Wednesday, January 27 | 0 comments  

Islam was derived from the world "salaam" which means “peace which comes by surrendering to God”. It was founded by Arab prophet, Mohammed. Islam believed there was only one God, Allah. Islam was introduced into China via the Silk Road in the 7th century by Arabian envoys. Islam was later spread by merchants and craftsmen via Silk Road. Many Persians migrated to China and they married Chinese. Their descendants preserved the faith of Islam.

During the Yuan Dynasty, many Mosques and Islam learning centers were constructed. Chinese Moslems lived mostly in the area of Xinjiang Uygur Autonomous Regions, Ningxia Islam (Hui) Autonomous Region in China. There are around 20 million
Xinjiang (islam)Autonomous Region
Xinjiang (islam) Autonomous Region is the largest area in China. It occupies one/sixth of the country. It has borders with eight foreign neighbors, Pakistan, Afghanistan, Tajikistan, Kyrgyzstan, Kazakhstan, Russia, and Mongolia. It is the driest province, with much of the land consisting of desert or mountains. Its people include 45 minority groups, constituting 62% of the population. of whom the Uighurs (wee gers) make up 47%. The clash of these diverse groups has long been a cause of friction. Xinjiang is China's top producer of cotton, hops, grapes and mutton and the second largest producer of beetroot and wool. Its oil reserves are highly encouraging.

Ningxia Islam (Hui) Autonomous Region

Ningxia Hui Autonomous Region is the smallest and driest of all China's areas. One-third of the population of 5.3 million is the Hui Minority who are Muslims. Ningxia's Islam minority is exempted from China's on-child policy. They are allowed to have up to three children. The relative longevity of Ningxia's people has attracted attention.

One village of 4,000 has six people over the age of 100. Nationally, only six centenarians would be expected in every one million people. Industries include coal, chemicals, metallurgy, machinery and textiles. It is the second largest producer of calcium carbide, and a large producer of silicon carbide used in airport and highway construction and as an additive in the metallurgy industry. Three thermal plants and one hydroelectric plant allows Ningxia to have the lowest electric rates and the only region with electricity in all its villages.

Posted by Unknown Labels:



வளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் தங்களது சாதனைகளின் மூலம் மக்களின் இதயங்களை கவர்வது வாடிக்கை.

ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை இஸ்லாமிய நெறி கவர்ந்து ஈர்த்ததால் இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட நிகழ்வு கடந்தவாரம் அரங்கேறியது.

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டிக்காக வருகை தந்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் இஸ்லாத்தை இதய பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தானிய குத்துச்சண்டைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வந்த 6 பேரும் காமரூன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரும் முஃப்தி முஹம்மது நயீம் கலீமா சொல்லிக் கொடுக்க 9 வீரர்களும் முஸ்லிம்களாக மாறினர். அனைத்து விளையாட்டு வீரர்களும் பாரம்பரிய இஸ்லாமிய உடைகளை அணிந்து இருந்தது நெகிழ்ச்சியடைய செய்த நிகழ்ச்சியாக நடைபெற்றதாகவும் பாகிஸ்தானிய குத்துச்சண்டை கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் 9 பேருக்கும் இஸ்லாமிய பெயர் சூட்டப்பட்டது.

அலி அக்பர், முஹம்மது அலி, தைமூர் ஹுஸைன், ஃபசுர் ரஹ்மான், இக்பால் ஹுஸைன், முஹம்மது அக்ரம், முஹம்மது சமி, முஹம்மது யாசிர், முஹம்மது அர்ஷக் என இனி இவர்கள் அழைக்கப்படுவார்கள்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் குத்துசண்டைக் கழக சேர்மன் முஸ்லிம் உம்மாவில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் குத்துச்சண்டைக் கழக துணைத் தலைவர் இக்பால் ஹுஸைன் தெரிவிக்கி றார்.

பிற நாடுகளை விட முஸ்லிம் நாடுகளில் தங்களுக்கு கிடைத்த கண்ணியமும் விருந்தோம்பலும் முஸ்லிம்களின் அன்றாட வழிபாட்டு முறைகளும் தங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்ததாக குத்துச்சண்டை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி -உண்மை
Posted by Unknown

தொழில் நுட்பங்களின் முன்னோடியாக திகழும்சீனாவில் Youtube Facebook blogger போன்ற பல்வேறு பிரபல முன்னனி இணைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் Social Networking தொடர்பான அனைத்து இணையதங்களுக்கும் சீனாவில் தடை தான்.

இதற்கெல்லாம் காரணம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் எங்கள் நாட்டு இளைஞர்கள் தவறான வழிக்கு சென்றுவிடக்குகூடாது என்பது தான்.

ஆபாச இணையதளங்களையும் சீன அரசு விட்டு வைக்கவில்லை சீனாவில் ஆபாச இணையதளம் வைத்திருப்பவர்களை காட்டிக் கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு என அறிவித்து சுமார் 5394 பேரை மொத்தமாக கைது செய்து ஒழித்ததுள்ளது சீன அரசு.

