ஜமாஅத்தார்களே! சகோதரர்களே!! எச்சரிக்கை!!!



கோவை: நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளான்.

நிருபர்களிடம் பேசிய அவன் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை [^] எங்கும் இஸ்லாமியர்கள் மத மோதல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.


தென் கொரியாவில் சாலையெங்கும் புத்த சிலைகள் நிறைந்திருந்தது. அப்போது அமெரிக்க பிரதிநிதிகள் தென் கொரிய பிரதிநிதிகளிடம் சாலையெங்கும் இருக்கக்கூடிய புத்தர் சிலையை எடுத்து விடுங்கள் என்று சொல்லியதன் பேரில், தென் கொரிய பிரதிநிதிகள் சிறிய சிலைகளை எடுத்தார்கள்.

சிலைகளை எடுப்பதற்கு முன்னர் பௌத்தர்கள் 60 சதவீதம் இருந்தார்கள். கிருஸ்தவர்கள் 40 சதவீதம் இருந்தார்கள். சிலைகளை எடுத்தப் பின்னர் கிருஸ்தவர்கள் 60 சதவீதமாக மாறிப்போனார்கள். பௌத்தவர்கள் 40 சதவீதமே இருக்கின்றனர்.

அதே போலத்தான், இங்கேயும் சாலைகளில் உள்ள கோவில்களை அகற்றிவிட்டு, சர்ச்சுகளும் மசூதிகளும் நிறைந்துவிட்டன.
அயோத்தியில் உள்ள இடம் யாருக்கு சொந்தம் என அலகாபாத் நீதிமன்றம் [^] தீர்ப்பு அறிவிக்க உள்ள இந்த நேரத்தில், நாம் சொல்லிக்கொள்வது என்னவென்றால், என்ன தீர்ப்பு வந்தாலும் கவலையில்லை. ராமர் கோவிலை அங்கே கட்டியே தீருவோம்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் [^] அசோக் சிங்கால் தீர்ப்பை மதிப்போம் என்கிறார். ஆனால், இஸ்லாமியர்கள் யாரும் தீர்ப்பை மதிப்போம் என்று சொல்லவில்லை. இதற்கிடையே தீர்ப்பு வரும் இந்த நேரத்தில் இஸ்லாமியர்களின் மனைவிகளும், குழந்தைகளும் பத்திரமான இடத்திற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், ஏதோ ஒரு பெரிய கலவரத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.


கோயம்பத்தூரில் கல்லூரி மாணவிகளை இஸ்லாம் இளைஞர்கள், பேச்சுக் கொடுத்து மயக்கி 'லவ் ஜிகாத்' என்ற முறையில் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றுகிறார்கள். மாற்றியதோடு மட்டுமல்லாமல், அவர்களை இந்துகளுக்கு எதிராக பயங்கரவாதிகளாக மாற்றுகிறார்கள்.


முதல்வர் கருணாநிதி [^] திருந்திவிட்டார், அவருக்கு தெய்வ பக்தி வந்துவிட்டது என்று பலர் சொல்லுகிறார்கள். ஆனால் அது சுத்தப் பொய். அவர் எப்போதும் திருந்தவே மாட்டார். அவர் எப்போதும் இந்துகளுக்கு எதிராகத்தான் இருப்பார்.

கல்லூரிகளில் பள்ளிகளில் இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்துவர்களுக்கும் அளிக்கப்படும் சலுகைகளை இந்து மாணவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்றான் ராம கோபாலன்.
===================
பாப்ரி மஸ்ஜித்:காங்கிரசுக்கு கடைசி வாய்ப்பு

1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது.
இந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.

வரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.

நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.

அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.

மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.

வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.

நீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.

பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான விவகாரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.

தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.

விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.

உண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை உள்ளது.

பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றியமைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.

இந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது? என்பதுதான் கேள்வி.

ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.

இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.

நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில தலைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.

தங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.

தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம்.
விமர்சகன்
http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_18.html

===============================

பாப்ரி மஸ்ஜித் வழக்கு:அமைதிகாக்க மத்திய அரசு வேண்டுகோள்

புது டெல்லி :அயோத்தி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருகிற 24-ஆம் தேதி வெளியாகவிருக்கும் சூழலில் அமைதி காக்கவேண்டும் என மத்திய அரசு நாட்டுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இதுத்தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகாசோனி அறிவித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதிக்கவேண்டும். அதேவேளையில், இந்த தீர்ப்பு நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒரு சுவடு மட்டும் தான் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். இனிமேலும் ஏதேனும் நீதிமன்ற தீர்ப்பு தேவையென்றால் சட்டரீதியான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_6465.html

=====================================
பாப்ரி மஸ்ஜித்:இணக்கமான தீர்விற்கு வழி இல்லை என கல்யாண்சிங்


லக்னோ :அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் இணக்கமான தீர்விற்கு வழி இல்லை எனவும், ஹிந்துக்களோ, முஸ்லிம்களோ அதனை அங்கீகரிக்கமாட்டார்கள் எனவும் உ.பி.மாநில முன்னாள் பா.ஜ.க முதல்வர் கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.

அயோத்திக்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார் அவர். மேலும் அவர் கூறியதாவது:"அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ஹிந்துக்கள் உறுதிப்பூண்டுள்ளனர். இதற்கிடையே எதனைச் செய்தாலும், அது காலத்தை வீணடிப்பதாகும். அயோத்தியில் நான் சன்னியாசிகளை சந்திப்பேன்." என கல்யாண்சிங் தெரிவித்தார்.

