ்) கூறினான்.

"ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து ''என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?'' (என்றார்).

 ''உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்'' என்று அவர்கள் கூறினார்கள்".

"பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் ''இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்'' என்று சொன்னார்கள்.

( ஸூரத்துத் தாஹா 85 - 88 )

ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தில் வாழ்ந்த ஒரு சில இஸ்ரவேலர்களின் இந்த மாறுபட்ட போக்குக்கு காரணம் என்ன ? ஒரு சிலையின் முன் தம் சிரத்தை பணியவைத்து வணங்க அவர்களை தூண்டியது என்ன ? அதற்கு வழியமைத்துக் கொடுத்த காரணம் என்ன ?

உருவ வழிபாட்டில் எந்தவிதமான நம்பிக்கையும் அற்ற ஒரே ஒரு இறைவனை மட்டும் வணங்கும் ஒரு சமூகம் திடீரென உருவ வழிபாட்டை எப்படி ஏற்றுக் கொண்டது ?

இஸ்ரவேலர்கள் என்பது ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலம் முதல் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்த ஒரு சமூகமாகும்.இவர்களுக்கு " இஸ்ரவேலர்கள் " அல்லது " இஸ்ரேலின் குழந்தைகள் " என்று பெயர் வரக் காரணம் ஹஸ்ரத் யஹ்கூப் (அலை ) அவர்களாகும்.இவர் ஹஸ்ரத் இப்ராஹீம் அவர்களின் பேரராவார்.ஹஸ்ரத் இப்ராஹீம்,ஹஸ்ரத் இஸ்ஹாக் மற்றும் ஹஸ்ரத் யஹ்கூப்  போன்ற நபிமார்களிடமிருந்து பெற்ற ஓரிறைக் கொள்கையை இஸ்ரவேலர்கள் பாதுகாத்து வந்தனர்.ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களின் காலப்பகுதியில்தான் இஸ்ரவேலர்கள் எகிப்தில் பெருமளவில் குடியேறினர்.அப்ப்தும் அவர்கள் ஓரிறைக் கொள்கையை பற்றிப் பிடித்தவர்களாகவே நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர்.இஸ்ரவேலர்கள் ஓரிறைக் கொள்கையை பின்பற்றிய போது அப்போதைய எகிப்து சிலை வணக்கத்தில் மூழ்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sculpture of Hathor as a cow, with all of her symbols, the sun disk, the cobra, as well as her necklace and crown.
 சில இஸ்ரேலியர்கள் பசு வணக்கத்தில் ஈடுபட தாக்கம் செலுத்திய மிக முக்கியமான விடயம் அவர்கள் வாழ்ந்த பண்டைய எகிப்திய சமூகமாகும்.நபி மூஸா (அலை) தூர்சினாய் மலைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை சந்திக்க போனபோது இஸ்ரேலியர்கள் வணங்கிய தங்கக் காளை  பண்டைய எகிப்தியர்கள் வணங்கிய HATHOR என்ற பெண் தேவதையின் நகலாகும்.எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி அன்பு இசை சந்தோசம் அழகு மற்றும் தாய்மை என்பவற்றுக்கு பொறுப்பான கடவுள்தான் இந்த HATHOR ஆகும்." Too Long In The Sun " என்ற நூலின் ஆசிரியரான Richard Rives என்பவரின் கருத்துப்படி,
HATHOR மற்றும் APHIS எகிப்தியர்களின் பசு மற்றும் காளைக் கடவுள் என்பவை சூரிய வணக்கத்தின் பிரதிநிதிகளாவர்.


சில இஸ்ரேலியர்களின் மீது பண்டைய எகிப்திய மதத்தின் தாக்கம் படிப்படியாகவே ஏற்பட்டது.இஸ்ரவேலர்களை பிரவ்னின் அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்த மூஸா நபியவர்களிடம் அவர்கள் கேட்ட முதல் விடயம் பற்றி அல்லாஹ் திருமறையின் சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) இல் இப்படி கூறுகிறான்.

"நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்."
(சூரத்துல் அஃராஃப் : 138)
இப்படி கேட்ட அந்த இஸ்ரேலிய சமூகம் இன்னுமொரு படி மேலே சென்று மூஸா நபியவர்களின் இப்படியொரு முட்டாள்தனமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர்.அந்த கோரிக்கை பற்றி திருமறையின் சூரத்துல் பகரா (பசுமாடு) இப்படி கூறுகிறது.
"இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது."
(சூரத்துல் பகரா : 55)
திருமறையின் இந்த வசனத்தை நாம் நன்றாக ஆய்வு செய்யும் போது,இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் அதனை விளங்கிக் கொள்ளகூடிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை அதனாலே அவர்கள் ஒன்றாக வாழ்ந்த சமூகமான பண்டைய எகிப்தியர்களின் தாக்கம் அவர்களிடம் ஏற்பட்டது.