ஆபாச இணையதளங்களை வைத்திருப்பவர்கள் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள், எனவே பணத்திற்காக நாட்டை சீர்குழைக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். மேலும் இது போன்றவர்கள் பெரும்பாலும் hackers ஆகத் தான் இருப்பார்கள். எனவே இவர்கள் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே தான் இது போன்றவர்களை சீன அரசு பொறி வைத்து பிடித்துள்ளது.

சீன அரசு இதற்கென்று அமைச்சம் அமைத்து இணைதள பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. www.mps.gov.cn

பல துறைகளில் பலே கில்லாடியாக இருக்கும் சீன அரசே தனது நாட்டையும் இளைஞர்களையும் பாதுகாக்க இன்டர்நெட்டில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றது,ஆனால் நமது நாட்டிலோ? சதை விற்று பிழைப்பு நடத்தும் கூத்தாடிகளின் படத்திற்கு தான் இன்டர்நெட்டில் பாதுகாப்பு! வெளியான உடனேயே சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டார்களாம்.

மற்றபடி இணையதளம் மூலம் சீரழக்கப்படும் இளைஞர்கள் மற்றும் இளைஞ்ஞிகள் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் தினமும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

கூத்தாடிகளுக்கு பாதிப்பு என்றவுடன் அடுத்த நமிடமே கலமிறங்கும் காவல்துறையினர். வக்கிர எண்ணங்களையும் ஆபாசத்தையும் கட்டவிழத்து விட்டு இளைஞர்களையும் நாட்டையும் சீரழிக்கும் இணையதளங்களை கண்டுபிடித்து ஏன் தடுப்பதில்லை?

திருட்டு வீசீடி வெளியிட்ட இணையதளங்களை கண்டுபிடித்து காவல்துறைக்கு இவைகளை கண்டுபிடிக்க தெரியவில்லை?

நம் நாட்டிலும் இணையதளங்களின் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட வேண்டும்.


Posted by Unknown Labels:
Anger has turned to violence on the streets of Haiti as survivors lose patience with the painfully slow process of getting international aid after the earthquake that authorities say may have killed 200,000 people.
Haiti's shell-shocked government gave the United States control over its main airport to bring order to aid flights from around the world and speed relief to the impoverished Caribbean nation.
Trucks piled with corpses have been carrying bodies to hurriedly excavated mass graves outside the city but thousands of bodies still are believed buried under rubble.
Related Articles Haiti's President Preval: country like a war zone
Haiti earthquake: British relief flight leaves Heathrow Haiti earthquake: despair and tension on the streets Haiti earthquake updates Disasters Emergency Committee launch Haiti appeal Haiti earthquake: British firefighters rescue toddler
"We have already collected around 50,000 dead bodies," Paul Antoine Bien-Aime, Haiti's interior minister told Reuters. "We anticipate there will be between 100,000 and 200,000 dead in total, although we will never know the exact number."
Around 40,000 bodies have been buried in mass graves.
Although doctors, rescue teams and supplies had been flying into the Haitian capital, Port au Prince, a series of bottlenecks meant aid was not getting to those who needed it most.
The sound of gunfire echoed around Port au Prince as looters fought over scarce food supplies, hijacked vehicles and raided a UN warehouse where 15,000 tons of food had been stockpiled.
Even the most stoic Haitians began to express frustration at the continued lack of help on the fourth day of their ordeal, and in one part of the capital corpses were piled up to build roadblocks in protest at the delays.
David Wimhurst, spokesman for the Brazilian-run UN peacekeeping mission in Haiti, said: "They want us to provide them with help, which is, of course, what we want to do. But they're slowly getting more angry and impatient."
Brazil's defence minister Nelson Jobim, who spent two days in Port au Prince, said: "As long as the people are hungry and thirsty, as long as we haven't fixed the problem of shelter, we run the risk of riots."
The problem has been worsened by the complete destruction of Port-au-Prince's main prison, where almost all of the 4,000 inmates survived the earthquake and are now roaming the streets.
Rescuers have been told to stop work when it gets dark because of fears they will be attacked.
"Our biggest problem is security," said Delfin Antonio Rodriguez, rescue commander for the Dominican Republic. "Yesterday they tried to hijack some of our trucks. Today we were barely able to work in some places because of that. There's looting and people with guns out there, because this country is very poor and people are desperate."
Shaul Schwarz, a photographer for TIME magazine, said he saw at least two roadblocks formed with bodies of earthquake victims and rocks.
"They are starting to block the roads with bodies," he said. "It's getting ugly out there. People are fed up with getting no help."
Pierre Jackson, who is desperate for medical help for his mother and sister who both have crushed legs, said: "We've been out here waiting for three days and three nights but nothing has been done for us. What should we do?"
The main pinch point is at the small airport in Port au Prince, which lost its control tower in the tremor. It became so clogged with aid aircraft that many of them had to wait hours to be unloaded and it had to be closed to new arrivals for eight hours. A shortage of jet fuel also meant some could not take off again.
"There's only so much concrete," said US Air Force Col Buck Elton. "It's a constant puzzle of trying to move aircraft in and out."
Once supplies had been unloaded, blocked roads meant progress in getting them to where they were needed was desperately slow. "People have been almost fighting over water," said aid worker Fevil Dubien as he distributed water from a lorry in a suburb of Port-au-Prince.
The situation improved with the arrival of the American aircraft carrier USS Carl Vinson, with 19 helicopters on board, which will be used to transport supplies by air. The US is also sending more than 10,000 soldiers and marines to keep the peace.
Charities have managed to set up several field hospitals, and 17 search and rescue teams were picking through the rubble of collapsed buildings with sniffer dogs, pausing every so often to wait for aftershocks to pass.
Most Haitians, however, are still having to use their bare hands to search for survivors.