இதற்கிடையே, இவ்வழக்கில் தீர்ப்பை ஒத்திவைப்பதற்கு எதிராக வழக்கின் கட்சிதாரரான ஹிந்துமாகாசபை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்துள்ளது. தீர்ப்பை காலதாமதமாக்க வேண்டும் எனக்கோரும் இரண்டு மனுக்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மாதம் 24 ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
http://paalaivanathoothu.blogspot.com/2010/09/blog-post_784.html
===========================================================
பாப்ரி:தீர்ப்பு 24-ஆம் தேதி திட்டமிட்டப்படி வழங்கப்படும்

லக்னோ : வருடக்கால பழமையான பாப்ரி மஸ்ஜித் நில உரிமைத் தொடர்பான வழக்கில் தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றக் கோரிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே இணக்கமான தீர்விற்கு வழிகாண தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவின் மீதான விசாரணையில்தான் 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை நேற்றுக் கூறியது. பாப்ரி மஸ்ஜித் நில உரிமை தொடர்பான தீர்ப்பு திட்டமிட்டபடி வருகிற 24-ஆம் தேதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வழக்கை ஒத்திவைக்கக் கோரும் மனுவில் முக்கியத்துவம் இல்லை எனக் கருதிய நீதிமன்றம் மனுவை சமர்ப்பித்தவருக்கு பெருந்தொகையை அபாரதமாக விதிக்க தீர்மானித்தது. அபராதத்தொகை எவ்வளவு என்று முடிவாகவில்லை.

நீதிபதி சுதீர் அகர்வால் ஐந்துலட்சம் ரூபாய் அபராதமாக நிர்ணயித்தார். எஸ்.யு.கான், டி.வி.சர்மா ஆகியோர் சிறப்பு பெஞ்சின் இதர நீதிபதிகளாவர். 'இணக்கமான தீர்விற்கு தயாரா?' என நீதிமன்றம் கட்சிதாரர்களிடம் ஆராய்ந்தது. ஆனால், எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு அவ்வாறான நம்பிக்கை இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வழக்கில் முக்கிய கட்சிதாரரான நிர்மோஹி அகாரா, சமரச தீர்விற்கு இந்த மாதம் 27-ஆம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயிக்கவேண்டும் என்று கோரும் மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக உச்சநீதிமன்றத்தை அணுக தனது கட்சிதாரரை உபதேசிப்பேன் என திரிபாதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு அளிப்பது நீதிமன்றத்தின் கடமையென்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே தெரிவித்துள்ளார்.

வழக்கை ஒத்திவைக்கும் மனுவை தள்ளுபடிச் செய்தது மூலம் உயர்நீதிமன்றம் சரியான காரியத்தை செய்துள்ளது என முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
http://paalaivanathoothu.blogspot.com/2010/09/24_18.html




====================================================

பாபரியே பள்ளிவாசல்

பாபரி பள்ளிவாசல் இடிப்பதற்கு முன்பும், இடிப்பிற்குப் பின்பும் என 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் பிரச்னையில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிபாட்டு உரிமைகளின் அடிப்படையில், நீதிமன்றங்களையே நம்பியிருந்த முஸ்லிம்களை காவிப் படையினரும், அவர்களுக்கு ஆதரவான அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்களும் தங்களது மனசாட்சியைப் புதைத்து விட்ட காரணத்தினாலும், தங்களது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த காரணத்தினாலும் நாம் அந்தப் பள்ளியை இழந்தோம்.

இப்பொழுது ஓரிறைவனைத் துதிக்கக் கூடிய இடமாக விளங்கிய அந்தப் பள்ளியை, பல தெய்வ வணக்க வழிபாட்டுக்கு இட்டுக் கொண்டு செல்லும் பாஸிஸ இந்துத்துவாக்கள், இன்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மதிக்கவும் மாட்டார்கள். நீதிமன்றங்களும் அவர்களுக்கே சாதகமாகத் தீர்ப்புக்களை வழங்கி வருகின்றன.

மேலும், மார்ச் 12 லும் அதற்கு இடைப்பட்ட இந்த காலத்தில், வெறுமனே கோயில் கட்டுவதோடு மட்டும் அவர்கள் நின்று விட மாட்டார்கள். அதற்கு முன்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தக் கூடிய செயல்களிலும் அவர்கள் இறங்கக் கூடும்.

இந்த நிலையில் முஸ்லிம்களின் வாழ்வாதார உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும், அவர்களுக்குரிய பாதுகாப்பையும் வழங்க வேண்டியது அரசுகளின் பொறுப்பாகும். ஆனால் இன்றைய அரசுகள் தங்களது ஓட்டு வங்கிகளை அடிப்படையாக வைத்துத் தான், தங்களது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு யார் தான் பொறுப்பேற்கப் போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முஸ்லிம்களாகிய நாங்கள் அந்த வல்ல இறைவனிடமே எங்களது பாதுகாப்பிற்கு கையேந்தி நிற்கின்றோம்.

மேலும், ஏற்கனவே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வரக் கூடிய இந்திய முஸ்லிம்கள் மேலும் அந்நியப்பட்டுப் போகக் கூடிய நிலையை, வலிய அவர்களின் மீது திணிக்கக் கூடிய சம்பவமாகத் தான் இது அமையும்.

முஸ்லிம்களும் இந்த இந்திய நாட்டுக் குடிமக்கள் தான் என்பதிலும், இந்திய தேச விடுதலைக்கு தன்னுடைய சதவீதத்திற்கும் அதிகமாகவே தியாகங்களை இந்தச் சமூகம் செய்திருக்கின்றது என்பதையும் ஒப்புக் கொள்ளும் அனைவரும், இந்தப் பாஸிஸப் போக்கை தடுத்து நிறுத்த முன் வரவேண்டும். இந்த அராஜகத்திற்குத் துணை போகக் கூடிய அனைவரையும் நீதிமன்றத்தில் - குற்றக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

இந்திய எல்லையில் இந்திய ராணுவம் சந்திப்பவர்கள் மட்டும் இந்திய எதிரிகள் அல்ல! இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைப்பவர்களும் இந்தியாவின் எதிரிகளே!!! இந்த எதிரிகளை இந்திய தேச மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டியதும், அவர்களது தீவிரவாதப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டியதும் நடுநிலையாளர்கள் மற்றும் இதயமுள்ளவர்களின் கடமையும் கூட!!



பாபரி மஸ்ஜித் : அடிப்படைத் தகவல்கள்

டிசம்பர் 06, 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் ஷஹீதாக்கப்பட்ட நாள்.

இந்தியா உலக அரங்கில் தலைகுனிந்து நின்ற நாள். அன்று இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை இன்றளவும் துடைக்க முடியவில்லை. இந்த அவமானம் முற்றாக துடைக்கப்படும் அளவுக்கு, இன்று இந்தியா தேச விரோத ஃபாசிஸ சக்திகளின் கைகளில் சிக்கிக் கொண்டது.