பழைய ஏற்பாட்டிலும் திருக் குரானிலும் கூறப்பட்டுள்ள இந்த சம்பவம் நபி மூஸா (அலை) அவர்கள் தூர் சினாய் மலைக்கு அல்லாஹ்வை சந்திக்க சென்றிருந்த சமயம் இடம்பெற்றது.தவ்ராத்தில் இந்த தங்கக் காளை  நபி ஹாரூன் (அலை) செதுக்கியதாக கூறப்படுகிறது.ஆனால் திருக்குர்ஆன் இதனை மறுக்கிறது.திருக்குர்ஆன் இந்த சிலை சாமிரி என்பவனால் செதுக்கப்பட்டதாக கூறுகிறது.அல்லாஹ்வை சந்திக்கச் சென்ற மூஸா (அலை) அவர்கள் நீண்ட நாட்களாக (40 நாட்கள்) திரும்பாத நிலையில் சாமிரி என்பவன் முன் வந்து மூஸா காணாமல் போய்விட்டார் அவர் திரும்பி வரமாட்டார் எனக் கூறிய அவன் பிரவ்னின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்று வரும் போது கொண்டு வந்த தங்க நகைகளையும் பனி இஸ்ரவேலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சில தங்க நகைகளையும் சேர்த்து உருக்கி ஒரு தங்க காளைக்கன்றுச் சிலை ஒன்றை உருவாக்கி இது தான் நம் கடவுள் இதை வணங்குங்கள் என்றான்.மேலும் இதுதான் மூஸாவின் கடவுளும் கூட இதை அவர் மறந்து விட்டார் என இஸ்ரவேலர்களிடம் கூறினான்.அதை மூஸா (அலை) அவர்களின் சகோதரர் ஹாரூன்(அலை) எவ்வளவு தடுத்தும் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து செய்து வந்தனர்.ஹாரூன் (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களை தடுத்தது பற்றியும் அவர்கள் அதை மறுத்தது பற்றியும் திருக்குர்ஆன் சூரத்துல் தாஹாவில் இப்படி கூறுகிறது.

இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, ''என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் 'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்'' என்று கூறினார்.

''மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்'' என்று அவர்கள் கூறினர்.
(சூரத்துல் தாஹா 90-91)

தூர் சினாய் மலையிலிருந்து அவசரமாக திரும்பி வந்த நபி மூஸா (அலை) அவர்கள் தம் சமூகம் வழிகேட்டில் இருப்பதைப் பார்த்து கோபம் கொண்டு தம் சகோதரரான நபி ஹாரூன் (அலை) அவர்களிடம் கோபம் கொண்டு இவ்வாறு கேட்கிறார்கள்.

(மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) ''ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.

''நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?

''(இதற்கு ஹாரூன்;) ''என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்'' என்று கூறினார். 

(சூரத்துல் தாஹா 92-94)

பிறகு இதற்கேல்லாம் காரணமாக இருந்த சாமிரியைப் பார்த்து நபி மூஸா (அலை) அவர்கள் 

''ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?'' என்று மூஸா அவனிடம் கேட்டார்.
(சூரத்துல் தாஹா - 95 )

நபி மூஸா (அலை) அவர்களின் கேள்விக்கு சாமிரி இவ்வாறு பதிலளிக்கிறான்.

''அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று'' என (ஸாமிரீ பதில்) சொன்னான். 
(சூரத்துல் தாஹா - 96 )
 "பனு இஸ்ராயில்களில் மற்றவர்கள் பார்க்காத ஒரு விடயத்தை நான் பார்த்தேன்.அத்தூதர் (ஜிப்ரயீல்) காலடி மண்ணிலிருந்து ஒரு பிடி எடுத்து தங்கக் காளைச் சிலை மீது போட்டேன்.ஏனென்றால் அந்த தூதர் காலடி பட்ட இடமெல்லாம் புற்பூண்டுகள் பசுமையாக வளர்வதைப் பார்த்தேன்."என்று தான் அச்சிலையை இயங்கச்செய்த விதத்தை விளக்கினான்.மற்றவர்கள் பார்க்க இயலாத அதாவது ஜிப்ரயீல் (அலை) அவர்களை சாமிரி எப்படி பார்த்தான்.யார் இந்த சாமிரி ? 