"We hear on the radio that rescue teams are coming from the outside but nothing is coming," said Jean-Baptiste Lafontin Wilfried, as he helped dig through the remains of an office building. "We only have our fingers to look for survivors."
The World Food Programme (WFP) said it was drawing up plans to feed two million people for a month.
Emila Casella, of the WFP, said: "The physical destruction is so great that physically getting from point A to B with the supplies is not an easy task. Pictures can get out instantly ... and that's important because the world needs to know. But getting physically tons and tons of equipment and food and water is not as instant as Twitter or Skype or 24-hour television news."
The charity Medecins Sans Frontieres said "thousands" of people in Haiti were waiting for surgical treatment. The UN was looking at the possibility of using the national soccer stadium in Port au Prince as a base for a giant field hospital.
Meanwhile, with bloated corpses posing an increasing risk to public health, mass graves were being dug to get the bodies off the streets.
Aid workers from as far afield as China, France, Iceland and Venezuela are among those already deployed on the ground in Haiti.
Some of the wounded, including Spain's ambassador to Haiti and some staff from the US embassy, were taken to the nearby US naval base at Guantánamo Bay, Cuba – site of the controversial prison camp for terrorism suspects – for medical treatment.
Liony Batista, project manager of the charity Food for the Poor, said: "I don't think that a word has been invented for what is happening in Haiti. It is a total disaster."

எயிட்டி உலுக்கிய பூமியதிர்ச்சி ஆயிரக்கணக்கானோர் பலி


எயிட்டி அல்லது ஹெயிட்டி (Haiti), என்பது கரிபியன் தீவான இஸ்பனியோலாவில் அமைந்திருக்கும் பிரெஞ்சு, மற்றும் எயிட்டிய கிரெயோல் மொழிகள் பேசும் இலத்தீன் அமெரிக்க நாடாகும்.

தலைநகர் போர்ட் அயு பின்ஸை செவ்வாய்க்கிழமை இரவு தாக்கிய 7.0 ரிச்டர்
பூமியதிர்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கடந்த இரு நூற்றாண்டுகளில் ஹையிட்டி எதிர்கொண்ட மிக மோசமான பூமியதிர்ச்சியாக
இது கருதப்படுகிறது. இப்பூமியதிர்ச்சியால் அந்நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையக கட்டிடம், ஜனாதிபதி மாளிகை உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள்
சேதமடைந்துள்ளன.
ஜனாதிபதி மாளிகை இடிந்து விழுந்த போதும் ஜனாதிபதி ரேன் பிரேவலும் அவரது
மனைவியும் உயிர் தப்பியுள்ளதாக ஹெயிட்டியின் அமெரிக்காவுக்கான தூதுவர் ரேமண்ட்
ஜோசப் தெரிவித்தார்.

இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து பெருந்தொகையான ஐக்கிய நாடுகள் சபை
உத்தியோகத்தர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தலைநகர்
முழுவதும் இருளடைந்து காணப்பட்டதுடன் பாரிய பூமியதிர்ச்சியை தொடர்ந்து மேலும்
பல பூமியதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் மக்கள் வீதிகளில்
இரவைக் கழித்தனர்.
பூமியதிர்ச்சியின் பின் மேற்படி நகரப் பிராந்தியத்திலுள்ள பலரைக் காணவில்லை என
முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர்களில் பலர் இடிபாடுகளிடையே
சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஹையிட்டிக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அணி திரண்டுள்ளன.

போர்ட் அயு பின்ஸின் தென் மேற்கே சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் தாக்கிய இந்த
பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரையான இடைவேளையில் முறையே
5.9 ச்டர் மற்றும் 5.5 ச்டர் அளவான இரு பூமியதிர்ச்சிச் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன.
ஹையிட்டியின் வீதிகளில் பெரும்பாலானவை குறுகியவை என்பதால் கட்டிட இடிபாடுகள்
காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் நீர் மற்றும் மின்சார விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளிடையே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதை அனுமானிக்க
முடியாதுள்ளதாக ஹையிட்டியிலுள்ள ஐக்கிய நாடுகள் சமாதானப் படைத் தலைவர் அலெயின்
லீ ரோய் தெரிவித்தார்.
Posted by Unknown


