சூரியன் மேற்கில் உதிக்கும் சாத்தியகூறுகள் இருப்பதாக நாஸா விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்
NASA Confirms Possibility of Sun Rising From the West
இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்று முஸ்லிமல்லாதவர்கள் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், இஸ்லாம் மார்க்கம் அகில உலகையும் படைத்த இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியாக வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர்.

முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இவ்வாறு நம்புவதில்லை. தக்க காரணங்களின் அடிப்படையில் தான் இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்று நம்புகின்றனர்.

இந்த மார்க்கத்தை நிச்சயம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து உருவாக்கியிருக்க முடியாது என்பதற்கு திருக்குர்ஆன் முதன்மையான சான்றாக உள்ளது.

எதிர்காலத்தில் நிகழவுள்ள பல செய்திகளைத் திருக்குர்ஆன் முன் கூட்டியே அறிவித்திருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் கூறியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள்.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ள பல நிகழ்ச்சிகளை முன்னரே அறிவித்துள்ளனர். அவர்கள் அறிவித்தவாறு அவை அப்படியே நிறைவேறி வருவதை சிந்திப்பவர்கள் - இதை இறைவன் புறத்திலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள்.

நாம் வாழும் இப்பூமி உற்பட முழுப் பிரபஞ்சமுமே அழிந்து மீண்டும் ஒரு மிக மிக மிகப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை (மஹ்ஷர்) அல்லாஹ் உருவாக்கி மனிதனை வாழவைப்பான் என்பது இஸ்லாத்தின் கொள்கை.

இப்பிரபஞ்ம் அழிவது எப்போது என்பது திட்டவட்டமாகத் தெரியாவிடினும் அது நடைபெறுவதற்கு முன்பு சில அடையாளங்கள் நிகழும் என்பதனையும் அவை எவை என்பதனையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதில் மிக முக்கியமானவொன்றுதான் கிழக்கிலிருந்து உதித்துவரும் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதாகும்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் வரை யுக முடிவு நாள் வராது. அவ்வாறு உதிக்கும் போது யாரேனும் நம்பிக்கை கொண்டால் அந்த நம்பிக்கை பயன் தராது. அதைத் தான் இவ்வசனத்தில் (6:158) அல்லாஹ் கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கியுள்ளனர். (புகாரி 6506, 6535, 7121)

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதி விடக் கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.  இத்தகைய பூமியில் கிழக்கே உதித்து வரும் சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழற்சியை திடீரென நிறுத்தி உடனே எதிர்த்திசையில் சுழல வேண்டும். அப்போது தான் மேற்கில் சூரியன் உதிக்க முடியும்.
சூரியனிலிருந்து பூமி 14,96,80,000 km தூரத்தில் அமைந்துள்ளது.அத்தோடு பூமி செக்கனுக்கு 18 மைல் வேகத்தில்சூரியனைச் சுற்றிவருகின்றது. அத்தோடு அது தன்னைத்தானேயும் கிழக்கு மேற்காகச் சுற்றிவருகின்றது. இதன்போதே சூரியன் கிழக்கில் உதிப்பதாக நாம் காண்கின்றோம்.

மணிக்கு 80 km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும்  மனிதர்களின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குலுங்கி,கட்டிடங்கள் தகர்ந்து விழும். மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் மற்றும் சுனாமி தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.

 சமீப நாஸா ஆய்வுகள் இவ்வாறு  கூறுகின்றன. அனைத்துக் கிரகங்களிலும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியன் வெள்ளிக் கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றி கிழக்கில் மறைவதாக நாஸா விஞ்ஞனிகள் கூறுகின்றர்.

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? குர்ஆன் 41:53.

சிந்தனையாளர்களும், அறிஞர்களும் திருக்குர்ஆனை ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் எண்ணற்ற அதிசயங்களைத் திருக்குர்ஆனில் நிச்சயம் காண்பார். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வசனங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்களும் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட மார்க்கம் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
References:
http://www.youtube.com/watch?v=_cE32VjiTXI
http://www.siasat.com/english/news/nasa-confirms-possibility-sun-rising-west
http://onlinepj.com/books/varu-mun-uraitha-islam/