இந்த சாமிரி என்பவனின் இயற்பெயர் மூசா பின் சபர் ஆகும்.சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய இவன் மூஸா (அலை ) அவர்களின் ஒன்று விட்ட சகோதரன் என்றும் கூறப்படுகிறது.இவன் காளை மாட்டை வணங்கும் மக்களான பஜர்மா கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும் இவன் ஸமாரா என்ற ஊரைச் சேர்ந்தவன் என்றும் தப்சீர் இப்னு கசீர் கூறுகிறது.
ARTICLE FROM TAMILKHILAFA.BLOGSPOT.COM   



THE KABBALAH - பண்டைய யூத சூனியக் கலை.
The Hiram Key: Pharaohs, Freemasons, and the Discovery of the Secret Scrolls of Jesus

கிறிஸ்தோபர் நைட் மற்றும் ரோபர்ட் லோமஸ் என்ற இரு பிரீமேசன்களால் எழுதப்பட்ட The Hiram Key என்ற நூல் பிரீமேசன் பற்றியும் அதன் ஆரம்ப கால வரலாறு பற்றியும் பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றது.இந்த இரு ஆசிரியர்களினதும் கூற்றுப்படி FREEMASONARY என்பது KNIGHT TEMPLARS இன்
அடிச்சுவடுகளை பின்பற்றி தொடர்ந்து வரும் ஒரு அமைப்பாகும்.மேலும் இவர்கள் இந்த நூல் மூலம் KNIGHT TEMPLARS இன் ஆரம்ப வரலாற்றையும் அதன் கொள்கைகளில் தாக்கம் செலுத்திய ஏனைய நம்பிக்கைகளையும் விலாவாரியாக ஆராய்ந்து எழுதியுள்ளனர்.

இவ்விருவரின் ஆய்வுப்படி கிருஸ்தவ மதத்தை அடிப்படையாகக் கொண்டு அம்மதத்தைக் காக்க என உருவான இயக்கம் அது ஜெருசலத்தில் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டிய போது  அது அதன் அடிப்படை கொள்கைகளிலிருந்து தடம்புறலத் துவங்கியது.ஜெருசல நகரில் இருந்த TEMPLE OF SOLOMAN என்ற ஆலயத்தை  இவர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படும் விடயமே இந்த மாற்றத்துக்கு காரணமாக இருந்தது.மேல் கூறப்பட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு அமைய புனித ஜெருசல நகருக்கு வரும் கிருஸ்தவ யாத்ரீகர்களின் பாதுகாப்பாளர்கள் என்ற போர்வையில்  அவர்கள் ஈடுபட்ட விடயங்கள் கிருஸ்தவ மதத்துக்கு முற்றிலும் மாற்றமான விடயங்களாகும்.

".......அவர்கள் ஜெருசலம் வரும் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு அளித்தார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.ஆனால் அவர்கள் இரண்டாம் ஆலயத்தில் அதாவது Herods Temple இன் இடிபாடுகளுக்கு கீழே பரவலான முறையில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன."
(REF : Hiram Key Page 37) 
இரண்டாம் ஆலயத்தின் மாதிரி படம்.
Hiram Key நூலின் எழுத்தாளர்கள் மட்டுமல்ல Gaetan Delaforge என்ற புகழ்பெற்ற பிரஞ்சு வரலாற்றாசியரும் இது பற்றி பல ஆதாரங்களை முன்வைக்கிறார்.

Knight Templar இயக்க உறுப்பினர்கள் இரண்டாம் ஆலயத்தின் இடிபாடுகளுக்கிடையில் சில நினைவுச் சின்னங்களையும் கையெழுத்துச் சுவடிகளையும் தேடி பாரிய அளவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.அவர்கள் அவற்றை தேட ஒரு காரணமும் இருந்தது.அவற்றில் பண்டைய யூத மற்றும் எகிப்திய கலாச்சாரங்களின் இரகசியமான மிகவும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறைகள் அடங்கி இருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.
(REF : Templar Tradition In The Age Of Aquarius - Gaetan Delaforge)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் Royal Engineers சார்பாக Charles Wilson என்பவர் ஜெருசல நகரில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டார்.அவரின் கருத்துப்படி ரோம ஆக்கிரமிப்பின் போது அழிந்து போன Soloman Temple பற்றி ஆராய்ச்சி செய்யவே Knight Templar குழுவினர் ஜெருசலத்துக்கு வந்தார்கள் எனவும்,தான்  அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் போது Knight Templar களால் பயன்படுத்திய கருவிகளையும் அவர்கள் அந்த இடத்தில் ஆராய்ச்சி செய்ததற்கான தடயங்களையும் கண்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