கோவில் சிலைகளில் பெண்கடவுள் சிலைகளுக்கு உயர்ரகப் பட்டுத் துணி போர்த்தியிருப்பார்கள். அம்மண கோலத்தில் செதுக்கப்பட்ட சிலைகளுக்கு பட்டுத்துணி போர்த்தி, அம்மன் என்று மரியாதை செய்கிறார்கள். கடவுளை வழிபடும்போது மனம் அலைபாய்வதைத் தடுக்கவே சிலைகளுக்கும் ஆடை அணிவிக்கிறார்கள். சிலையே ஆனாலும் அங்கிருக்கும் சிற்பத்தில் கடவுள் தெரிவதைவிட அதன் பாலினமும் அங்கத்திரட்சியுமே கண்ணில்படுகிறது. தீவிர தெய்வ பக்தனுக்கும் சபலமுண்டு! களைத்துத் திரும்பும் கணவனுக்காக தலைசீவி காத்திருக்கும் மனைவியால் கணவன் புத்துணர்வு பெறுகிறான். ஆபாசப் படங்களில் அங்கம் தெரியக் காட்சிப்படுத்தப்படுபவர்கள் பெண்களே! துரிதமாக பாலியல் வசப்படுத்தும் ரசாயன மாற்றம் பெண்ணைவிட ஆணுக்கே அதிகம் என்று மருத்துவம் சொல்கிறது. கன்னிப் பெண்களின் அங்கக் கவர்ச்சியில் தன்னிலை மறந்து தாடிவைத்தலையும் காதலர்களே இதற்குச் சான்று!
ஆணுக்குப் பெண் கவர்ச்சி - பெண்ணுக்கு ஆண் கவர்ச்சி என்றாலும் இறுதி வீழ்ச்சி ஆண்களுக்கே! இடுப்புச்சேலை மடிப்புல நான் கிறங்கிப்போனேனே! என்பதிலிருந்து பெண்ணின் சிறு அங்கமும் ஆணுக்கு பாலியல் உணர்வை தூண்டுகிறது என்பது மறைக்கமுடியாத உண்மை! முஸ்லிம் பெண்கள் பர்தா எனும் மேலங்கி அணிவதை பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடாகக் குற்றம்சொல்கிறார்கள். பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக்கூடாதென்ற தடை பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பர்தா தடைசெய்யப்பட வேண்டுமா என்ற கருத்துக்கணிப்பை பிரபல பிபிசி நிறுவனம் நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவுகளிலும்கூட பர்தா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது வைக்கப்படுகிறது. முஸ்லிம் பெண்கள் தங்கள் புறஅழகை கணவன், தந்தை,மகன் சகோதரன் தவிர்த்த யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாதென்ற கட்டுப்பாடு உள்ளது. மேற்சொன்ன உறவுமுறையற்ற ஆண்களின் பார்வை முஸ்லிமல்லாத பெண்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். இஸ்லாம் தவிர யூத, கிறிஸ்தவ,சீக்கியப் பெண்களும்கூட தமது உடலழகை மற்றவர்களிடம் மறைக்கவே விரும்பிகின்றனர். நம் இந்தியாவிலும் வடமாநிலப் பெண்கள் பர்தாவையொத்த மேலங்கியை அணிகிறார்கள். பெண்களின் அங்கங்களை மறைப்பது மத மற்றும் கலாச்சார ரீதியில் சரியென்று ஒப்புக்கொள்பவர்கள்,முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் குறைகாண்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?



ஜனாதிபதியாக பதவியேற்கும் சில நாட்களுக்கு முன்பு பர்தாவைப் பற்றி விமர்சித்த திருமதி.பிரதீபா பாட்டீல் இன்றுவரை முக்காடிட்டு, கைகளை மறைக்கும் பர்தாவுக்கிணையான உடையணிகிறார். முஸ்லிம் பெண்களை பர்தா அணியச்செய்து அவர்களின் உரிமையை இஸ்லாம் பறிக்கிறதெனில் இந்திராகாந்தி முதல் ப்ரதீபா பாட்டீல்வரை முக்காடுடிட்டுக்கொள்வதற்கும் இஸ்லாம்தான் காரணமா? விஜய் டிவியில் நீயா- நானா? என்ற நிகழ்ச்சியில் பர்தா குறித்த கருத்தாடல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பர்தா அவசியமே என்று ஒரு பிரிவினரும் தேவையில்லை என்று இன்னொரு பிரிவினரும் வாதிடுவார்களாம்! நிகழ்ச்சி நடத்துபவர் இறுதியில் தீர்ப்பளிப்பாராம்! தீர்ப்பு என்னவாக இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தால் யாருக்கு நஷ்டம்? இஸ்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டமார்க்கமல்ல என்கிறீர்கள்?ஆனால் அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாடம் நடத்தி இதுபோன்ற சுதந்திரமான கருத்தாடலை தடுக்கிறீர்களே என்று சிலர் கேட்கலாம். எது சார் சுதந்திரம்? ஒருபக்கம் ஆபாச போஸ்டரை கிழிக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டு இன்னொரு பக்கம் பர்தாவை விமர்சிப்பது நேர்மையான கருத்தாடலா? பர்தா தேவையில்லை என்போர் பிகினி அல்லது டூ பீஸில் வாதிடுவதுதானே நேர்மையான விவாதமாகும்?!
Posted by Unknown
  (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் எவரிடத்தும் தேவையற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112: 1-4).

