Sunday, October 18 | 0 comments  
கடவுள் மறுப்பு இயகத்தினருடன் நடைபெற்ற விவாத வீடியோ
கடவுள் மறுப்பு இயகத்தினருடன் சென்னையில் 2009 அக் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விவாத வீடியோ!

பாகம் 1 Download
பாகம் 2 Download
பாகம் 3 Download
பாகம் 4 Download
பாகம் 5 Download
பாகம் 6 Download
பாகம் 7 Download
பாகம் 8 Download
இரண்டாம் நாள்:
பாகம் 1 Download
பாகம் 2 Download
பாகம் 3 Download
பாகம் 4 Download
பாகம் 5 Download
பாகம் 6 Download
பாகம் 7 Download
பாகம் 8 Download
பாகம் 9 Download


மற்ற பாகங்கள் விரைவில்…. இன்ஷா அல்லாஹ்!

thanks: tntj

Posted by Unknown Labels:


புதுடெல்லி, அக். 11-

அமெரிக்காவில் உள்ள திங்டாங் ஆய்வு மையம் உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தி உள்ளது. 1500 வகையான ஆதாரங்களை மையமாக வைத்து இந்த கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.

அதில் உலகில் மொத்தம் உள்ள 680 கோடி மக்களில் 157 கோடி பேர் முஸ்லிம்கள் என்று தெரிய வந்துள்ளது. அதாவது உலகில் 23 சதவீத மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். 232 நாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடு இந்தோனேசியா. அங்கு 20 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். 2-வது இடம் பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. அங்கு 17 கோடியே 40 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 16 கோடியே 9 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இந்திய மக்கள் தொகையில் 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

உலகில் வாழும் மொத்த முஸ்லிம்களில் 87-ல் இருந்து 90 சதவீதத்தினர் ஷன்னி பிரிவு முஸ்லிம்கள் 10-ல் இருந்து 13 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள்.

ஷியா முஸ்லிம்களில் 68ல் இருந்து 80 சதவிதத்தினர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர்.

மக்கள் வாழும் அனைத்து கண்டங்களிலும் முஸ்லிம்கள் உள்ளனர். உலகில் 60 சதவித முஸ்லிம்கள் ஆசியாவில் வசிக்கின்றனர். மத்திய கிழக்கு நாடு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 20 சதவீத முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இல்லாத நாடுகளில் மட்டும் 30 கோடி முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்தோனேசிய மக்கள் தொகையில் 88.2 சதவீதம் பேரும், பாகிஸ்தான் மக்கள் தொகையில் 96.3 சதவீதம் பேரும் முஸ்லிம்கள். வங்காளதேசம், எகிப்து, நைஜீரியா, ஈரான், துருக்கி, அல்ஜீரியா, மொராக்கோ, ஆகியவை அதிக முஸ்லிம் மக்கள் கொண்ட நாடுகள் ஆகும்.
சிரியாவில் உள்ள முஸ்லிம்களைவிட சீனாவில் அதிக முஸ்லிம்கள் உள்ளனர். ஜோர்டான், லிபியா இரு நாட்டு முஸ்லிம்களை விட ரஷியாவில் அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

Thanks:maalaimalar

Posted by Unknown
நாத்தீகருடன் விவாதம்: நேரடி ஒளிபரப்பு!இன்ஷா அல்லாஹ் சென்னையில் வருகின்ற 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நாத்தீக கொள்கையுடையவர்களுடன் நடைபெற இருக்கும் விவாதம் www.tntj.net மற்றும் www.onlinepj.com இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்பதை நெயர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்! நேரம்: காலை 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரை விவாதிப்போர்: தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பிஜே அவர்களின் தலைமையில் 5 பேர்கள். பகுத்தறிவு இயக்கம் சார்பாக சிற்பி ராஜன் தலைமையில் 5 போ்கள். பாருங்கள்! பார்க்கச் செய்யுங்கள்!!
Posted by Unknown Labels:
அல்குர்ஆனில் இடம்பெற்ற துஆக்கள்