Knight Templar இயக்கத்தினர் ஜெருசல நகரில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள் அவர்களுக்கு பயனளித்ததாகவும் அதன் மூலம் அவர்கள் உலகை பார்க்கும் போக்கை மாற்றிக் கொண்டார்கள் என Hiram Key இன் ஆசிரியர்கள் வாதிடுகிறார்கள்.மேலும் பல ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்துக்கு அமைய கிருஸ்தவ உலகத்திலிருந்து கிறிஸ்தவத்தை தாங்கி ஜெருசல நகருக்கு வந்தவர்கள் கிறிஸ்தவத்துக்கு முற்றிலும் மாற்றமான சடங்குகளில் இடுபட ஒரு பலமான காரணம் இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.

பல ஆராய்ச்சியாளர்களின் பொதுவான கருத்துக்கு அமைய "அந்த பலமான காரணம்" தான்  "THE KABBALAH "  என்ற பண்டைய யூத சூனியக் கலை.

KABBALAH என்பது யூத மதத்தின் ஒரு விசித்திரமான ஒரு கிளை என்கிறது அகராதிகள் மற்றும் கலைக்களஞ்சியங்கள்.ஆனால் நாம் இந்த விடயத்தைப் பற்றி இன்னும் ஆழமாக ஆய்வு செய்யும் போது இந்த விசித்திரமான சடங்கு முறைகளில் யூதர்களின் தவ்ராத் வேதம் அருளப்பட முன் நடைமுறையில் இருந்த உருவ வழிபாட்டு முறைகளும் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கி நாட்டின் பிரீமேசன்களில் ஒருவரான Murat Ozgen என்பவர் எழுதிய What Is Freemasonry ? What Is It Like ?  என்ற நூலில் KABBALAH  பற்றி இவ்வாறு கூறுகிறார்.

" KABBALAH எப்போது எங்கிருந்து எப்படி உருவானதென்பது பற்றி எங்களுக்கு அவ்வளவு தெரியாது.ஆனால் அது தனித்துவமான வாழ்வின் மெய்ப்பொருளை அறியக் கூடிய யூத மதத்துடன் தொடர்புள்ள ஒரு விசித்திரமான வாழ்வியல் தத்துவம்.இத் தத்துவம் யூத மதத்தில் ஏற்றுக் கொல்லப்பட்ட ஒரு விடயம்.ஆனால் இந்த KABBALAH வில் யூத மதத்துக்கு முற்பட்ட காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறைகளும் அடங்கியுள்ளன."
(REF: What Is Freemasonry ? What Is It Like ? P: 298,299 )

பிரஞ்சு வரலாற்றாசிரியர் Gogenot Des Mousseaux என்பவரின் விளக்கத்துக்கு அமைய KABBALAH கலையில் யூத மதத்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட சில முக்கியமான சடங்குகளும் அடங்கியுள்ளன.
 யூத வரலாற்றாசிரியரான Theodore Reinach என்பவற்றின் கருத்துக்கு அமைய KABBALAH என்பது யூத மதத்தில் மிக நுட்பமாக புகுந்த ஒரு கொடிய விஷம்.அது முழு யூத மதத்தையும் நாசப்படுத்தி விட்டது என்கிறார்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றிவரும் பல மந்திர சடங்குகளில் KABBALAH என்ற இந்த கலையே அடித்தாலமாக விளங்குகிறது.சில யூத ரப்பிகள் கூட இந்தக் கலை மந்திர சக்திகளைக் கொடுக்கும் என நம்பி கற்றும் உள்ளார்கள்.யூத மதம் சாராத இன்னும் பலரும் இந்த கலையை கற்றார்கள்.வரலாற்றின் மத்திய காலப் பகுதியின் இறுதிக் கால கட்டங்களில் இந்த ரகசிய போக்குடைய கொள்கைகள் ஐரோப்பாவில் காலடி எடுத்து வைத்தது.

ஓரிறைக் கொள்கையை சுமந்து கொண்டு தவ்ராத் வேதம் அருளப்பட்டு மூஸா (அலை) அவர்களால்  வழிநடத்தப்பட்ட யூத மதம் இந்த கலையின் ஆரம்ப அச்சாணி என்பது ஆச்சரியமான விடயம்.உண்மையில் KABBALAH எனும் இந்தக் கலையில் யூத மதத்துக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத பல சடங்குகள் உள்வாங்கப்பட்டு அது யூத மார்க்கம் ஆக்கப்பட்டதே உண்மை. 