உலகின் மிகமுக்கிய நவீன நகராக புனித மக்கா நகரம் மாறிவருகின்றது,
இதன்விளைவாக புனித மக்கா நகரில் பல பாரிய வேலைத்திட்டங்கள்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக புனித மக்கா நகரின் ஆளுநர் கலாநிதிஉஸமா அல்-பஆர் தெரிவித்துள்ளார்.மக்கா நகரின்புனித ஹரம் பள்ளிவாசலின் மேலதிக வேலைத்திட்டங்கள் மற்றும் அல்-ஹூஜூனிலிருந்து புனித ஹரம் பள்ளிவாசல்வரையான இரு சுரங்க நடைபாதைகள் உட்பட வேலைத்திட்டங்களின் பெரும்பகுதி நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மக்கா நகரின் ஆளுநர் தெரிவித்தார்.யாத்திரீகர்களுக்கு புனித ஹரம் ஷரீபுக்கு
அருகே தங்குமிடங்களை அமைக்கும் ஜமல் உமர் வேலைத்திட்டம் சிறிதுகாலத்தில் முடிவடைவடையவுள்ளது.தற்போது புனித ஹரம்ஷரீபிலிருந்துதூரத்திலேயே யாத்தீரீகர்களின் தங்குமிடங்கள் காணப்படுவதுடன்,ஜமல் உமர்வேலைத்திட்டம் முடிவடைந்தால் யாத்திரீகர்களுக்கு ஹரம்ஷரீபுக்கு மிக அருகேயே தங்குமிடங்களை வழங்கமுடியுமாயிருக்கும் எனவும், மக்கா நகரினுள் புகையிர சேவையை வழங்கும் 23பில்லியன் சவூதிரியால்கள் செலவான பாரிய திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும் கலாநிதி அல்-பஆர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கா நகரில் இரண்டு,மூன்று மற்றும் நான்கு வட்டப்பதைகள் விரிவுபடுத்தப்பட்டுவருவதுடன் இதற்காக 200மில்லிய சவூதிரியால்கள் செலவிடப்பட்டுள்ளன.உம் ஜூத் பகுதியில் வசிக்கும் மக்கா நகரவாசிகளுக்கு 4000வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிக்கு மொத்தமாக 800மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்பட்டுள்ளன. ஸபாவிலிருந்து மர்வாவிக்கு யாத்திரீகர்கள் வசதியாகச் செல்லும்பொருட்டு இரண்டு மாடிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்காவின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

-

ஆய்வுசெய்து அறிவித்த அமெரிக்க கிறித்தவப் ‎பேராசிரியர்!‎
உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராகக் ‎கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்கப் ‎பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.‎
அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறைப் ‎பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் என்பவர் இயேசு முஸ்லிம் என்பதைத் ‎திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Was jesus a muslim? என்ற தனது புதிய ‎நூலில் அவர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.‎
இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலைத் துவக்குகிறார். ஆம்! ‎அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் ‎பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.‎

‎மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்த வகுப்பில் ஒரு மாணவி ‎எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர ‎மதங்களைக் குறித்தும் ஆராய முடிவெடுத்துள்ளார்.‎
‎“இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக ‎முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து ‎கூடுதலாக ஆராயத் தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.‎

ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியதாவது:‎

‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து ‎புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு ‎தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ‎ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான ‎இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் ‎இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என ‎நான் முடிவுசெய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார ‎பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.‎
‎ 
வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். ‎அதன் பின்னர் அவர் தனது உண்மையைத் தேடிய ஆராய்ச்சியைத் ‎தொடர்ந்தார் என ஃபாக்ஸ் சேனல் கூறுகிறது.‎
‎ 
ஏசு முஸ்லிமா? இல்லையா? என்பதை ஆராய நீண்ட ஆய்வு இவருக்கு ‎தேவைப்பட்டுள்ளது. ஆனால் பைபிளில் உள்ள சில வசனங்களை கீழே ‎தருகின்றோம். அவற்றை ஒருமுறை நீங்கள் வாசித்துப்பார்த்தாலே இயேசு ‎ஒரு முஸ்லிம்தான்; அவர் போதித்த மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை ‎இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக விளங்கிக் ‎கொள்வீர்கள்.‎
இயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாது; இயேசு கர்த்தர் அனுப்பிய ‎தூதர்தான்:‎
நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் ‎உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே ‎எனக்குக் கட்டளையிட்டார்.‎
யோவான் 12:49‎

இயேசுவால் சுயமாக யாரையும் ஆசிர்வதிக்க இயலாது :‎

20. அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து ‎அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் ‎பண்ணவேண்டும் என்றாள்.‎
‎21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ‎அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய ‎இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது ‎இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.‎
‎22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று ‎உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் ‎குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். ‎அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள்.‎
‎23. அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் ‎பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்;ஆனாலும், என் வலது ‎பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் ‎எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், ‎மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.‎
மத்தேயு 20 : 20 முதல் 23 வரை
தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லை :‎
அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்திய ‎ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று ‎கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? ‎தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் ‎பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.‎
மத்தேயு 19 : 16, 17‎
‎ 
நித்திய ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையைக் கைக்கொள்ள ‎வேண்டும் என்று கூறிய இயேசு, அந்த கற்பனைகளில் பிரதானமான கற்பனை ‎எது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.‎