இந்தியாவின் கண்ணியம் இன்னும் அதள பாதாளத்தில் வீழ்ந்து விடலாம் இந்தப் பாஸிஸச் சக்திகளால். பாபரி பள்ளிவாசல் ஷஹீதாக்கப்பட்ட அந்த நாள் முதல் இன்று வரை நாட்டில் நடக்கும் அத்தனை விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கும் அதுவே காரணம்.

பள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்hலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.

தடா சட்டம் காலாவதியான பின்னரும் அதன் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் விடுவிக்கப்படவில்லை.

பாபரி பள்ளி வாசல் இடிக்கப்பட்ட நாள்களைத் தொடர்ந்து பம்பாயில் கலவரங்கள் மூண்டன. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் காவல் துறையினராலும் ஃபாசிஸ்டுகளாலும் கொலை செய்யப்பட்டார்கள்.

பம்பாய் நிகழ்வுகளை விசாரிப்பாதற்காக அமர்த்தப்பட்ட கிருஷ்ணா கமிஷன் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டிருக்கின்றது. அதில், அத்வானியின் ரத யாத்திரையும், பள்ளிவாசல் இடிப்பும் தான் பம்பாய் நிகழ்வுகளுக்குக் காரணம் என ஆணித்தரமான ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையும், பள்ளிவாசல் இடிப்பில் பெருமை கண்ட ஃபாசிஸ்டுகளின் கைகளிலேயே சிக்கிக் கொண்டது. இப்படி இந்த நாட்டையே நட்டாற்றில் தள்ளி விட்ட இந்தப் பிரச்னையில் மிகவும் வேதனையான பகுதிய என்னவெனில், பள்ளிவாசலை இழந்த முஸ்லிம்களே இன்று குற்றவாளியாக்கப்பட்டு வருகின்றார்கள் அனைத்து விவகாரங்களிலும்..

பாபரி மஸ்ஜித் குறித்த அடிப்படை தகவல்கள் வருங்காலத்தில் நிச்சயமாகத் திரிக்கப்படும் இன்று இந்தியாவை ஆளும் இந்தப் ஃபாசிஸ்டுகளால்..

ஆகவே அவற்றை நினைவு கூருவதும், நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் அதைப் பாதுகாத்துத் தருவதும் நமது கடமை. ஏனென்றால், வரும் மார்ச் 2002, 2 ஆம் தேதியன்று பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் கட்டப் போவதாக விசுவ ஹிந்து பரிஷத் அறிவித்திருக்கின்ற நிலையில், அதற்குத் தடையை ஏற்படுத்தும் அனைத்து வழிகளையும் அடைப்பதற்குண்டான வழிமுறைகளில் ஆளும் பாஜக முயன்று கொண்டிருக்கின்ற இந்த நிலையில், பாபரி பள்ளிவாசல் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தருவது மிகவும் பொருத்தமெனக் கருதுகின்றோம். இதன் மூலம் நாட்டு மக்களுக்கும், உண்மையை அறிய விளையும் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.

அடிப்படைத் தகவல்கள் :

கி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு

இப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட்.

இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் (ஷியா-சுன்னி) கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.

ஆட்சியாளர் ஜஹாங்கீர் அவர்கள் காலம் முதற்கொண்டு தான் இந்தப் பள்ளிவாசல் பாபரி பள்ளிவாசல் என்றழைக்கப்பட்டது. பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல், முஸ்லிம்கள் இரு தரப்பாரும் தங்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்தப் பள்ளிவாசலில் நிறைவேற்றி வந்தார்கள்.

1950 ம் ஆண்டு, பைஸாபாத் சிவில் நீதிமன்றம் ஓர் தடை உத்தரவைப் போட்டு முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்குள் நுழைவதைத் தடுத்தது.

அன்று வரை முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை அந்தப் பள்ளிவாசலில் நிறைவேற்றியே வந்தார்கள்.

1855 ஹனுமன் கார்ஹி வழக்கு

19ம் நூற்றாண்டின் நடுவில் அதாவது 1855 ஆம் ஆண்டில் ஹனுமான்கார்ஹி என்பது குறித்து வழக்கொன்று எழுந்தது. இந்த வழக்கு சுன்னி முஸ்லிம்களுக்கும், நாகா சாதுக்களுக்குமிடையில் எழுந்தது. அப்போது, அப்பகுதி நவாப் வாஜித் அலீ ஷா என்பாரின் ஆட்சியின் கீழிருந்தது.

இந்த ஹனுமான்கார்ஹி அயோத்தியில் இருக்கின்றது. இந்த ஹனுமான்கார்ஹியில் பள்ளிவாசல் ஒன்று இருந்தது எனவும், அது இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள்.

இது குறித்து எழுந்த கலவரங்களில் 200 இறந்துள்ளனர். பல முஸ்லிம்கள் உயிரைத் தந்தும் பள்ளிவாசல் இடத்தை மீட்க இயலவில்லை.

முஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த பள்ளிவாசலை மீட்கக முயற்சி செய்தார்கள் என்பதற்காக, இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பாபரி பள்ளிவாசல் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்பதே அந்த எதிர் நடவடிக்கை.

முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசலை மீட்க நடவடிக்கை எடுக்கின்றார்ள் என்று கோபங் கொண்டெழுந்த அந்தப் பகுதிய பூர்வீக இந்துக்கள் கூட ஜென்மஸ்தான் என்றொரு முழக்கத்தை முன் வைக்கவில்லை.