அப்படியெனில் இந்த கலையின் ஆரம்பப் புள்ளி எங்கே உள்ளது ???

ARTICLE FROM TAMILKHILAFA.BLOGSPOT.COM  


ப்ரீமேசனரி - சூனிய இரகசிய சமுதாயம்.
 ப்ரீமேசனரி ( FREE MASONARY ) பல நூற்றாண்டுகளாக உலகில் பல்வேறு கோணங்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.இந்த பயங்கர இரகசிய சமுதாயத்தைப் பற்றிய பல்வேறு விடயங்கள் இதனைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் ஆராயப்படும்.

KNIGHT TEMPLARS  முதல் பண்டைய எகிப்து வரை. 

ப்ரீமேசனரி பற்றி எழுதும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்துக்கு அமைய இந்த இரகசிய சமுதாயத்தின் ஆரம்பம் சிலுவை யுத்தம் வரை செல்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டில் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டாலும் இந்த இரகசிய சமுதாயத்தின் வேர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடந்த சிலுவை யுத்தங்கள் வரை செல்கிறது.இது முதன்முதலில் இங்கிலாந்திலே அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.சிலுவை யுத்தம் என்ற பேரில் பலஸ்தீனை மீட்க கிருஸ்தவர்கள் புறப்பட்டாலும் அதற்கு முக்கியமான காரணம் பொருளாதார ஆதாயமேயாகும்.ஏனெனில் சிலுவை யுத்தம் ஆரம்பிக்கும் போது ஐரோப்பா வறுமையிலும் தும்பத்திலும் புரண்டு கொண்டிருக்க இஸ்லாமிய மத்திய கிழக்கு அறிவிலும் செல்வத்திலும் செழித்து காணப்பட்டது என்பதே ஐரோப்பியர்களை இஸ்லாமிய உலகம் மீது வெகுவாக ஈர்க்க காரணமாக இருந்தது.

council of clermont

ஐரோப்பிய மன்னர்களின் இந்த பொருளாசையை பூர்த்தி செய்து கொள்ள அந்த மன்னர்கள் கிருஸ்தவ மதத்தின் பெயரில் சிலுவைப் போரில் குதித்தனர். ஐரோப்பிய மன்னர்களின் பொருளாசையை நிறைவு செய்து கொள்ள நடந்த போர்களில் சம்பந்தம் இல்லாமல் சிலுவைகள் பயன்பட்டன.

சிலுவை யுத்தத்தின் ஆரம்பகர்த்தா போப் ஏர்பன் II ஆவார்.கிருஸ்தவர்கள் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த அமைதிவாதக் கோட்பாட்டை கைவிட்டு விட்டு 1095 இல் council of clermont இல் சிலுவை யுத்தத்தை பிரகடனம் செய்தார்.சிலுவை யுத்தத்தின் வெளிப்படையான நோக்காமாக முன்வைக்கப்பட்டது முஸ்லிம்களின் கைகளிலிருந்து புனித பூமியை கைப்பற்றுவதேயாகும்.ஆனால் அதை தாண்டி பாரிய உள்நோக்கம் ஒன்று இருந்தது.இப்படி பிரகடனம் செய்யப்பட யுத்தத்துக்கு இரண்டு தொழில் முறை போர் வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கில் சாதாரண மக்கள் சேர்த்துக் கொல்லப்பட்டனர்.

பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய போப் ஏர்பன் II இன் இந்த சிலுவை யுத்த பிரகடனத்துக்கு ஒரு காரணம் அவருக்கு போப் பதவி மேல் இருந்த ஆசையாகும் , இப்படி புனித பூமி கதையை மக்களிடம்ஸ் சொல்லி அவர் தனக்கு மக்களிடையே ஆதரவை திரட்டவே சிலுவை யுத்தத்தை பிரகடனம் செய்தார்.இதன்மூலம் தனக்கு போட்டியாக உள்ள மற்ற பதியார்களை  மட்டம் தட்டப்பார்த்தார்.மேலும் ஐரோப்பிய அரசர்கள் இளவரசர்கள் உயர்குடியினர் என்போர் போப்பின் இந்த யுத்த பிரகடனத்தை சந்தோசமாக வரவேற்றனர்.இவர்கள் அனைவரினதும் நிலம் பிடிக்கும் நோக்கம் கிருஸ்தவ மதத்தின் பெயரில் யுத்தமாகா அரங்கேறியது.