பிரதானமான கற்பனையை கைக்கொள்வோம் :‎

28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம் பண்ணுகிறதைக் கேட்டு, ‎அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் ‎வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.‎
‎29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான ‎கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ‎ஒருவரே கர்த்தர்.‎
‎30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ‎ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் ‎அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.‎
மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை
இயேசுவை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியம் செல்ல ‎முடியாது:‎
‎21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே ‎பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! ‎கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.‎
‎22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது ‎நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா?உமது நாமத்தினாலே ‎பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக ‎அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.‎
‎23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் ‎செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் ‎சொல்லுவேன்.‎
‎24. ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, ‎இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் ‎வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.‎
‎25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த ‎வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது ‎கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.‎
‎26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி ‎செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின ‎புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.‎
‎27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த ‎வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது ‎என்றார்.‎
‎28. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் ‎வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் ‎போதித்தபடியால்,‎
‎29. ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.‎
மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை
‎ 
மேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும் இயேசுவின் வாயிலிருந்து ‎மொழிந்த சொற்கள்தான். அவை அனைத்தும் புதிய ஏற்பாட்டிலிருந்து ‎மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டில் இதைவிட ‎ஏராளமான வசனங்கள் உள்ளன. இந்த வசனங்களைப் படித்தாலே இயேசு ‎ஒரு முஸ்லிம். அவர் இஸ்லாம் சொல்லக்கூடிய ‎ஓரிறைக்கொள்கையைத்தான் தெள்ளத்தெளிவாக போதித்துள்ளார் என்பது ‎தெரிகின்றதா? இல்லையா?‎
‎ 
இதைக் கவனத்தில் கொண்டு கீழே உள்ள திருக்குர்-ஆன் வசனத்தைப் ‎படியுங்கள். இயேசுவின் மார்க்கம் இஸ்லாம்தான் என்பது இன்னும் ‎தெளிவாகும். இதைத்தான் நீண்ட ஆய்விற்குப் பிறகு அந்தப் பேராசிரியர் ‎கண்டுபிடித்துள்ளார். இதை முஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலேயே ‎சொல்லிவிடுவார்கள். அதுதான் வித்தியாசம்.‎

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் ‎பெயரால்....‎
‎1.அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!‎
‎2.அல்லாஹ் தேவைகளற்றவன்.‎
‎3.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.‎
‎4.அவனுக்கு நிகராக யாருமில்லை.‎
அல்குர்-ஆன் : அத்தியாயம் : 112‎