அவர்கள் ஒரு எதிர் நடவடிக்கையாகத் தான் பள்ளிவாசல் முன்பாக ஒரு இடத்தை இட்டுக் கட்டிப் பேசினார்கள். ஆகவே பாபரி பள்ளிவாசல், இராமர் பிறந்த இடம் என்பது ஆதாரமற்ற அரசியல் பிழைப்புக் கோஷம் என்பதே உண்மை. (ஆதாரம் : பேராசிரியர் க. சம்பக லஷ்மி. வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் மற்றும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்)

1857 நாம் சாபுத்ரா

பாபரி பள்ளிவாசல் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு போன்றிருக்கும் இடம் ராம் சாபுத்ரா என்றும், அதுவே ராம் ஜென்ஸ்தான் என்று சாமியார் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அத்தோடு அங்கு பூஜா புனஸ்காரங்கள் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

1857 ல் பாபரி பள்ளிவாசல் முன்பாக சற்று தொலைவில் மேடு போன்றிருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற யெரில் உயர்த்தப்பட்டு இந்துக்கள் பூஜா புனஸ்காரங்களைச் செய்து வந்தார்கள். ஒரே வளாகத்திற்குள், முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தங்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்துகள் தங்கள் பூஜா புனஸ்காரங்களை நிறைவேற்றினார்கள்.

இரு வகுப்பரிடையேயும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதற்காக, ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களை வேறுபடுத்திடும் அளவில் ஓர் சுவரை எழுப்பிட விரும்பினார்கள். அதன்படி 1859 ல் இந்தப் சுவர் எழுப்பப்பட்டும் விட்டது.

1883 ம் ஆண்டு மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பின்னர் பைஸாபாத் துணை ஆணையாளரிடம் இந்த இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது.

இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பட்டவர்த்தனமான வகுப்ப வெறியேயன்றி வேறு எண்ணங்கள் இதற்குப் பின்னால் இல்லை. இதனால் அனுமதி வழங்கப்படவியலாது எனக் கூறி விட்டார் பைஸாபாத் துணை ஆணையாளர்.

1885 ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட வழக்கு

ஜனவரி 15 1885 ல் ஜென்ஸ்தான் காப்பாளராகக் காட்டிக் கொண்ட ரகுபீர்தாஸ், பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.

பள்ளிவாசலுக்கு முன்னால் கோவில் கட்டுவது இரண்டு வகுப்பாருக்குமிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் எதிலும் பாபரி பள்ளிவாயில், சர்ச்சையாக்கப்படவில்லை என்பது தெளிவு.

1934 ல் நடந்த வகுப்புக் கலவரங்கள் அயோத்தியைத் தாக்கியது. சில தீவிரவாதிகள் முஸ்லிம்களைத் (தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும்) தாக்கி, பள்ளிவாசலையும் தாக்கினார்கள். எனினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள்.

1940 ல் .. ..

1940 ; இந்தப் பள்ளிவாசல் சுன்னி முஸ்லிம்களுக்குச் சொந்தமா? ஷியா முஸ்லிம்களுக்குச் சொந்தமா? என்றொரு சர்ச்சை எழுந்தது. இது நீதிமன்றம் சென்றது. நீதிமன்றம் பள்ளிவாசல் சுன்னி முஸ்லிம்களுக்கே சொந்தம் எனத் தீர்ப்பு வழங்கிற்று.

இது தான் பாபரி பள்ளிவாசலில் யாருக்குச் சொந்தம் என்பது சம்பந்தமாக வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு.

இராமர் சிலைகள்

1949 டிசம்பர் 23 ல் இராமர் லாலா சிலைகள் மூட நம்பிக்கையின் அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்டன. இது சட்ட விரோதமான செயல் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்தக் கிரிமினல் குற்றம் சம்பந்தமாக ஒரு முதல் குற்றப்பத்தரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

22.12.1949 அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு பள்ளிவாசல் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது.

கே.கே.நய்யார்

பாபரி பள்ளிவாசலினுள் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது. இவர் பிற்றை நாட்களில் ஜனசங்க அதாவது முன்னாள் பிஜேபி யின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல, அவருடைய மனைவி சகுந்தலா அம்மையாரும் அதே ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆக, முஸ்லிம்கள் ஒரு பிஜேபி குடும்பத்திடம் தான் பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்ப்பட்டது சம்பந்தமாக நியாயம் கேட்டிருக்கின்றார்கள்.

இந்த கே.கே.நய்யார் பைஸாபாத்திலும், உத்திரப் பிரதேசத்திலும் அரசு பொறுப்புகளிலும் பல ஆண்டுக்ள இருந்தார். முஸ்லிம்கள் - இந்துக்கள் இடையே ஏற்பட்ட பல பிரச்னைகளில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் தலைவராக இருந்தார். கிஞ்சிற்றும் கவலைப்படாத ஓர் இந்து தீவிரவாதி என்பதை யாரும் அறிந்திடவில்லை.

பள்ளிவாசலுக்குள் சிலைகள் வைக்கப்பட்டவுடன், அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

சிலைகள் வைக்கப்பட்டவுடன் வழங்கப்பட்ட (அ)நீதி

சிலைகள் வைக்கப்பட்டவுடன், மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் பள்ளிவாசலைக் கைப்பற்றினார். பள்ளிவாசலை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் பள்ளிவாசலுக்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.

நீதிபதி கே.கே.நய்யாரின் ராஜ துரோகச் செயல்

பாபரி பள்ளிவாசலுக்குள் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது, அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில், அவர் செய்ததெல்லாம், பள்ளிவாசலுக்குள் பூஐஜகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள்.

ஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் :
(மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்).

பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அக்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும், அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில், ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.

பிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும், உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.

அவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்:

அந்தக் கேள்விகள் : 1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? 2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை?

இந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27, 1949 அன்று அனுப்பப்பட்டது.

இதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார், முஸ்லிம்களிடம் பேசி, அப்பள்ளிவாசலை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார்.

அத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவே;றத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன்று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில், பள்ளிவாசலுக்குள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால், பள்ளிவாசல் பள்ளிவாசலாகச் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

(ஆதாரம் : அயோத்தியா முழு உண்மைகள் பக்கம். 3 வெளியீடு : ருnவைநன யுஉயனநஅiஉள ஐவெநசயெவழையெடஇ ஏனைலயயெபயசஇ ர்லனநசயடியன – 500 044).

பள்ளிவாசலை இந்து அராஜகவாதிகளிடமிருந்து மீட்டே தீர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள், கவர்னர் ஜெனரல் இராஜகோபால் ஆச்சாரியார் அவர்களுக்குத் தகவல்கள் தந்தார்கள்.

இராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் பிரதமர் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், பள்ளிவாசலைச் சுற்றி நடப்பவை தனக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நான் கலங்கிப் போயிருப்பதாகவும் குறிப்பிட்டார். கவர்னர் ஜெனரல் கடிதத்திற்கு நேரு அவர்கள் உடனேயே பதில் எழுதினார்.

அந்தப் பதில் இது தான் : ஊஆ ழக ரு.P. iவெநனெநன வயமiபெ யஉவழைn. (உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திலிருக்கின்றார்.

5.12.1950 அன்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் அயோத்தியாவுக்கு வர விரும்புவதாக கடிதம் எழுதினார். அவரை வரவிடாமற் தடுத்து விட்டார் உ.பி. முதல்வர் ஜி.பி.பந்த்.

முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில், 1950 ல் நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பை வழங்கிற்று. அது வேறொன்றுமில்லை. இந்துக்கள் பூஐஜ நடத்தவார்களாம். முஸ்லிம்கள் அதில் எந்த இடையூறுகளையும் செய்து விடக் கூடாதாம்.

உத்திரப்பிரதேச முதல்வர் ஜி.பி. பந்த் அவர்களும் ஓர் இந்து மதவெறியர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நீண்ட காலமாகி விட்டது.

1959 ல் அரசு பொறுப்பாளரை அகற்றி விட்டு, பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றொரு வழக்கு தொடரப்பட்டது. 1961 ல் சுன்னி வக்ஃப் போர்டு, பள்ளிவாசலையும ;அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் அடக்கத்தளத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்திட வே;டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் இன்று வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. பாபரி பள்ளிவாசலைக் கோயிலா மாற்றிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளில், உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்கள் த்கள் நியாயமான உரிமைகளுக்ககாகத் தொடர்ந்த வழக்குகளில், இது வரை தீர்ப்புகள் வழங்க்பபட்வில்லை.

இன்னும் முஸ்லிம்கள் இந்த நீதி மன்றங்களை நம்புகின்றார்கள். இதே போல் தான் 1986 ல் பள்ளிவாசலில் கதவுகளைத் திறந்து, பொதுமக்களின் பூஐஜக்காக அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது!

பள்ளிவாசலைத் திறந்து பொதுமக்களின் பூஐஜயை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தவர் உமேஷ் சந்திர பாண்டே என்பவர். இவர் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாகத் தொடரப்பட்ட எந்த வழக்கோடும் சம்பந்தப்படவில்லை.

இவர் 1986 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் பள்ளிவாசலைப் பொதுமக்கள் பூஐஜக்காகத் திறந்திட வேண்டும் என்றொரு வழக்கைப் பதிவு செய்கின்றார். மூன்றே நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பூட்டு திறக்கப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட அடிப்படை வழக்குகள் பல உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக!

அடிப்படை வழக்குகளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, தீர்த்து வைக்காத வரை அது தொடர்பான எந்த வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிடக் கூடாது. இந்த நீதிமன்ற நெறிமுறைகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு, பைஸாபாத் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. அந்தத் தீர்ப்பு உடனேயே செயல்படுத்தவும்படுகின்றது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உடனேயே உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் முஸ்லிம்கள். உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3 ம் நாள் (1986) முஸ்லிம்களின் முதகில் குத்தி ஒரு தீர்ப்பை வழங்கியது.

அதாவது, பாபரி மஸ்ஜித் இருக்கும் சொத்தின் அப்போதைய நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு!

இதன் பொருள், பள்ளிவாசலில் தொடர்ந்து பூஐஜ நடத்தலாம் என்பதே.

1985 முதல் அயோத்தியாவை, யைமாகக் கொண்டு சுளுளுஇ ஏர்Pஇ டீதுP முதலிய கட்சிகள் ஒரு பெரும் இயக்கத்தைத் துவங்கின. 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கும்பமேளா திருவிழாவைப் பயன்படுத்தி கிராமம், கிராமமாக இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கல்கள் அயோத்தியை நோக்கி அனுப்பப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நவம்பர் மாதம் 9 ம் நாள் நடைபெற்ற இந்த கால்கோள் விழாவில் இராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் முதகில் குத்தியது.

நீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில் கோயில் கட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. பண்பாடு, நாகரீகம் இவற்றின் அடிப்படையில் பார்;த்தால், மிகவும் கீழ்த்தரமானதோர் செயல் இது. இந்தக் கீழ்த்தரமான செயலை இந்து வட்டாரங்களில் மிகப் பெரிய சாதனை எனப் பீற்றிக் கொண்டன சங்க் பரிவாரங்கள்.

நவம்பர் 1989 ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம், அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்ற இடம், சர்ச்சைக்குரிய இடம் என்றும், அதன் அந்தஸ்தில் எந்த மாற்றமும் கொண்டு வந்திடக் கூடாது , அதில் ஒரு துரம்பைக் கூட மாற்றிடக் கூடாது என அறிவித்தது. எனினும், அந்த இடம் பாழ்படுத்தப்பட்டது.

இந்த நாட்டின் நீதிமன்றத்தை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தினார்கள் இந்து மத வெறியர்கள். வெறி கொண்ட இந்த நாட்டுத் துரொகத்திற்குப் பெயர் தாய் நாட்டின் மீதுள்ள மாளாத பற்று.

1989 ஆண்டுத் தேர்தல்கள்.

1989 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில், பாஜக நாடாளுமன்றத்தில் 80 இடங்களைப் பிடித்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் அது பெற்றிருந்தது வெறும் 2 இடங்களே!

அப்போதைய அரசியல் கதாநாயகனாகவும், சமூக நீதியின் காவலனாகவும் காட்டப்பட்ட வி.பி.சிங் போஃபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது. இவையெல்லாம் இந்தத் தேர்தலை நிர்ணயித்தன.

தேசிய முன்னணி என்ற பெயரில் பிஜேபி வி.பி.சிங்குடன் இணைந்து நின்றது. இவையெல்லாம் பிஜேபி இதில அதிகமான இடங்களைப் பிடித்திட வகை செய்தன. ஆனால் பாஜக வினர் இது கோயிலுக்காகக் கிடைத்த ஓட்டு என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.