University Of Illinois இன் பேராசிரியர் Donald Queller இன் கருத்துக்கு அமைய பிரெஞ்சு Knights களுக்கு அதிக நிலம் தேவைப்பட்டது,இத்தாலிய வியாபாரிகள் மத்திய கிழக்கு துறைமுகங்களில் தமது வர்த்தகத்தை விரிபுபடுத்த ஒரு தருணத்தை பார்த்துக் கொண்டிருந்தன,ஐரோப்பிய நாடுகளில் தாண்டவமாடிய வறுமையிலிருந்து தப்பித்துக் கொள்ள சாதாரண மக்கள் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர்.இப்படி எல்லா காரணங்களும் இந்த யுத்தத்தை முன்னெடுக்கவே சார்பாக இருந்தது.சிலுவையின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராசைக்கார யுத்தம் நடைபெற்ற வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு மரணத்தை தழுவச் செய்தது

ஜெருசல முற்றுகையும் வீழ்ச்சியும்.

சிலுவை வீரர்களின் மிக நீண்ட கடினமான மற்றும் படுகொலைகள் கொள்ளைகள் நிறைந்த ரத்தவாடை எங்கும் அடித்த பயணத்தின் முடிவு 1099
புனித நகரான ஜெருசலத்தில் நிறைவு பெற்றது.ஐந்து வார முற்றுகையின் பின் ஜெருசலம் சிலுவை வீரர்களின் படைகளிடம் வீழ்ந்த்தது.சிலுவை வீரர்களிடம் வீழந்த புனித ஜெருசல நகரம் சின்னாபின்னமாகிப் போனது.அங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் யூதர்களும் கிறிஸ்தவத்துக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத முர்க்கக் குணமும் பொருளாசையும் நிறைந்த சிலுவை வீரர்களின் வாள்களுக்கு இரையானார்கள்.இவர்கள் புனித நகரை ஆக்கிரமித்து வெறும் இரண்டு நாட்களுக்குள் 40000 மேற்பட்ட முஸ்லிம்களை படுகொலை செய்தனர்.இதன் பின்பு இந்த சிலுவை வீரர்கள் ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனத்திலிருந்து Antioch வரை எல்லைகளைக் கொண்ட ஒரு லத்தீன் ராஜ்ஜியம் ஒன்றை அங்கு நிறுவினார்கள்.


 The Templars அல்லது Soldiers Of Chirst அல்லது Soldiers Of Temple Of Solomon
இப்படி பல பெயர்கள் இவர்களுக்கு உள்ளன.ஆனால் பொதுவாக பாவிக்கப்படும் பெயர்தான் Knight Templars.இந்த இயக்கம் 1119 இல் அதாவது ஜெருசலம் சிலுவை வீரர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின்பே நிறுவப்பட்டது.இந்த இயக்கம் இரு பிரஞ்சு Knights களால் ஆரம்பிக்கப்பட்டது.Hugues De Payens மற்றும் Godfrey De Saint Omer என்ற இரு பிரெஞ்சு Knights களால் ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் முதலில் சிறிய அளவிலேயே இயங்கியது,ஆனால் குறுகிய காலத்தில் அதன் வளர்ச்சி நினைத்ததை விட அதிகமாகவே இருந்தது.இவர்கள் தங்களை "ஏழை வீரர்கள்" என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டனர்.ஆனால் நிலைமையோ வேறுவிதமாக  இருந்தது.இவர்கள் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தர்களாக மாறினார்கள்,அதற்கு காரணமும் இருந்தது.ஜெருசல நகரம் சிலுவை வீரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததன் பின் ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கில் யாத்திரிகர்கள் புனித நகரை தரிசிக்க வந்தனர்.இந்த யாத்திரை முழுவதும் இந்த Knight Templars ஸின் கையிலேயே இருந்தது.இதனை கொண்டு அவர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறினார்கள்.