அநியாயங்கள் அடக்குமுறைகள் எனும் மேகங்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு மின்னல். ஆம்! இம்மின்னல் முந்திய மின்னலை (ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதை) விட பன்மடங்காக ஒளி வீசியது. அதுதான் உமர் இப்னு கத்தாப் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது. நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள். 'அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!" என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அனஸ் இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது உமரின் உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிவிப்புகளைச் சுருக்கமாக நாம் பார்ப்பதற்கு முன் உமரிடம் இருந்த உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் முதலில் பார்ப்போம். உமர் நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவர். அவரால் முஸ்லிம்கள் பல வகையான தொந்தரவுகளை எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். எனினும்அவரது உள்ளத்தில் பல மாறுபட்ட உணர்ச்சிகளின் போராட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருபுறம் தங்களது மூதாதையர்கள் கடைபிடித்து வந்த சடங்குகளைப் பின்பற்றி அவற்றுக்காக வீறுகொண்டு எழுந்தார். மற்றொருபுறம் கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காக சோதனைகள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும் ஒரு நல்ல பகுத்தறிவுவாதிக்கு வரும் சந்தேகங்கள் அவருடைய உள்ளத்திலும் அவ்வப்போது தோன்றி மறைந்தன. ஒரு வேளை இஸ்லாமிய போதனை மற்றவைகளைவிட தூய்மையானதாக சரியானதாக இருக்கலாமோ என யோசிப்பார். அதனால்தான் அவருக்கு இஸ்லாமின்மீது கோபம் பொங்கி எழும்போதெல்லாம் உடனடியாக அடங்கியும் விட்டது. உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை முறையாக இங்கு நாம் பார்ப்போம். ஓர் இரவில் தனது வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து உமர் கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் கவிஞராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் கூற இது நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும் (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அல்குர்ஆன் 69:40 41) என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள் அடுத்து இவர் ஜோசியக்காரராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் நான் கூற (இது) ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. (எனினும் இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 69:42 43) என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். அது சமயம் எனது உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இது உமர் இதயத்தில் விழுந்த இஸ்லாமின் முதல் விதையாகும். எனினும் அறியாமைக் கால எண்ணங்களும் மூட பழக்க வழக்கங்களின் பிடிவாதமும் மூதாதையர்களின் மார்க்கத்தை உயர்வாக கருதி வந்ததும் அவரது உள்ளம் ஒத்துக் கொண்டிருந்த மகத்தான உண்மையை மறைத்திருந்தது. தனது உள்ளத்தில் பொதிந்து கிடந்த உணர்வைப் பொருட்படுத்தாமல் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவதிலேயே தீவிரம் காட்டி வந்தார். நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்தஅளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வழியில் அவரை சந்தித்து 'உமரே நீ எங்கு செல்கிறாய்?" என்று கேட்க 'நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்." என்றார். அதற்கு நுஅய்ம் 'நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம் ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?" என்று அச்சுறுத்தினார். அவரை நோக்கி 'நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது" என்று உமர் கூறினார். அதற்கு நுஅய்ம் 'உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது சகோதரியும் (அவரது கணவர்) உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்" என்று கூறியதுதான் தாமதம். அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை நோக்கி உமர் விரைந்தார். அப்போது அங்கு கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள 'தாஹா| எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும் உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர் 'உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?" என்று கேட்டதற்கு 'நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை" என்று அவ்விருவரும் கூறினார்கள். அப்போது உமர் 'நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு அவரது மச்சான் 'உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?" என்று கேட்கஉமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார். கோபம் கொண்ட உமரின் சகோதரி உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.) 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லைமுஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்" என்று உரக்கக் கூறினார். தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும் வெட்கமும் ஏற்பட்டது. உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு அவரது சகோதரி 'நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்" என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்தி 'பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்" (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் 'ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்" என்று கூறிதொடர்ந்து 'தாஹா| என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு 'இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!" என்று கேட்டுக் கொண்டார். உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி) வெளியேறி வந்து 'உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு 'அல்லாஹ்வே! உமர் அல்லது அஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!" என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்" என்றுரைத்தார். நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி (ஸல்) அவர்களுக்கு அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். மக்கள் 'உமர் வந்திருக்கிறார்" என்று கூறினார்கள். 'ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!" என்று ஹம்ஜா (ரழி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி 'உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும் தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!" என்று கூறினார்கள். உமர் (ரழி) 'அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸ{லுல்லாஹ்" என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.) இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹ{ அக்பர் - அல்லாஹ் மிகப் பெயரிவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களும் கேட்டார்கள். யாராலும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு உமர் (ரழி) வலிமை மிக்கவராக இருந்தார். அவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது இணைவைப்பவர்களுக்கிடையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன் இனி தங்களுக்கு இழிவும் பலவீனமும்தான் என்பதை அவர்களுக்கு உணர வைத்தது. உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது முஸ்லிம்களுக்குக் கண்ணியத்தையும் சிறப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: 'நான் இஸ்லாமைத் தழுவியபோது மக்காவாசிகளில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகக் கடுமையான எதிரி யார்? என்று யோசித்தேன். அ ஜஹ்ல்தான் அந்த எதிரி என்று கூறிக்கொண்டு நான் அவனிடம் வந்து அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். என்னைப் பார்த்த அவன் 'வருக! வருக! நீங்கள் வந்ததற்குரிய காரணம் என்ன?" என்று வினவினான். 