பிஜேபி கூட்டுடன் பணியாற்றிய தேசிய முன்னணி பல பிரச்னைகளை பிஜேபி பினராலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. பாபரி பள்ளிவாசல் பிரச்னையை பிஜேபி பெரிதாக்கவே, வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனேயே செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் பிஜேபி ன் உயர் சாதி வெறி வெளிப்பட்டது.

1990 ல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி பள்ளிவாசல் இருக்குமிடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்தது. வி.பி.சிங் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இது நான்கு மாதம் தள்ளிப் போடப்பட்டது. 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்வானி மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் கிடைக்கவிருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடவும், இராமர் கோயில் மீது மக்களின் கவனத்தைக் கொண்டு வந்திடவும் ரத யாத்திரையை மேற்கொண்டார். இந்த ரத யாத்திரையின் பெயரால் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களினால், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள். ரத யாத்திரை நாடு முழவதும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் அடிப்படையில் அதைத் தடை செய்திட வேண்டும் என விண்ணபித்தனர் மக்கள்.

ரத யாத்திரையைத் தடை செய்தால் வி.பி.சிங் அவர்களின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைப் பின் வாங்குவோம் என அறிவித்தார்கள் பிஜேபி யினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அத்வானியும் அவருடைய பரிவாரங்களும் உத்திர பிரதேசத்திற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்குவதற்கு முன்னால், ரத யாத்திரையைத் தடுத்திட வேண்டும் என முடிவு செய்து, ரத யாத்திரை பீகாரில் சமஸ்திப்பூர் வந்த போது 23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டு, அரசு விருந்தினர் மாளிகையின் காவலில் வைக்கப்பட்டார். அத்வானியைக் கைது செய்ததும், ஒரு பெரும் கூட்டம் அயோத்தியை நோக்கிப் பாய்ந்தது. முலாயம் சிங் யாதவ் அவர்களின் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது.

இதே அக்டோபர் மாதம் 30 ம் நாள் (1990) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முலாயம் சிங் யாதவ் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பள்ளிவாசல் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும், பள்ளிவாசலின் வெளிச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் பள்ளிவாசலின் மேல் காவிக் கொடியையும் ஏற்றினார்கள். இப்படிப் பள்ளிவாசலைத் தகர்ப்பதைத் தடுத்து விட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்து சமூக நீதி வழங்கிட முனைந்தது - இவற்றை மனதிற் கொண்டு பிஜேபி யினர் விபிசிங் அரசுக்கு தந்த ஆதரவைப் பின் வாங்கினர்.

வி.பி. சிங் பதவி இழந்தார். பாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் சுமூகமான முடிவு காண்போம் எனத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் சூளுரைத்தது. பாபரி பள்ளிவாசல் பள்ளிவாசல் தான் என்பதற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்திட வேண்டும். அது கோயில் தான் என்பதை நிரூபித்திட ஆதாரங்கள் இருந்தால், இந்துக்கள் தந்திட வேண்டும் என்றொரு அறிவிப்பு இரு தரப்பாரையும் நோக்கி வைக்கப்பட்டது.

பாபரி பள்ளிவாசல் நடவடிக்கைக் குழு என்ற முஸ்லிம்களின் அணி ஆதாரங்களோடு வந்தது. இந்துத் தீவிரவாதிகளோ, இது மத நம்பிக்கை. இதற்கு ஆதாரங்கள் என எதுவும் தரத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். அத்தோடு மதுரா, வாரணாசி ஆகிய இடங்களிலிருக்கும் பள்ளிவாசல்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்எனவும் இந்துத் தீவிரவாதிகள் அறிக்கை விட்டார்கள். இதிலிருந்து இந்துத் தீவிரவாதிகளிடம் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும், ஆதாரங்களால் சாதிக்க இயலாதவற்றை அடாவடித்தனங்களால் சாதிக்க முனைகின்றார்கள் என்பதும் தெளிவானது

1991 தேர்தல்களும் பள்ளிவாசல் இடிப்புகளும்

வி.பி.சிங் அவர்களின் அரசு வீழ்ந்தவுடன், சந்திரசேகர் தனது அரசை அமைத்தார். சந்திரசேகரை அரசு அமைக்க பணித்தது காங்கிரஸ் தான். பின்னர் இதே காங்கிரஸ் சந்திரசேகர் அவர்களைப் பதவியிலிருந்து வீழ்த்திற்று. 1991 ம் ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடந்தன. பாரதீய ஜனதா கட்சி இதில் தன்னுடைய எண்ணிக்கையைச் சற்று அதிகப்படுத்திக் கொண்டது. அதாவது 80 அங்கத்தினர்கலிருந்து 117 அங்கத்தினரானார்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்கள்.

அத்தோடு பாரதீய ஜனதா கட்சி உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய இடங்களில் ஆட்சிக்கு வந்தது. பி.வி. நரசிம்மராவ் இந்தியாவின் பிரதமரானார். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் லால் கிருஷ்ண அத்வானி எதிர்க்கட்சித் தலைவரானார்.

உத்திரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதம் 32 சதவீதம் மட்டுமே. எனினும் கல்யாண் சிங் என்பவரை முதல்வராககக் கொண்டு அங்கே பாரதீய ஜனதா கட்சி அமைச்சரவையை 24 ஜுன் 1991 ல் அமைத்தது.

பதவி ஏற்ற மறு நாள் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் கல்யாண் சிங் தன்னுடைய அமைச்சரபை; பரிவாரத்துடன் அயோத்தியா சென்று பாபரி பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். அங்கே ஓர் உறுதி மொழியையும் எடுத்தார். அதில, இதில் (பள்ளிவாசலில்) நிச்சயமாக ஓர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்தார்.