இரகசிய சமுதாயம்! இத்தலைப்பு சிலருக்கு அறிமுகமானதாகவும் பலருக்கு ஆச்சரியமாகவும், நம்ப முடியாத புதுமையாகவும் இருக்கலாம். இருப்பினும் இத்தொடர் கட்டுரைகளின் கருப்பொருளை சுருக்கமாக விளக்குவதென்றால்,

நபி மூஸா அலை அவர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட இறைமார்க்கத்தை நிராகரித்த பிர்அவ்ன், தன்னைத்தானே கடவுள் என்று பிரகடனப் படுத்தினான். ஷைத்தானுக்கு பட்டுக்கம்பளம் விரித்து, தீயசக்திகளின் தலைவனான ஒற்றைக் கண் தஜ்ஜாலை வரவேற்று தான் அமைத்த பிரமிடுகளுக்குள் பல சின்னங்களையும் அமைத்தான். இறுதியில் இறைவழியை பின்பற்றிய நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களை பின்பற்றிய நல்லவர்களையும் அழித்திட முயலவே இறைவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்தான். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அவ்வாறு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் சந்ததியினரில் ஒருசிலர் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்ததாகவும், அன்று முதல் இன்று வரை Frankish Merovingian bloodline என்ற அவர்களின் இரத்தவழி பந்தங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது (Priory of Sion) என்று சிலர் நம்புகின்றனர். அது மட்டுமல்லாமல் உலகமக்களின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர்நீத்ததாக கிருஸ்தவர்கள் நம்பும் ஏசுவிற்கும் மேரிமெக்டலின் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்ததாகவும், சிலுவையில் ஏசு மரணிக்கும் போது மேரிமெக்டலின் கருவுற்றிருந்தாள் என்றும், அவளின் குழந்தைவழியாக ஏசுவின் இரத்தபந்தமும் இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது என்றும் நம்புகின்றனர். (இந்த அடிமுட்டாள்தனத்தை முஸ்லிம்களாகிய நாம் வன்மையாக மறுக்கிறோம் என்பது தனிவிஷயம்).

இவ்விரு இரத்த பந்தங்களின் கலப்பில் பிறக்கும் ஒரு அரசன் இவ்வுலகைக் கட்டி ஆள்வான், அவனுடைய ஆட்சி (ஃபிர்அவ்ன் எந்த சக்தியை முன்னிலைப்பத்தினானோ அந்த தீய சக்தியான) அந்தி கிருஸ்து என்னும் தஜ்ஜாலுக்கு வழிகோலுவதாக அமையும் என்று ஒரு கூட்டம் திடமாக நம்புகிறது.

அவர்கள்தாம் இன்றைய நூற்றாண்டில் உலகை ஆளும் ஐரோப்பிய வல்லரசுகள். உலகப்பொருளாதாரம், ஊடகம், இராணுவம் நீதித்துறை, அறிவியல் ஆய்வு என்று இவ்வுலகையே தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடத் துடிக்கின்றனர். இவர்கள் யூத கிருஸ்தவர்களாக இருப்பினும், யூத கிருஸ்தவ மதங்களுக்கு மாறுசெய்து லூசிஃபர் என்ற அசத்திய ஆவியை அந்தரங்க கடவுளாக வணங்குகின்றனர். அந்த லூசிஃபரின் ஆட்சியை இவ்வுலகில் அமைப்பதே இவர்களின் முக்கியக் குறிக்கோள்.

இவர்களின் நிலை ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப்போன்றதேயாகும்;. இவர்களைப் போலவே அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர். அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன். (8:52)

யார் இந்த லூசிஃபர்?

அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - வழி கெடுக்கும் ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள் அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர் (2:257).

லூசிஃபர்! முஸ்லிம்களிடத்தில் இந்த வார்த்தை பிரபலமில்லாதிருப்பினும், யூத கிருஸ்தவ உலகத்திற்கு நன்கு பரிட்சயமான ஒன்று இந்த லூசிஃபர். இலத்தின் மொழியில் லூசிஃபர் என்பதற்கு வெளிச்சத்தை வழங்குபவன்(?) என்று பொருள். சூரிய உதயத்திற்கு முன்னர் பிரகாசிக்கும் அதிகாலை நட்சத்திரமான வீனஸூக்கும் இப்பெயருக்கும் சில தொடர்புண்டு. அதாவது லூசிஃபா என்பது அந்த அதிகாலை நட்சத்திரத்திலிருந்து 'இறங்கும் தேவதை' என்ற மூடநம்பிக்கைதான் அது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, யூத, கிருஸ்தவர்களின் நம்பிக்கைபடி லூசிஃபர் என்பவன் ஆதாம் ஏவாளை சுவனத்தில் தடுக்கப்பட்ட கனியை புசிக்கச்செய்து இறை சாபத்தால் பூமிக்கு தூக்கி எறியப்பட்ட சாத்தானியத் தலைவன் என்பதே. இதுதான் சரியான கருத்து. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சொல்வதென்றால் இப்லீஸ் என்ற ஷைத்தானைத்தான் யூத, கிருஸ்தவர்கள் லூசிஃபர் என்று அழைக்கின்றனர்.