'நான் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பிக்கை கொண்டேன். அவர் கொண்டு வந்த மார்க்கத்தை உண்மை என்று நம்புகிறேன்" என்று கூறினேன். அதற்கவன் 'அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக! நீ கொண்டு வந்ததையும் கேவப்படுத்துவானாக!" என்று கூறி என் முகத்தில் கதவை அறைந்து சாத்தி விட்டான்." (இப்னு ஹிஷாம்) உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அக்காலத்தில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டார் என்று தெரியவந்தால் அனைவரும் அவரைப் பிடித்து அடிப்பார்கள்¢ சண்டை செய்வார்கள். நானும் முஸ்லிமாகி எனது தாய்மாமா 'ஆஸி இப்னு ஹாஷிமிடம்| வந்து அதைக் கூறியவுடன் அவர் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். அவ்வாறே குறைஷிப் பெரியோர்களில் ஒரு முக்கியமானவரிடம் சென்று கூறினேன். அவரும் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவிய செய்தி குறைஷிகள் எவருக்கும் தெரியவில்லை. இதனால் செய்திகளை மக்களிடத்தில் மிக அதிகம் பரப்புபவர் யார்? என்று உமர் (ரழி) விசாரித்தார். அதற்கு ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜும என்று பதில் கூறப்பட்டவுடன் அவரிடம் சென்றார்கள். நானும் உடன் இருந்தேன். அப்போது எனக்கு பார்ப்பதையும் கேட்பதையும் நன்கு புரிந்து கொள்ளக்கூடிய வயதுதான். உமர் (ரழி) அவரிடம் சென்று 'ஓ ஜமீல்! நான் முஸ்லிமாகி விட்டேன்" என்று கூறியவுடன் அவர் மறுபேச்சு பேசாமல் நேராகப் பள்ளிக்குச் சென்று உரத்த குரலில் 'ஓ குறைஷிகளே! கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான்" என்று கத்தினான். அவனுக்கு பின்னால் உமர் (ரழி) நின்றுகொண்டு 'இவன் பொய் கூறுகிறான். நான் மதம் மாறவில்லை. மாறாக முஸ்லிமாகி விட்டேன்! அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்! அவனது தூதரை உண்மை என்று மெய்ப்பித்தேன்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள் ஒன்று கூடி உமரின் மீது பாயத் தொடங்கினார்கள். அவர்கள் உமரிடம் சண்டையிட உமரும் அவர்களிடம் சண்டையிட்டார். சூரிய வெப்பம் அதிகரித்தபோது களைத்துவிட்ட உமர் (ரழி) கீழே உட்கார்ந்து விட்டார். மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டார்கள். உங்களுக்கு என்ன விருப்பமோ! அதை செய்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் சத்தியமாக கூறுகிறேன். நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஒன்று மக்கா(வின் ஆதிக்கம்) உங்களுக்கு அல்லது எங்களுக்காகி விடும்" என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்) இதற்குப் பிறகு உமரை கொலை செய்யக் கருதி இணைவைப்பவர்கள் உமரின் வீட்டுக்கு படையெடுத்தனர். உமர் (ரழி) வீட்டில் பயந்த நிலையில் இருந்தபோது அஅம்ர் ஆஸ் இப்னு வாயில் என்பவர் வந்தார். அவர் யமன் நாட்டு போர்வையும் கை ஓரம் பட்டினால் அலங்கரிக்கப்பட்ட சட்டையும் அணிந்திருந்தார். அறியாமை காலத்தில் அவரது கிளையார்களான பனூ ஸஹம் எங்களுடைய நட்புக்குரிய கிளையார்களாக இருந்தார்கள். அவர் உமரிடம் 'உனக்கு என்ன நேர்ந்தது?" என்று வினவினார். உமர் (ரழி) 'நான் முஸ்லிமானதற்காக என்னை உமது கூட்டம் கொலை செய்ய முனைகிறார்கள்" என்று கூறினார். அதற்கு அவர் 'அப்படி ஒருக்காலும் நடக்காது" என்று கூறினார். அவர் இந்தச் சொல்லை கூறியதற்கு பிறகு உமர் நிம்மதியடைந்தார். இதற்கு பிறகு ஆஸ் வெளியேறி வந்து பார்த்தபோது அங்கு மக்களின் பெரும் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்களைக் கண்ட ஆஸ் 'எங்கே வந்தீர்கள்?" என்று கேட்டதற்கு 'இதோ கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டார். அவரிடம்தான் வந்துள்ளோம்" என்று கூறினார்கள். அதற்கு ஆஸ் 'அவரை ஒருக்காலும் நீங்கள் நெருங்க முடியாது" என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டனர். (ஸஹீஹ{ல் புகாரி) இதுவரை கூறிய நிகழ்ச்சிகள் இணைவைப்பவர்களைக் கவனித்துக் கூறப்பட்டது. முஸ்லிம்களை கவனித்துப் பார்க்கும்போது உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது. இதைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்: உமரிடம் 'உங்களுக்கு 'ஃபாரூக்| என்ற பெயர் வரக் காரணம் என்ன?" என்று கேட்டேன். அதற்கவர் 'எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஹம்ஜா (ரழி) முஸ்லிமானார். பிறகு நான் முஸ்லிமானேன்" என்று தான் முஸ்லிமான சம்பவத்தைக் கூறினார்கள். அதன் இறுதியில் அவர்கள் கூறியதாவது: நான் முஸ்லிமானபோது 'அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தானே இருக்கிறோம்" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தான் இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள். அதற்கு நான் 'அப்போது ஏன் மறைவாக செயல்பட வேண்டும். உங்களைச் சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியே ஆக வேண்டும்" என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி ஓர் அணியில் நானும் மற்றொரு அணியில் ஹம்ஜாவும் இருந்துகொண்டு நபி (ஸல்) அவர்களை இரு அணிகளுக்கு நடுவில் ஆக்கிக் கொண்டோம். திருகையிலிருந்து மாவுத் தூள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. நாங்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் என்னையும் ஹம்ஜாவையும் பார்த்த குறைஷிகளுக்கு இதுவரை ஏற்பட்டிராத கைசேதமும் துக்கமும் ஏற்பட்டது. அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு 'அல் ஃபாரூக்'" எனப் பெயரிட்டார்கள். (தாரீக் உமர்) உமர் (ரழி) முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்" என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (முக்தஸருஸ்ஸீரா) 'உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோதுதான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும்ää எங்களுக்கு கஅபாவை தவாஃப் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி கொடுத்தோம்" என்று ஸ{ஹைப் இப்னு ஸினான் (ரழி) கூறுகிறார்கள்.(தாரீக் உமர்) 'உமர் (ரழி) முஸ்லிமானதற்கு பிறகே நாங்கள் பலமிக்கவர்களாக ஆனோம்" என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹல் புகாரி)