வழிபாட்டுத் தலங்களின் சட்டம்

1991 ல் நரசிம்ம ராவ் அரசு ஓர் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின் பெயர் Pடயஉநள ழக றுழசளாip (ளுpநஉயைட Pசழஎளைழைளெ யுஉவ) 1991. இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்தப் பள்ளிவாசலும் ஆலயமாகவோ, கோயிலாகவோ, மாற்றப்படலாகாது என்றும், எந்தக் கோயிலும் ஆலயமாகவோ, பள்ளிவாசலாகவோ மாற்றப்பட முடியாது என்று பறை சாற்றியது

இந்தச் சட்டம் 15.08.1947 அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற் கொண்டு, வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் பாபரி பள்ளிவாசலை, இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லிற்று. அதாவது, பாபரி பள்ளிவாசலை வேண்டுமானால் கோயிலாகக மாற்றிக் கொள்ளலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைகள் தரப்படுமாம். அதாவது 3 ஆண்டுகள் சிறையிலிருக்க சித்தமாக இருப்போர் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம். இந்தச் சட்டம் இன்னொரு ஏமாற்று மோசடி வேலை அவ்வளவு தான்.

இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததும், முஸ்லிம்களுக்கு ஒரு சிறு ஆறதல். வாரணாசியிலும் மதுராவிலும் இருக்கும் பள்ளிவாசல்கள் காப்பாற்றப்பட்டு விடும் என்பது தான் அந்த ஆறதல். பள்ளிவாசலலைச் சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஜேபி ன் உத்திரப்பிரதேச அரசு, பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.

இதற்கு அது கூறிய காரணம், சுற்றுலாவை வளர்ப்பதும், அயோத்தியா வரும் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்து தருவதுமாகும். இந்தப் பிஜேபி அரசு பிறப்பித்த ஆணைகளின் அடிப்படையில், அக்டோபர் மாதம் 12 ம் நாள் 1991 முதல் பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம்.

இதன் உள்நோக்கம் என்னவெனில், பாபரி பள்ளிவாசலை இடித்து விட்டு இராமர் கோயில் கட்டுவதே! அக்டோபர் 17, 1991 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓர் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனு, உத்திரப் பிரதேச அரசின் ஆணை, அதாவது பாபரி பள்ளிவாசல் உட்பட்ட இடத்தில் 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும்படி வேண்டியது.

இதன் அடிப்படையில் அலகாபாத உயர் நீதிமன்றம் 1991 அக்டோபர் 25 ம் நான் அந்த ஆணை செல்லாது என்று சொல்லாமல், கையகப்படுத்திய இடத்தில் நிரந்தரமான கட்டடங்கள் எதையும் கட்டிடக் கூடாது என்றும், இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாருக்கும் சொந்தமாக்கிப் பெயர் மாற்றம் செய்திடக் கூடாது என்றும், அத்தோடு அந்த இடத்தில் நடக்கும் அத்தனைக் கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்தி விட வேண்டும் என்று ஆணையிட்டது.

ஆனால், கல்யாண் சிங் அரசு பாபரி பள்ளிவாசலைச் சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதும் விஹெச்பி தொண்டர்கள் அசோக் சிங்காலின் மேற்பார்வையின் கீழும், பஜ்ரங்தள் தொண்டர்கள் வினய் கட்டியார் தலைமையிலும் இந்த நிலப்பரப்பிலிருந்து சிறு சிறு கோயில்களை எல்லாம் இடித்தார்கள். இந்தச் சிறு கோயில்களை இவர்கள் இடித்தற்குக் காரணம், பெரிய இராமர் கோயிலைக் கட்டுவதேயாகும்.
Posted by Unknown Labels:
கண்ணியமிக்க ரமளானில் கடைசிப்பத்தில் நாமெல்லாம் இருந்து வருகின்றோம். ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.

கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

(இந்த அல்குர்ஆனை) மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படி தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்இ ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வெரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

கண்ணியமிக்க ரமளானில் கடைசிப்பத்தில் நாமெல்லாம் இருந்து வருகின்றோம். ரமளான் பிறை 27 என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது லைலத்துல் கத்ர் உடைய இரவுதான். பொதுவாகவே மற்ற நாட்களை விட ரமளானில் பள்ளிகளில் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் பிறை 27 வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மக்கள் வெள்ளத்தால் பள்ளிவாசலே திக்குமுக்காடிப் போய்விடும்.

காரணம் அன்று தான் ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் உடைய இரவு என்று பரவலாக மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகின்றது. பல ஹஜ்ரத் மார்களும் பிறை 27 தான் லைலத்துல் கத்ர் என்று சொல்லி வருகின்றனர். சில அறிஞர்கள் பிறை 27 ல் இல்லை என்று மறுத்தாலும்,'பெரும்பாலான சான்றோர்களின் கருத்து' என்று சொல்லி மழுப்பி வருவதை பார்க்கின்றோம்.

லைலத்துல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்த கண்ணியமும்,மகத்துவமும் மிக்க இரவு என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால் பிறை 27ல் தான் என்று குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ ஆதாரப்பூர்வமாக காட்ட முடியாது. மாறாக ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் (பிறை 21, 23, 25, 27, 29) ஆகிய இந்த ஐந்து இரவுகளில் அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதிஸ்களிலிருந்து பெறப்படும் உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ர் இரவை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள். அறிவிப்பவர் :ஆயிஷh(ரலி) ஆதாரம் : புஹாரி

ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடி கொண்டிருந்தனர். அவர்களுடன் iஷத்தான் இருந்தான். எனவேஇ அதை நான் மறந்து விட்டேன். எனவே அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். அறிவிப்பவர் : அபுஸயித் (ரலி) ஆதாரம் : முஸ்லிம்,அஹ்மத்

மேற்கண்ட ஹதீஸ் மூலம் இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் ஏற்படும் சண்டை ஆயிரம் மாதங்களைவிட சிறந்த அந்த இரவு மறக்கடிக்கப்படும் அளவுக்கு அல்லாஹ்விடம் மிகுந்த கோபத்திற்குறியது என்பதை புரிந்து கொண்டு சண்டை சச்சரவுகளை விட்டும் தவிர்ந்து கொள்ளவேண்டும்.

எனவே இந்த லைலத்துல் கத்ர் இரவை கடைசிப்பத்தில் ஒற்றைப்படை இரவில் தேடுவதே மிகச்சிறந்ததாகும். அதையே நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டியும்இ வலியுறுத்தியும் உள்ளார்கள்.