இத்தொடர் கட்டுரையின் நோக்கம் வெறுமனே லூசிஃபரை பற்றி அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக லூசிஃபர் என்ற இந்த ஷைத்தானை வணங்கி அவனுடைய ஆட்சியை இவ்வுலகில் நிலை நிறுத்த இரகசியமாக பாடுபடும் மேற்கத்திய அரசகும்பலையும், அவர்களின் ஜாஹிலியாவையும்,  உலகமக்களுக்கு விளக்குவதுமேயாகும். மேலும் தன்னைத்தானே கடவுள் என்று பிரகடனப்படுத்திய கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் வாரிசுகளாகச் செயல்படும் இந்த யூத-கிருஸ்தவ நெட்வொர்க், ஷைத்தானின் ஒட்டுமொத்த உருவமான தஜ்ஜால் மீது எந்த அளவிற்கு பற்றும்-பாசமும் வைத்து அவனுடைய வருகைக்காக வழிமீது விழிவைத்துக் காத்திருக்கின்றனர் என்பதையும் தமிழ் இஸ்லாமிய உலகிற்கு வெளிப்படுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.  

இந்த ஷைத்தானிய லூசிஃபரை பற்றி கிருஸ்தவ உலகில் கீழ்க்காணும் இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

 1) லூசிஃபர் என்பவன் ஷைத்தான்தான் என்ற கிருஸ்தவர்களின் கருத்து

ஆவியானது தோன்றும் போதே அளவில்லா வல்லமையுடன் இரண்டு விதமாகவும் இருந்தன.

1. படைக்கும தன்மையும், பகுத்தறியும் தன்மையும் உள்ள நல்லதையே செய்யக்கூடிய பரிசுத்தமான ஆவி.

2. பகுத்தறியும் தன்மை அற்ற, படைத்ததை கெடுக்கும் தன்மையுள்ள தீமையையே செய்யக்கூடிய தீய ஆவி.

ஆதமும் ஏவாளும் என்று பாவம் செய்தார்களோ அன்றிலிருந்து சாத்தான் இந்த பூமியில் தனது ஆதிக்கத்தை தொடங்கிவிட்டான். மனம் திரும்புவான் என்று எதிர்பார்க்கப்பட்ட தேவதூதன் இறைவனுக்கு மிக பெரிய எதிரியாக நீயா? நானா? என்று பார்த்துவிடுவோம் என்று தேவனுக்கு எதிரான கடின நிலையை அடைந்தான்.

அசுத்த ஆவிகளுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அவைகளை அடைத்து வைக்க தேவனால் உருவாக்கப்பட்ட பாதாளத்தை தனது உறைவிடமாக கொண்டுள்ள சாத்தான் ஆண்டவரின் சந்நிதிவரை சென்று வரும் வல்லமை படைத்தவனாக இருந்தான்.

முதல் மனிதனாகிய ஆதாம் இறைவனின் வார்த்தைகளை மீறி புசிக்க கூடாது என்ற கனியை புசித்து சாத்தானின் அடிமை ஆகிவிட்டதால் அவன் சந்ததியாகிய எல்லா மனிதர்களும் தொடர்ந்து சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் பிறக்கின்றனர். அந்த மனிதர்களுக்கு பூமியில் முடிந்த அளவு துன்பங்களை கொடுத்தும், முடிவில் மரித்த உடன் அவர்களை தன்னுடைய இடமாகிய பாதளம் கொண்டு சென்று நித்ய நித்யமாக துன்புருத்துவதன் மூலம் இறைவனுக்கு தாங்கொண்ணா மனவேதனையை கொடுத்துக்கொண்டே இருப்பது தான் இவன் திட்டம்.

இன்றுவரை அவன் நினைத்ததுபோல உலகத்தின் அதிபதி போல உலகத்தின் தேவனாக இருந்துகொண்டு அந்த லூசிபர் என்ற சாத்தனை ஆட்சி செய்து வருகிறான்.ஆனால் தீமையை அழிக்க இறைவனால் படைக்கப்பட்ட எல்லோரும் தங்கள் எதற்கு படைக்கப்பட்டோம் என்று கொஞ்சமும் கவலை இல்லாமல் தீமைக்கு அடிமையாகி இறைவனை விட்டு பிரிந்து தங்கள் விருப்பம் போல வாழ்ந்து வருகின்றனர். 

2)லூசிஃபர் என்பவன் ஷைத்தான் அல்ல என்பதற்கு சில கிருஸ்தவர்கள் கூறும் காரணம்.

விடிவெள்ளி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் தோன்றும் பிரகாசமுள்ள நட்சத்திரமாக (வீனஸ் கிரகம்) இருப்பதனால், ஏசாயா 14:12ல் பாபிலோனிய அரசன் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி" என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இத்தகைய அர்த்தத்துடன் 2 பேதுரு 1:19ல் விடிவெள்ளி (லத்தீனில் லூசிபர்) என்னும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 22:16ல் இயேசுகிறிஸ்துவும் "விடிவெள்ளி" என்று அழைக்கப்பட்டுள்ளார். லத்தீன் வேதாகமத்தில் இவ்விடத்திலும் லூசிபர் என்னும் சொல்லே உள்ளது. வெளிப்படுத்தல் 2:28லும் விடிவெள்ளி என்னும் சொல் உள்ளது. லூசிபர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சாத்தானுடைய பெயராயிருந்தாலும் வேதாகமத்தில் இப்பெயர் சாத்தானுக்கு கொடுக்கப்படவில்லை. வேதாகமத்தில் "பிசாசு" (மத் 4:1), "சர்ப்பம்" (2கொரி 11:3), "வலுசர்ப்பம்" (வெளி 12:7), "இப்பிரபஞ்சத்தின் தேவன்" (2கொரி 4:4), "இந்த உலகத்தின் அதிபதி" (யோவா 12:31,16:11), "சோதனைக்காரன்" (மத் 4:3), "பொல்லாங்கன்" (மத் 13:19, 1யோவா 5:18,19), "ஆகாயத்து அதிகாரப் பிரபு" (எபே 2:2), "பெயல்செபூல்" (மத் 12:24) என்னும் பெயர்கள் சாத்தானுக்கு உள்ளன.