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
(அர்ரஹீக்குல் மக்தூம்)சில வறிகள்,...

ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி
ஆன்லைனில் புகைப்பட எடிட்டிங் செய்ய அசத்தலான இணையதளம்.
புகைப்படத்தில் தேவையான இடத்தைத் தவிர மற்ற இடங்களை நீக்கி விடலாம் என்றால் குறைந்தபட்சம் இதற்காக நாம் பெயிண்ட் போன்ற மென்பொருட்களைத் தான் தேடி செல்வோம் ஆனால் இனி ஆன்லைன் மூலம் நம் புகைப்படங்களின் அளவை அதிகரிக்க,சுருக்க மற்றும் தேவையானவற்ற வெட்டி எடுக்க ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புகைப்படங்களில் தேவையான பகுதியை நொடியில் வெட்டி எடுக்கலாம் எந்த மென்பொருளும் தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால் போட்டோ ஷாப்  போன்ற சாப்ட்வேர் கிடைக்காத சமயங்களில் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி
  1. FOTOCRIB
  2. PIZAP
  3. CONDENET
  4. PIXISNAP
  5. JPGFUN
  6. BLINGEE
  7. LUNAPIC
  8. FAKE
  9. FOTOTRIX
  10. POLADROID
  11. CELEBRITY
  12. FESTISITE
  13. FACE
  14. BIGHUGE
  15. HOLLYWOOD
  16. MAKMYPIC
  17. WRITEONEIT
  18. HAIRMIXER
  19. PHOTO505
  20. PHOTOVISI
  21. DUMPER
  22. FUNNY PHOTO
  23. LOOONAPIX
  24. BEFUNKY
  25. PICARTIA
  26. PHOTOFUNNIA
  27. FUNPHOTO
  28. PIXERUS
  29. PIXNATE
  30. PICTURETOLIFE
  31. PICNIK
  32. SPLASHUP
  33. PIXLR
  34. ARIVAY
  35. PHIXR
  36. PHOTOSHOP
  37. FLAUNTER
  38. FOTO
  39. DRPIC
  40. PIXENATE
  41. photofacefun
  42. Funphotobox
  43. loonapix
  44. jpgfun
  45. funny
  46. photo505
  47. tuxpi
  48. faceinhole
  49. funnywow
  50. enjoypic 
  51. imagesplitter

இத் தளத்திற்கு சென்று Choose file என்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் நமக்கு Convert , Split ,Crop என்ற மூன்று மெனு தெரியவரும் இதிலிருந்து மாற்ற விரும் Width மற்றும் Height கொடுத்து Convert image என்பதை சொடுக்கினால் போது உடனடியாக நாம் கொடுத்த அளவுகளில் படம் மாற்றப்பட்டு தறவிரக்கம் ஆகிவிடும்.Crop என்பதை சொடுக்கி நாம் தறவேற்றிய படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அதை எளிதாக தேர்ந்தெடுத்து Crop image என்பதை சொடுக்கி மாற்றலாம், எந்த விதமான பயனாளர் கணக்கும் தேவையில்லை எளிதாக அதுவும் சில நிமிடங்களில் , புகைப்படத்தின் அளவை அதிகரிக்க மற்றும் சுருக்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி,...
அக்பர் சமத்
ஜெட்டாஹ் .ஹிஜழ் 