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيم
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" . (2:127)
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." (2:128)
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!". (2:201)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" (2:250)
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً
எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (2:286)
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்". (3:9)
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன்மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!"(3:16)
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
"எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (3:53)
ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)
رَبَّنَا مَا خَلَقْتَ هَذا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
"எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" . (3:191)
رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை!" . (3:192)
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!". (3:193)
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ
"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. (3:194)
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
"எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" . (7:23)
رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
"எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே சேர்த்து விடாதே" . (7:47)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
"எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!. (7:126)
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!" . (10:85)
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء
"எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய் ! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை." (14:38)
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" . (14:41)
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
"எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!" . (18:10)
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
"எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்" . (23:109)
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ
"எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ
"எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்" . (59:10)
رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
"எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது," (60:4)
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்" . (66:8)
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் 7:89
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ
எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் 44:12
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء
("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!" (14:40)

Duas from The Holy Quran
" And when My servants ask thee concerning Me, I am indeed close (to them): I respond to the dua (prayer) of every suppliant when they calleth on Me " [ Quran 2:186 ]
1. Our Lord! Grant us good in this world and good in the life to come and keep us safe from the torment of the Fire (2:201)
2. Our Lord! Bestow on us endurance and make our foothold sure and give us help against those who reject faith. (2:250)
3. Our Lord! Take us not to task if we forget or fall into error. (2:286)
4. Our Lord! Lay not upon us such a burden as You did lay upon those before us. (2:286)
5. Our Lord! Impose not on us that which we have not the strength to bear, grant us forgiveness and have mercy on us. You are our Protector. Help us against those who deny the truth. (2:286)
6. Our Lord! Let not our hearts deviate from the truth after selves, and unless You grant us forgiveness and bestow Your mercy upon us, we shall most certainly be lost! (7:23)
13. Our Lord! Place us not among the people who have been guilty of evildoing. (7:47)
14. Our Lord! Lay open the truth between us and our people, for You are the best of all to lay open the truth. (7:89)
15. Our Lord! Pour out on us patience and constancy, and make us die as those who have surrendered themselves unto You. (7:126)
16. Our Lord! Make us not a trial for the evildoing folk, and save as by Your mercy from people who deny the truth (10:85-86)
17. Our Lord! You truly know all that we may hide [in our hearts] as well as all that we bring into the open, for nothing whatever, be it on earth or in heaven, remains hidden from Allah (14:38)
18. Our Lord! Bestow on us mercy from Your presence and dispose of our affairs for us in the right way. (18:10) & (59:10)
19. Our Lord! In You we have placed our trust, and to You do we turn in repentance, for unto You is the end of all journeys. (60:4)
20. Our Lord! Perfect our light for us and forgive us our sins, for verily You have power over all things. (66:8)
21. Surah Al-An'am 6.162: Say (O Muhammad SAW): "Verily, my Sal�t (prayer), my sacrifice, my living, and my dying are for Allah, the Lord of the 'Alam�n (mankind, jinns and all that exists). Our Lord! Perfect our light for us and forgive us our sins, for verily
You have power over all things. (66:8)
22. Surah Al-An'am 6.162: Say (O Muhammad SAW): "Verily, my Sal�t (prayer), my sacrifice, my living, and my dying are for Allah, the Lord of the 'Alam�n (mankind, jinns and all that exists).