திருமறைக்குர்ஆன் இத்தகைய ஷைத்தான்களையும் எது எப்படி இருந்தாலும் லூசிஃபர் என்பவன் இறைவன் இல்லை. இறைவனைத் தவிர வேறெதையும் வணங்கக் கூடாது என்பதை வேதம் வழங்கப்பட்ட எந்த சமூகத்தினரும் மறுக்கமாட்டார்கள். மேலும் வணங்கத்தகுதியான ஒரே இறைவனுக்கு இணையாக மற்றொன்றை சிந்திக்க வைப்பது ஷைத்தானுடைய வேளைதான் என்பதும் திண்ணம்., அவற்றை வணங்குபவர்களையும் பற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னறிவிப்பும் எச்சரிக்கையும் செய்துவிட்டது. அத்தகைய வசனங்களில் ஒரு சில...

அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்! (58:19).

மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களை வழிகெடுப்பதற்காக பொய்த் தெய்வங்களை அவனுக்கு இணையாக்குகின்றனர். நபியே! அவர்களை நோக்கி, ''இவ்வுலகில் சிறிது காலம் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் இறுதியாகச் சேருமிடம் நரகம்தான்'' என்று நீர் கூறிவிடும். (14:30)

 எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம். ஆகவே என்னுடைய நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!. (39:17)

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான். மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. (4:120)

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (5:91)

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை ஏமாற்றிச் சோதனைக்குள்ளாக்க வேண்டாம் நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். (7:27)

ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான் இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள். (7:30)

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், செய்ய நிச்சயமாக ஏவுவான். அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் தவ்பா செய்து தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (24:21)

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான். (35:6)   

 ஐக்கிய இரகசிய இராஜ்ஜியம் 

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926) என்பவர் ஐக்கிய இராச்சியம் உட்பட 16 சுயாட்சி நாடுகளின் அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். பிப்ப்ரவரி 1952 ஆம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் இறந்தவுடன் ஏழு நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். ஐக்கிய இராச்சியம் தவிர, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெமெய்க்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன.

பிரிட்டானிய அரசி எலிசபத்தின் அரசகுடும்பம் தாங்கள்தாம் தாவீது ராஜாவின் வம்சவழியினர் என்பதாக பரைசாற்றுகின்றனர். பிரிட்டனை ஆளும் இந்த (windsor) வின்ட்ஸர் அரச பரம்பரையினரே ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் ஆட்சி புரிகின்றனர்.

இந்த வின்ட்ஸர் பரம்பரையோடு ஸ்காட்லாந்தின் ஸ்பென்ஸர் (ஸ்டிவார்ட்) அரச குடும்பம் மிக நெருக்கமான உறவு வைத்துள்ளனர். மறைந்த இளவரசி டயானாவும் இதே ஸ்பென்ஸர் பரம்பரையைச் சார்ந்தவர்தாம். கிபி 1060 பிறந்த பிரென்சு படைவீரன்; காட்ஃபிரே ஆப் ப்ய்லன் (Godfrey of Bouillon) தன்னை மிரோவின்ஜியன் இரத்தபந்தம் என்று அறிவித்துக் கொண்டு ஜெரூசலத்தின் மீது பலமுறை சிலுவையுத்தங்களை நடத்தினான். பின்னர் தன்னை ஜெரூசலத்தின் மன்னனாக கி.பி 1099ல் பிரகடனப் படுத்தினான்.

இது உலகை ஆண்ட பிரிட்டனின் முடியாச்சிக்கு பெரும்  தலையிடியாக அமைந்தது. எனவே வின்ட்ஸர் அரச குடும்பம் பிரிட்டன் முடியாச்சியை சக்திமிக்க பேரரசாக மாற்றி இவ்வுலகை ஆளவேண்டுமெனில் தங்களோடு மிரோவின்ஜியன் இரத்தபந்தமும் கலந்து அதில் பிறக்கும் ஒருவனாலேயே முடியும் என்ற முடிவிற்கு வந்தனர். தங்களின் கொடுங்கோள் பரம்பரைதான் ஐரோப்பாவை ஆள வேண்டும் என்ற தீராதமுடிவிலுள்ள இந்த எலிசபெத் வகையராக்கள் இறுதியில் மிரோவின்ஜியன் இரத்தபந்தத்தில் பிறந்த இளவரசி டயானாவை தெய்வீகம் பொருந்திய புனிதப் பெண்மணி என கண்டுபிடித்தனர். ஏசுவின் பரிசுத்த இரத்தம் இளவரசி டயானா மூலம் பாதுகாக்கப்படுகிறது என்ற நம்பிக்கையில் இளவரசர் சார்லஸூக்கு அவளை மணமுடித்தனர்.