கி.பி. 1162 இல் மன்னர் இரண்டாம் ஹென்றி ஜெருசலத்தில் உள்ள சிலுவை வீரர்களுக்கு உதவும் பொருட்டு மக்களிடம் வரி வசூலித்து வந்தார்.இப்படி வசூலிக்கப்பட்ட பெரும் தொகையானா பணம் Knight Templars ஊடாகவே வீரர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.Knight Templars இதன்போது  நவீன வங்கி முறைக்கு அடித்தாளம் இட்டனர்.காசோலை மற்றும் கடன் முறைமைகள் இக்காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.Micheil Bigent மற்றும் Richard Liegh என்ற இரு பிரித்தானிய வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய மத்தியகாலத்தில் முதலாளித்துவத்தை நிறுவியவர்கள் இந்த Knight Templars.கிருஸ்தவ மதத்தில் வட்டி தடை செய்யப்பட்டு இருந்தாலும் இவர்கள் தாங்களின் வங்கி முறைமைக்கு வட்டியை அடிப்படையக்கிக் கொண்டனர்.  

இஸ்லாமிய உலகின் தலைசிறந்த தளபதி சலாஹுத்தீன் அய்யூபி அவர்களால்  கி.பி.1187 இல் ஜெருசலம் சிலுவை வீரகளிடமிருந்து மீட்டப்பட்டது.Battle Of Hattin என்று அழைக்கப்படும் 1187 இல் நடந்த அந்தப் போரில் 17000 க்கும் மேற்பட்ட சிலுவை வீரர்கள் இறந்தனர்.இதில் Knight Templars க்கும் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

இந்த போரில் Knight Templars க்கு கிடைத்த தோல்வி அவர்களுக்கு ஐரோப்பாவில் தமது ஆதிக்கத்தை பரப்ப ஒரு வாய்ப்பாக அமைந்தது.முதன்   முதலாக  இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்த நாடு பிரான்ஸ் ஆகும்,அதன் பின்பு ஒன்றன் பின்பு ஒன்றாக பல ஐரோப்பிய நாடுகள் இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

Knight Templar ஸின் அரசியல்ரீதியாக எழுச்சி ஐரோப்பிய மன்னர்களின் உள்ளத்தில் ஒருவித அச்சத்தைக் கொடுத்தது.எழுச்சி பெற்றுவரும் இந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க சில ஐரோப்பிய மன்னர்கள்  ஒரு  தருணம் வரும்வரை பார்த்திருந்ததனர்.ஜெருசலத்தில் Knight Templar ஸின் அதிகாரம் ஓங்கியிருந்த காலத்தில் அவர்கள் அங்கு இஸ்லாத்துக்கு முன் நிலவி வந்த விசித்திரமான போதனை முறைகளை கற்றுக்கொண்டுஅதனை வர்களின் நாளாந்த செயற்பாட்டில் இணைத்துக் கொண்டனர்.இது கிருஸ்தவ மதத்துக்கு  முற்றாக  மாறு செய்வதாகவே இருந்தது.மேலும் இவர்கள் அந்த விசித்திரமான போதனை முறைகளுக்கு சடங்குகளும் ஏற்பாடு செய்துவந்ததாகவும் வதந்திகள் பரவின.

கடைசியாக, இப்படிப்பட்ட ஒரு தருணம் வரும்வரை காத்திருந்த ஐரோப்பிய மன்னர்கள் செயலில் இறங்கி அவர்களை அதிர்க்க ஆரம்பித்தனர்.1307 இல் பிரெஞ்சு மன்னர் பிலிப்பே லே பெல் Knight Templar சின் அங்கத்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.சிலர் இந்த கைதுகளிலிருந்து தப்பித்து கொண்டாலும் பலர் கைது செய்யப்பட்டனர்.மிக நீண்ட நாட்களாக தொடர்ந்த விசாரணை மற்றும் சோதனைகளுக்குப் பிறகு Knight Templar இயக்க அங்கத்தவர்கள் குற்றவாளிகள்  என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அதன் பல அங்கத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அதன் தலைவன் Jaques De Moley இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு அடுத்த நிமிடமே பிரெஞ்சு அரச சபையாலும் தேவாலயத்தாலும் Knights Templar இயக்கம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது.அதோடு அவ்வியக்கம் இல்லாமல் போனது.