இஃதிகாப்

ரமளானின் கடைசிப்பத்து நாட்களும் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை நபியவர்கள் செய்து காட்டியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்துள்ளார்கள். அறிவிப்பவர் : ஆயிஷh(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் சுப்ஹ் தொழுது விட்டு தமது இஃதிகாப் இருக்குமிடம் சென்றுவிடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷh(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபுதாவுத், இப்னுமாஜா

ஒற்றை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம். எனவே ஃபஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறி போயிருக்கும். 20ம் நாள் ஃபஜ்ரு தொழுது விட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாகத் தெரிகின்றது.

ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் இஃதிகாப் இருக்க நாடியபோது அதற்கென கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அவ்வாறே அமைக்கப்பட்டது. இது முந்தைய ஹதிஸின் தொடராகும். பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதற்காக ஒரு கூடாரம் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதிஸ் விளக்குகின்றது. ஆயினும் இது பொதுவான அனுமதியல்ல. அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இந்த ஹதிஸின் அடுத்தப் பகுதி விளக்குகின்றது.

உடனே ஜைனப்(ரலி) அவர்கள் ஒரு கூடாரம் அமைக்க உத்தரவிட்டார்கள். அது அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் சிலரும் அவ்வாறு உத்தர விட்டனர். அவ்வாறே அமைக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுது விட்டு பார்த்தபோது பல கூடாரங்கள் போடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள்இ இவர்கள் நன்மையை தான் நாடுகிறார்களா? எனக் கேட்டு விட்டு தமது கூடாரத்தை பிரிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே பிரிக்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் தமது கூடாரத்தை பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைதான் காட்டுகிறது.

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது மனிதனின் அவசியத் தேவை(மலஜலம் கழித்தல்) க்காக தவிர வெளியில் செல்ல மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : புஹாரி, முஸ்லிம், அஹ்மத்

இஃதிகாப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமல் இருப்பதும்இ ஜனாஸாவில் பங்கெடுக்காமலிருப்பதும்இ மனைவியை தீண்டாமலும்இ அணைக்காமல் இருப்பதும்இ அவசியத்தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : அபூதாவூத் இவற்றையெல்லாம் பேணி இஃதிகாப் இருக்கவேண்டும்.

லைலத்துல் கத்ரின் அமல்கள்

லைலத்துல் கத்ர் இரவுக்கென்று விசேஷமான தொழுகையோஇ பிரத்தியேகமான வணக்கமோ ஹதிஸ்களில் காணப்படவில்லை. ஆனாலும்இ நம்மில் பலர் நின்று வணங்க வேண்டும் என்பதால் நபி(ஸல்) அவர்கள் கற்று தராதவைகளை மார்க்கம் எனும் பெயரில் செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் தஸ்பிஹ் தொழுகை எனும் வணக்கமாகும்.

அதாவது, முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். பின்னர் கிராஅத் ஒதிய பிறகு ருகூவுக்கு முன்னர் நிலையில்இ ருகூவில்இ பின்னர் நிலையில்இ ஸஜ்தாவில்இ இருப்பில் இப்படி 10 தடவையாக 4 ரக்அத்களில் மொத்தம் 300 தடவை ஓதி தொழுவது தான் தஸ்பிஹ் தொழுகை. இத்தொழுகையை வாழ்நாளில் ஒரு முறையாவது தொழ வேண்டும் என வலியுறுத்தியும் உள்ளனர் நம் மௌலவிகள்.

மேலும் இத்தொழுகை தொடர்பாக பல அறிவிப்புகள் இருந்தாலும் அவை அத்தனையும் ஆதாரமற்ற பலவீனமான அறிவிப்புகளாகும். அவற்றின் தரத்தை அறிந்து அதனை விட்டு விடுவது தான் அறிவுடைமையாகும்.

ஆதாரப்பூர்வமாக இல்லாத ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யும் அமல்கள் எந்த ஒரு நன்மையையும் பெற்றுத்தராது என்பதை கருத்தில் கொண்டு இப்படிப்பட்ட அமல்களை விட்டுவிடுவதே சால சிறந்தது.

மார்க்கத்தில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் அடிப்படையில் செய்பவர்களைப்பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்மால் ஏவப்படாத செயலை மார்க்கம் என்ற பெயரில் எவரேனும் செய்வார்களேயானால் அது நிராகரிப்படும். அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்

மேலும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்... வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வார்த்தை. நடைமுறையில் சிறந்தது என்னுடைய நடைமுறை. மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாகும் ஒவ்வொரு செயல்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரி

ஒருசிலர், நன்மையான காரியம் தானே. செய்தால் என்ள தவறு. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என்று கேட்கின்றார்கள். அவர்களுக்கான ஒரே பதில், மார்க்கம் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்கள் எதைக்கொண்டு வந்தார்களோ, எதை போதித்தார்களோ அவை மட்டும்தான் கியாமத் நாள் வரை வரும் அனைத்து மக்களுக்கும். மாறாக புதிதாக சேர்ந்த அனைத்து பழக்கங்களும் பித்அத் ஆகும். இதை பற்றியே நபி(ஸல்) அவர்கள் தன் இறுதி ஹஜ்-ல் ஹஜ்ஜத்துல் விதாவில் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அவ்வாறு கூறுபவர்களுக்கு மேற்கண்ட நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியே போதுமானதாகும். மேலும் இத்தகைய சிறப்புவாய்ந்த லைலத்துல் கத்ர் உடைய இரவுகளில் நின்று வணங்கியும்இ குர்ஆன் ஓதியும்இ திக்ரு செய்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். வீணான பேச்சுக்கள்இ சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோர வேண்டும். ரமளானுடைய நாட்களில் கேட்கவேண்டிய துஆ ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வன் துஹிப்புல் அஃப்வ பஅஃபு அன்னி

பொருள் : யா அல்லாஹ்! நீயே பாவங்களை மன்னிக்கக்கூடயவன். மன்னிப்பதை விரும்புபவன். (ஆகவே) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக!!

மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஒதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி கண்ணியமிக்க ரமளானின் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் உடைய இரவுகளை அடைய முயற்சி செய்யவேண்டும். இந்த வருடம்தான் நம்முடைய கடைசி ரமளான் என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமாதாகும். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!
Posted by Unknown Labels:
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.