வின்ட்ஸரின் அரச பரம்பரையினர் மட்டுமே கலந்து கொண்ட அந்தத் திடீர் திருமணத்தில் பலவிதமான இரகசிய சடங்குகள் செய்யப்பட்டன. திருமண மேடையில் வீற்றிருந்த டயானா அன்று 3 மாத கற்பிணி. திருமணமாகி 6 மாதங்களில் இளவரசன் வில்லியம்ஸ் என்ற குழந்தையைப் பெற்றெடுத்தாள். இதுபோன்ற இரகசியங்கள் 1982 ம் ஆண்டு வாக்கில் வெளியுலகிற்குத் தெரியவந்தது.

இவர்களின் ஷைத்தானிய வேலைகளை தோலுரித்துக் காட்டும் அருள்மறை குர்ஆனின் எச்சரிக்கை வசனங்கள் இதோ...

(நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு இணையுண்டென்று பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும். இதுவே அவர்களுடைய பகிரங்கமான பாவத்துக்குப் போதுமான சான்றாக இருக்கின்றது. (4:50)

இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் வம்சாவளி உறவை கற்பனையாக ஏற்படுத்துகின்றனர். ஆனால் ஜின்களும் மறுமையில் இறைவன் முன் நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள். (37:158)

... அவர்கள் ஜின்களை அல்லாஹ்வுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள் அல்லாஹ்வே அந்த ஜின்களையும் படைத்தான் இருந்தும் அறிவில்லாத காரணத்தால் இணைவைப்போர் அவனுக்குப் புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள் - அவனோ இவர்கள் இவ்வாறு வர்ணிப்பதிலிருந்து தூயவனாகவும், உயர்ந்தவனுமாக இருக்கிறான். (6:100)

தாவீது ராஜாவின் பரம்பரை, ஏசுவின் இரத்தபந்தம், தெய்வீக பெண்ணின் கருவரை, என்பதெல்லாம் இவர்கள் தேசங்களை ஆள்வதற்கு அமைத்துக் கொண்ட வீன் கற்பனையே அன்றி வேறில்லை. இவர்கள் புனித வேதமாகக் கருதும் பைபிளையும், கடந்த கால நாகரிகத்தின் வரலாறுகளையும் ஆய்வுசெய்து கற்பனையாக வடிவமைத்த இரகசிய அரசியல் கோட்பாடுகள் இறுதியில் அவர்களை சாத்தானை வணங்கும் அளவிற்கு இட்டுச்சென்றுவிட்டதை தெளிவாக அறியமுடிகிறது.

இதற்கு சிறந்த உதாரணமாக இவர்கள் ஆட்சிபுரியும் பக்கிங்ஹாம் அரண்மனை முதல், அதன் வாயில், கொடி என்று துவங்கி இவர்கள் அணியும் ஆடைகள்வரை சாத்தானிய குறியீடுகளை முன்னிலைப் படுத்துவதைக் காணலாம்.

இந்த படத்தில் காணும் 'சிவப்பு கடல் நாகம்' சாத்தானை குறிப்பதாகும். ஏசுவின் இரத்த பந்தத்திலும், சாத்தானின் வித்திலும் உருவாகும் 13 வது மிரோவின்ஜியன் வாரிசிலிருந்துதான் அந்தி கிருஸ்துவான தஜ்ஜால் வருவான் என்பது இவர்களின் நம்பிக்கை. மேற்காணும் இந்த படத்தின் பின்னனியில் பைபிளின் ஒரு சரித்திரம் உண்டு. பைபிளோடு தொடர்புடையவர்களுக்கு நன்கு புரியும்.அதை அப்படியே கீழே தருகிறோம். (இதன் வீடியோ பதிவை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.)

1 பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றினதரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.

2 தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.

3 அப்பொழுது வௌ;வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.

4 முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது. அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது. மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

5 பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன். அது ஒரு பக்கமாய்ச் சாய்து நின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. எழும்பி வெகு மாம்சம்தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.

6 அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன். அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது. அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது. அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.

7 அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன். அது கொடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது. அதற்குப் பெரிய இரும்புப்பற்கள் இருந்தது. அது நொறுக்கிப் பட்சித்தது. மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது. அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.

8 அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்றுபிடுங்கப்பட்டது. இதோ, அந்தக் கொம்பிலே மனுஷ கண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. (Dan 7 :1-8)

  இது போன்ற சாத்தானிய சக்த்திகளை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சித்திரங்களை,  கட்டிடங்கள், சினிமாக்கள், புத்தகங்கள், ஆடைகள் போன்றவற்றில் இவர்கள் திட்டமிட்டு விளம்பரம் செய்கின்றனர். அதன் உள்நோக்கம் என்ன என்பதை தனி கட்டுரையில் விரிவாக வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ். எனவே இத்தொடர் கட்டுரைகளை நீங்கள் படிப்பதோடு, மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்திட வேண்டுகிறோம்.

தொடரும்...........

ARTICLE FROM OTRUMAI.COM     

Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.