Knight Templar மீதான விசாரணையின் முடிவு அவ்வியக்கத்தின் முடிவாகவே அமைந்தது.அவ்வியக்கம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டாலும் அது உண்மையில் மறைந்து அழிந்து விடவில்லை.1307 இல் இடம்பெற்ற திடீர் கைதுகளிலிருந்து தப்பிய சில Knight Templar இயக்க அங்கத்தினர்கள் தன இயக்கத்தின் செயற்பாடுகளை மிக ரகசியமாக செய்து வந்தனர்.பல்வேறு வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்த இயக்கத்தின் அங்கத்தவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஐரோப்பிய நாடு ஸ்காட்லான்ட் ஆகும்.
பதினான்காம் நூற்றாண்டில் கத்தோலிக்க ஆலயங்களின் அதிகாரத்தை மதிக்காத ஒரே ஒரு நாடு ஸ்காட்லான்ட் ஆகும்.இவ்வியக்கத்தினர் ஸ்கொட்டிஷ் மன்னன் ராபர்ட் தி ப்ரூஸ் (Robert The Bruce) இன் பாதுகாப்பின் கீழ் தம் கொள்கைகளை மீள்நிர்மானம் செய்து வந்தனர். 
King Robert The Bruce
Knights Templar இயக்கம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டாலும் அது மரணிக்கவில்லை,அவர்களின் மாறுபட்ட தத்துவங்கள் கொள்கைகள் மற்றும் சடங்குகள் ப்ரீமேசநரி என்ற புனைப் பெயரில் தொடர்ந்தது நடந்துவந்தது.இன்றும் அது நடக்கிறது.இது மேற்கத்தைய பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையாகும்.


ARTICLE FROM TAMILKHILAFA.BLOGSPOT.COM    



துருக்கி:
 பமுக்கலெ வெந்நீரூற்றுகள் துருக்கி நாட்டின் மேற்கே டினிசிலி மாகாணத்தில் அமைந்துள்ளன. யுனெசுக்கோ அமைப்பு இவற்றை உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது
ஆற்றுப்பள்ளத்தாக்கு தான் பமுக்கலெயின் அமைவிடம். இவ்வெந்நீரூற்று 2700 மீட்டர் உயரமும் 600மீ அகலமும் 160மீ உயரமும் கொண்டது. இதிலிருந்து வெந்நீர் வெளியேறுகின்றது. பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் காணப்படும் இது, கால்சியம் கார்பனேட் அதிகளவு கொண்டிருப்பது குறிக்கவேண்டியது. எப்போதுமே இதனுடைய வெப்பநிலை 35 பாகையிலிருந்து 100 பாகை செல்சியசு வரை காணப்படும். இதன் நீர் சுண்ணாம்புக் கலவையை அதிகளவில் கொண்டிருப்பதால், நீர் பாய்ந்து வரும் பகுதிகளில் கனிமப் படிவுப்பாறைகள் (செடிமெண்ட்டரி (sendimentary) பாறைகள்) உருவாகின்றன. இப்பாறைகள் பார்ப்பதற்குப் பனிக்கட்டிகள் போன்றே தோற்றமளிக்கும். இதனை 'பஞ்சுக் கோட்டை' என்று அழைப்பர். மலையிலிருந்து 100மீ அடிப்பாகத்தில் இவை அமைந்துள்ளன.

நோய்களைக் குணமாக்கும் வல்லமை.

பமுக்கலெ, 17 நீரூற்றுக்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு வகையான வெப்பநிலையைக் கொண்டவை. இதில் நீராடினால் நோய்கள் குணமாகும் என ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதய நோய்கள், குருதிச்சுற்றோட்டச் சிக்கல்கள், உயர்குருதி அமுக்கம், நரம்பு சார்பான நோய்கள், வாத (வளிம) நோய்கள், கண் மற்றும் தோல் சார்ந்த நோய்கள், உடல் களைப்பு, மன உளைச்சல், சமிபாட்டுச் (செரிமானச்) சிக்கல்கள், குறைபாடுகள் ஆகியவற்றைக் குணமாக்கக் கூடிய சக்தி இவ்வெந்நீருற்றுக்கு உண்டு.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். 20ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இங்கு பல சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டன. இதனால் வெந்நீரூற்றுக்களின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இவ்வெந்நீரூற்றுக்களைச் சென்றடைய, பள்ளத்தாக்கின் கீழேயும் மேலேயும் பல வீதிகள் போக்குவரத்து வசதிகளுக்காக அமைக்கப்பட்டன. ஆனால் இவ்வீதியில் மோட்டார் ஊர்திகள் (தானுந்துகள்0 செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. இங்கேயுள்ள சுற்றுலா விடுதிகளை அகற்றி விட்டு, அவ்விடங்களில் செயற்கை முறையிலான நீச்சற் தடாகங்களை அமைக்க துருக்கியின் சுற்றுலாத்துறையினர் தீர்மானித்துள்ளனர். அது மட்டுமன்றி, இவ்வெந்நீரூற்றுக்களுக்குக் காலணிகளுடன் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. பமுகலெ வெந்நீரூற்றுக்களைப் பாதுகாக்க பற்பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Posted by Unknown
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.