மர்ம தேசம்

அமெரிக்காவில் உள்ள (Colorado)கொலராடோ மாநிலத்தில் அமைந்த டென்வர் சர்வதேச விமான நிலையத்தை சாதாரணமாக பார்த்தால் பயணிகள் சுருசுர்ப்பாக பயணத்தில் ஈடுபடும் ஒரு விமான நிலையம் தான் அது. ஆனால் அந்த பயணிகள் எவருக்கும் தெரியாமல் அங்கே அமைதியாக ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது  அமெரிக்க கண்டத்தின் நடுவே அமைந்தது. இந்த விமான நிலையத்துக்கு கீழே பலமீடர்ஆழத்தில் பலர் தங்கியிருக்க கூடிய இரகசிய கட்டிடங்கள் அமெரிக்க அரசாங்கத்தாலே  கட்டபட்டுவருகின்றன.இந்த கட்டிடங்கள் எந்த ஒரு அழிவுகளாலும் பாதிக்கபடாத வாறு அமைக்கபடுகின்றது. இதை பற்றி எந்த தகவலும் வெளியேவராமல் இரகசியமாக பாதுகாக்கபட்டுவருகிறது
 இதை ஆராய்ந்து பாத்தால் பலமான பாதுகாப்புடன் கட்டப்படும் இந்த கட்டிடங்கள் உலகம் அழியும்போது பலர் பாதுகாப்பாக வாழும்படி அமைக்கபடுகிறது என தெரிய வருகிறது.கட்டடம் கட்டப்படும் இடத்தில "நியூ வேர்ல்ட் ஏர்போர்ட் கமிஷன்" என்னும் நிறுவனத்தால் கட்டபடுவதாக கல்வெட்டு இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் அப்படி ஒரு நிறுவனம்செயல்படவே இல்லை.
 இந்த டென்வர் விமான நிலையத்தின் நிலத்தடியில் சுரங்க நகரை அமைப்பது போல அமெரிக்காவில் பலஇடங்களில் ராணுவ பாதுகாப்புடன் கட்டப்பட்டுவருகிறது.
 மேலே படங்களில் உள்ளவை அமெரிக்காவின் பல இடங்களில் அமைக்கப்படும் நிலகீழ் நகரங்கள் வெளியே எதுவுமே தெரியாத அளவுக்கு அமைதியாக காணப்படும் இவை உள்ளே மிக பிரமாண்டமானவை அமெரிக்க நாட்டில் அனேக ரகசியங்கள் மீடியாகளினால் சுலபமாக வெளிவந்துவிடுகின்றன. ஆனால் அமெரிக்க தவிர்த்து சீனா, ரஷ்யா போன்ற பிற நாடுகளில் அப்படி இல்லை. அங்கு என்ன நடக்கின்றன என்பவை ரகசியமாகவே இருக்கின்றன .

இதை மேலும் அறிய நீங்களே googleல தேடுங்கள்   நோர்வே நாட்டுக்கு சொந்தமாக வடதுருவத்தில் ச்வல்பர்ட் (Svalbard)
என்னும் தீவு ஒன்று உண்டு. இந்த இடம் டென்வர் விமான நிலையம் போல மிக முக்கியமானதாக இப்போது இருக்கிறது. அது என்ன தெரியுமா?!!!
 உலகில் உள்ள அணைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதையும், கிழங்குகளும் , தண்டுகளும் டன் டன்னாக பாதுகாப்பாக சேமித்து வைக்கபடுகிறது.பல மில்லியன் டாலர் செலவில் மலைகளை குடைந்து நிலத்தடி சுரங்கமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் இவை சேமித்து வைக்கபடுகின்றன. உலகம் அழிந்தாலும் இவற்றிற்கு எந்த பாதிப்பும் வரமுடியாத அமைப்பில் கட்டப்பட்டு இருக்கின்றன


  உலகத்தில் அழிவு ஏற்படும் பட்சத்தில், அதன் பின்னர் ஏற்படும் மற்று உலகத்தில் தப்பி பிழைத்தவர்கள் பயன்படுத்த இந்த ஏற்பாடு செய்யபடுகிறது.சரி இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏன் வட துருவத்தில் செய்யப்பட வேண்டும் பூமியின் வட, தென் துருவதிர்கான ஆச்சு தனது இடத்திலிருந்து மாறினால் (pole shift) தற்சமயம் வெப்ப பிரதேசமாக இருக்கும் இடங்கள் குளிர் பிரதேசமாகவும், குளிர் பிரதேசங்கள் வெப்ப பிரதேசங்களாகவும் மாறும் வாய்ப்புண்டு என விஞ்ஞானிகள் கூறுவதால். 
உலகம் அழியும் நிலை ஏற்படுமாயின் மரங்களை பாதுகாக்கும் இடம் வெப்ப பிரதேசமாக மாறி அங்கு மரங்களை உற்பத்தி செய்யகூடியதாக மாறலாம்
 இதுபோன்ற அதிபுத்திசாலி தனமான செயல்களை எல்லாம் செய்வதற்கு கட்டளை இட்டவர் யார்? இவற்றையெல்லாம் யார் ஒருங்கினைக்கிறார்கள்.

