கருணாநிதி, எடியூரியப்பா மற்றும் சவான்! ஊழலில் யார் பெரிய வல்லுனர்?

காங்கிரஸின் பாரபட்ச பிரச்சினையாக்கி வரும் முறை: மாநில முதன் மந்திரிக்கு, தன்னுடைய அதிகாரத்தில் / இச்சைக்கேற்ற முறையில், குறிப்பிடபட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப, நிலத்தை ஒதுக்கீடு செய்யலாம். குறிப்பாக, ஒரு மாநிலத்தில், அவ்வாறு காலி மனை ஒதுக்கீட்டின் முறையில் பெறுவதாக இருந்தால், வேறெங்கும் சொந்தமாக மனையோ, வீடோ இருக்கக் கூடாது. வாங்கிய நிலத்தை வேறொருவருக்கும் விற்க்கக்கூடாது இப்படி சரத்துகள் இருக்கும். அவ்வாறுத்தான், சுதந்திரம் கிடைத்ததிலிருந்து, எல்லா மாநில முதன்மந்திரிகள் செய்து வருகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் அல்லாத கட்சி என்று வரும் போது மட்டும், ஆளும் அல்லது அதிகாரத்தைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தனது ஊழலை மறைக்க மற்றவர்களது இத்தகைய நில ஒதுக்கீடு விஷயத்தை பிரச்சினையாக்கி வருகிறது.

மஹாராஷ்ட்ரத்தில் நடந்தது: மஹாராஷ்ட்ரத்தில், கார்கிலில் உயிர் துறந்த தியாகிகளுக்கு என்று ஒதுக்கப் பட்ட, நிலத்தில், மற்றவர்கள், குறிப்பாக கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் என்று பலர் ஒதுக்கீட்டின் கீழ், அந்த இடத்தில் அடுக்கு மாடி வீடு கட்டி, பலன் பெற்றானர். அதுதான், அங்கு, பிரச்சினையாகி, ஊழலாக விஸ்வரூபம் எடுத்தது. முதன் மந்திரி, சவான் ராஜினானமா செய்தார்.

கர்நாடகத்தில் நடந்தது: கருநாடககத்திலும், அவ்வாறே, ஒவ்வொரு முதல் மந்திரியும் நிலத்தை தனக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்து வந்துள்ளனர். அதன்படியே, எடியூரியப்பா, தனது மகனுக்கு நிலத்தை அரசு ஒதுக்கீட்டின் முறையில் கொடுத்தார். பிரச்சினை வந்ததும் / பிரச்சினையாக்கியதும், நிலம் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் அங்கு பிரச்சினையாக்கியுள்ளது. ஊழல் பிரச்சினை, முதன்மந்திரி-கவர்னர் பிரச்சினையாகி விட்டது,

தமிழகத்தில் நடந்தது: தமிழகத்திலும், கருணாநிதி அவ்வாறே செய்துள்ளார். இருப்பினும் காங்கிரஸ் இங்கு கண்டு கொள்ளாவில்லை. கவர்னர் சுஜித் சிங் பர்னாலா, மிகவும் வேண்டப்பட்ட நண்பர், ஆகையால், எந்த பிரச்சினையும் இல்லை. கே.ஜி.பாலகிருஷ்ணனின் குமாச்தாவிற்கு, வீட்டுமனை ஒதுக்கினாலும், ஜாஃபர் சேட் அல்லது வேறு எந்த அதிகாரிக்கு ஒதுக்கினாலும் யாரும் ஒன்றும் கேட்க முடியாது. சுப்ரமணியம் சுவாமி, இப்பிரச்சினையை எழுப்பியதும், எடியூரியப்பாவைப் போன்றே, முன்பு, ஜெயலலிதா, யார்-யாருக்கெல்லாம், ஒதுக்கீடு செய்தார், என்ற படியலைப் படித்துக் காட்டினார்.

இக்கால அரசியல்வாதிகள் சமநீதி சமத்துவவான்கள் அல்லர்: உண்மையில், இந்த அரசியல்வாதிகள் ஒன்றும், நியாயவன்கள், தர்மவான்கள், நீதிக்குக் கட்டுப்பட்டவர்கள் இல்லை. அவ்வாறு, இருந்திருந்தால், நிச்சயமாக, மனுநீதி சோழன் போல, தன் மகன் என்ரும் பாராமல், தேர் ஏற்றித்தான் கொன்றிருப்பான். ஆனால், இவர்களோ, தமது சுற்றத்தார்களுக்கு, வேண்டியவர்களுக்கு என்ரு வரும்போது, மற்றவர்காஇக் கொல்லவும் தயாராக இருக்கிறார்கள். ஆக, இவர்களிடத்தில் நியாயத்தை, தர்மத்தை எதிர்பார்க்க முடியாது.

காங்கிரஸின் ஊழல் ஆட்சி-மறைக்கும் போக்கு: ஆனால், வெட்கங்கெட்ட காங்கிரஸ், இதையும் வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறது. காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில், ஏதாவது பிரச்சினை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக, அத்தகைய வேலையை சேய்து வருகின்றது. அதகு, அரசு எந்திரங்கள். ஊடகங்கள் முதலிய, தாராள்மாக ஒத்துழைக்கின்றன. இங்குதான், அந்த வித்தியாசம் காட்டப் படுகிறது. காங்கிரஸுக்கு ஒரு பிரச்சினை வந்துவிட்டால், உடனே அதை திசைத் திருப்ப, வேறு பிரச்சினையை எடுத்து வரும் அல்லது உருவாக்கும். அதன்படித்தான், ஸ்பெக்ட்ரம் ஊழல், காமம்வெல்த் ஊழல், ஆதர்ஸ ஊழல், போஃபோர்ஸ் ஊழல்,என தொடர்ந்து ஊழலில் நாறி அசிங்கப்பட்ட் போதுதான், இத்தகைய வேலையை ஆரம்பித்துள்ளது.
Posted by Unknown Labels:

0 comments:

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.