ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் ‎பேராசிரியர்!‎
உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராகக் ‎கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்கப் ‎பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.‎
அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறைப் ‎பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் என்பவர் இயேசு முஸ்லிம் என்பதைத் ‎திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Was jesus a muslim? என்ற தனது புதிய ‎நூலில் அவர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.‎
இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலைத் துவக்குகிறார். ஆம்! ‎அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் ‎பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.‎

‎மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்த வகுப்பில் ஒரு மாணவி ‎எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர ‎மதங்களைக் குறித்தும் ஆராய முடிவெடுத்துள்ளார்.‎
‎“இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக ‎முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து ‎கூடுதலாக ஆராயத் தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.‎

ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியதாவது:‎

‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து ‎புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு ‎தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ‎ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான ‎இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் ‎இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என ‎நான் முடிவுசெய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார ‎பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.‎
‎ 
வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். ‎அதன் பின்னர் அவர் தனது உண்மையைத் தேடிய ஆராய்ச்சியைத் ‎தொடர்ந்தார் என ஃபாக்ஸ் சேனல் கூறுகிறது.‎
‎ 
ஏசு முஸ்லிமா? இல்லையா? என்பதை ஆராய நீண்ட ஆய்வு இவருக்கு ‎தேவைப்பட்டுள்ளது. ஆனால் பைபிளில் உள்ள சில வசனங்களை கீழே ‎தருகின்றோம். அவற்றை ஒருமுறை நீங்கள் வாசித்துப்பார்த்தாலே இயேசு ‎ஒரு முஸ்லிம்தான்; அவர் போதித்த மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை ‎இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக விளங்கிக் ‎கொள்வீர்கள்.‎
இயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாது; இயேசு கர்த்தர் அனுப்பிய ‎தூதர்தான்:‎
நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் ‎உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே ‎எனக்குக் கட்டளையிட்டார்.‎
யோவான் 12:49‎

இயேசுவால் சுயமாக யாரையும் ஆசிர்வதிக்க இயலாது :‎

20. அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து ‎அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் ‎பண்ணவேண்டும் என்றாள்.‎
‎21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ‎அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய ‎இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது ‎இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.‎
‎22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று ‎உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் ‎குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். ‎அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.‎
‎23. அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் ‎பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்;ஆனாலும், என் வலது ‎பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் ‎எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், ‎மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.‎
மத்தேயு 20 : 20 முதல் 23 வரை
தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை :‎
அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்திய ‎ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று ‎கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? ‎தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் ‎பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.‎
மத்தேயு 19 : 16, 17‎
‎ 
நித்திய ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையைக் கைக்கொள்ள ‎வேண்டும் என்று கூறிய இயேசு, அந்த கற்பனைகளில் பிரதானமான கற்பனை ‎எது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.‎

பிரதானமான கற்பனையை கைக்கொள்வோம் :‎

28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம் பண்ணுகிறதைக் கேட்டு, ‎அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் ‎வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.‎
‎29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான ‎கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ‎ஒருவரே கர்த்தர்.‎
‎30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ‎ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் ‎அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.‎
மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை
இயேசுவை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியம் செல்ல ‎முடியாது:‎
‎21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே ‎பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! ‎கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.‎
‎22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது ‎நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா?உமது நாமத்தினாலே ‎பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக ‎அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.‎
‎23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் ‎செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் ‎சொல்லுவேன்.‎
‎24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, ‎இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் ‎வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.‎
‎25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த ‎வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது ‎கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.‎
‎26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி ‎செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின ‎புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.‎
‎27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த ‎வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது ‎என்றார்.‎
‎28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் ‎வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் ‎போதித்தபடியால்,‎
‎29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.‎
மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை
‎ 
மேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும் இயேசுவின் வாயிலிருந்து ‎மொழிந்த சொற்கள்தான். அவை அனைத்தும் புதிய ஏற்பாட்டிலிருந்து ‎மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் இதைவிட ‎ஏராளமான வசனங்கள் உள்ளன. இந்த வசனங்களைப் படித்தாலே இயேசு ‎ஒரு முஸ்லிம். அவர் இஸ்லாம் சொல்லக்கூடிய ‎ஓரிறைக்கொள்கையைத்தான் தெள்ளத்தெளிவாக போதித்துள்ளார் என்பது ‎தெரிகின்றதா? இல்லையா?‎
‎ 
இதைக் கவனத்தில் கொண்டு கீழே உள்ள திருக்குர்-ஆன் வசனத்தைப் ‎படியுங்கள். இயேசுவின் மார்க்கம் இஸ்லாம்தான் என்பது இன்னும் ‎தெளிவாகும். இதைத்தான் நீண்ட ஆய்விற்குப் பிறகு அந்தப் பேராசிரியர் ‎கண்டுபிடித்துள்ளார். இதை முஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலேயே ‎சொல்லிவிடுவார்கள். அதுதான் வித்தியாசம்.‎

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் ‎பெயரால்....‎
‎1.அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!‎
‎2.அல்லாஹ் தேவைகளற்றவன்.‎
‎3.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.‎
‎4.அவனுக்கு நிகராக யாருமில்லை.‎
அல்குர்-ஆன் : அத்தியாயம் : 112‎

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.