  டென்வர் விமான நிலைய கட்டுமானத்தின் போது அமைக்கபட்டிருந்த கல்வெட்டு "the new world order" என்னும் அமைப்பு உலகத்தின் தொழிலதிபர்களையும், அரசியல் பெரும் புள்ளிகளையும் தன் அமைப்பின் அங்கத்தவர்களாக கொண்டது என்று சொல்கிறார்கள் பதினைந்துக்கு மேற்பட்ட உலகத்தில் மிக சக்தி வாய்ந்த முக்கியமான நாடுகள் ஒன்றாக சேர்ந்து தனியாக ஒரு பணம் "euro" உருவாக்கியது நம் கண்முன்னாலேயே நடந்தது. ஆசிய நாட்டிலுள்ள அநேகருக்கு "the new world order" பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை..ஆனால் அமெரிக்க ஐரோப்பிய நாட்டு மக்கள் நிறையவே தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
 இதில் மறைந்திருக்கும் இன்னுமொரு செய்தி என்னவென்றால் இந்த அமைப்பை "free mason" என்னும் அமைப்பே கொண்டு நடத்துகிறது. இந்த அமைப்பை masonics என்று அழைப்பார்கள் . இந்த அமைப்புக்கு என பல சின்னங்கள் இருந்தாலும், கீழே கொடுக்கப்பட்டது தான் முக்கிய சின்னமாகும்.
மேலே டென்வர் விமான நிலையத்தில் உள்ள கல்வெட்டு படத்தில் இந்த சின்னத்தை காணலாம்
 இன்னும் சில சின்னங்கள் கீழே கொடுக்கபட்டிருக்கின்றன.

  masonics அமைப்பின் ஆளுமை மற்றும் அதிகாரம் பற்றி சொல்வதானால் இந்த ஒரு சம்பவத்தை மட்டும் சொன்னால் போதும் உங்களுக்கே தெரியும். அமெரிக்காவின் ஒரு டாலரில் இருக்கும் படம் இது
 இங்கு கொடுக்கபட்டிருக்கும் படத்தில் உள்ள "NERVUS ORDO SECLORUM" என்னும் லத்தின் வார்த்தைகள்"secular new order" என ஆங்கிலத்தில் பொருள் தருகிறது. இது மறைமுகமாக "the new world order" என்றே பொருள்படுகிறது என விக்கிபீடியா மற்றும் பல இனைய தளங்கள் கூறுகின்றன. அவற்றை நீங்களே "தி நியூ வேர்ல்ட் ஆர்டர்" என டைப் செய்து காணலாம்  அது தவிர அமெரிக்க டாலரில் லத்தின் வார்த்தைகள் ஏன் வரவேண்டும் என்ற கேள்வி எழும். இது ஒருபுறமிருக்க masonகளின் அடையாளமான ஒற்றை கண்ணும் பிரமிட் அடையாளமும் அங்கு வரவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது
அத்துடன் பிரமிட் களின் அடுக்கு 13 ஏன் வர வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது ஏனெனில் 13 என்பது mason களின் முக்கிய இலக்கம் என்பதை நான் இங்கே குறிபிட்டாக வேண்டும். இந்த படிகள் தற்செயலாக அமைந்தது என கொண்டால்,

டாலரில் இருக்கும் படத்தில் mason ஆறுகோண அடையாளத்தை வரையும் போது என்ன வருகிறது என்று தெரிகிறதா?
MASON  

ஆபிரகாம் லிங்கன், கென்னடி ஆகிய இருவர் தவிர்த்து அமெரிக்க ஜனாதிபதிகளில் அனைவரும் இந்த அமைப்பை சேர்ந்தவர்களாக தான் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் .
Underground US Government Bases Exposed
மேலும் mason களின் மற்றுமொரு சின்னத்தை அமெரிக்காவின் பெருந்தலைகள் எத்தனை பேர் பாவித்திருக்கின்றனர் பாருங்கள். இப்பொழுது புரிந்திருக்கும் இந்த அமைப்பின் வலிமை மற்றும் யார் தலைமையில் இவ்வளவு வேலைகள் நடக்கின்றன என்பது புரியும்.
இங்கு ஒரு விசயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். mason என்பது மறைந்து செயல்படும் அமைப்பு கிடையாது, வெளிப்படையாக இயங்கும் ஒரு அமைப்பு தான். நமக்கு இப்பொழுது தான் தெரிந்திருக்கிறது. ஜார்ஜ் வாஷிங்டன் போல ஜார்ஜ் புஷ் கூட mason களுடன் இருக்கும் படம்  வெளிப்படையாக கிடைக்கிறது.இப்போது உங்களுக்கு தெளிவாகவே புரிந்திருக்கும் "free mason" என்னும் அமைப்பே கொண்டு நடைபெறுகிறது என்று.

மேலும் இவற்றை கூர்மையாக பார்த்தால்உலக மக்களை சுற்றி  சதி வலை பின்னப்பட்டு வருகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது
ARTICLE FROM 


Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.