Posted by Unknown Labels:
சீனா.
மேற்குச் சீனாவின் சிங்ஹேய் மாநில சியுன் ஹுவா சால இனத் தன்னாட்சி மாவட்டத்தில் சீனாவின் பழமைமிக்க "குரான் திருமறையின்" கையெழுத்துப் பிரதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலம், பின்தங்கிய பாதுகாப்புச் சாதனம் ஆகியவற்றால், இந்த "குரான் திருமறையின்" சில பகுதிகள், பாழடைந்து தெளிவற்றுள்ளன. அண்மையில், சீனாவின் சில தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர்களின் முயற்சியுடன், இத்திருமறை, செவ்வனே செப்பனிடப்பட்டுள்ளது. சிங்ஹேய் மாநில சியுன் ஹுவா சால இனத் தன்னாட்சி மாவட்டம், சீனாவின் சால இனத்தவர்கள் கூடிவாழும் இடமாகும். ஏறக்குறைய 70, 80 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டது இவ்வினம். சால இன மக்கள், இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டவர்கள். 700 ஆண்டுகளுக்கு மேலாக சால இனத்தின் முன்னோடிகள், தொலைவிலிருந்து, அதாவது மத்திய கிழக்கிலிருந்து கிழக்கை நோக்கி குடியேறியபடி, சியுன் ஹுவா மாவட்டத்தின் சுற்றுப்புறத்தை அடைந்த போது, இங்கு சமவெளியையும், இங்கும் அங்குமாக ஓடும் ஆறுகளையும் வளைந்து செல்லும் மலைகள் காடுகளையும் கண்டனர். ஊற்று நீரின் அருகே சென்று, ஊற்று நீரின் சுவை பார்த்து மகிழ்ந்தனர். திடீரென, தம்முடன் வந்த ஒரு ஓட்டகம் ஊற்று நீரின் ஓட்டத்தில் படுத்து, அதன் இரு முதுகு உச்சிகளும் நீர்ப்பரப்பின் மேல் நீடித்து வெள்ளை கல்லாகியுள்ளதை அவர்கள் கண்டார்கள்.
இக்கல்லின் மீது "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதி தென்படுகின்றது. இத்தொன்மையான நூலைக் கண்டு சால இன முன்னோடிகள் உணர்ச்சிவசப்பட்டு, பின்னர், இங்யே குடியேறினர் என்று தெரிய வருகின்றது. சியுன் ஹுவா சால இனத் தன்னாட்சி மாவட்டத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த "குரான் திருமறையில்" மொத்தம் 30 தொகுதிகள் அடங்கும். 12 கிலோகிரோம் எடையுடைய இந்நூலில் மொத்தம் 867 பக்கங்கள் உள்ளன. மேல் கீழ் ஆகிய இரு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீனாவின் தொல் பொருள் நிபுணர்கள் "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதியை சரிப்படுத்தினர். கி. பி. 8ம் நூற்றாண்டுக்கும் 13ம் நூற்றாண்டுக்குமிடையில் இந்த கையெழுத்து பிரதி "படைக்கப்பட்டிருக்கலாம்" என்று நிபுணர்கள் கருதினர். இது வரை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட பழமைமிக்க "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர். சிங்ஹேய் மாநிலத்தின் சால இன பழக்க வழக்க நிபுணர் ஹென் ச்சாங் சியாங் செய்தியாளரிடம் பேசுகையில், இப்பழமையான "குரான் திருமறை", இஸ்லாமிய நாடுகளில் புனிதமான தகுநிலையை உடையது என்றார்.


இக்"குரான் திருமறைக்கு"ச் சமமானவை, உலகில் மூன்று உள்ளன. முன்னாள் சோவியத்யூனியன், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள் ஒவ்வொன்றிலும் கை எழுத்து பிரதி ஒன்று உள்ளது. 1954ம் ஆண்டில் சிரிய நாட்டில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தொன் நூல் படைப்புகளின் கண்காட்சியில், எங்கள் இந்த "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதி, சீனாவின் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. உண்மையில், இது சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி காண்பிக்கப்பட்டது. 1962ம் ஆண்டில் ஈரானிலும் இது போன்ற கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது" என்று அவர் கூறினார். "குரான் திருமறையின்" கை எழுத்து பிரதி, 700 ஆண்டுகளை கடந்து விட்டது. பல இடங்களில் எழுத்துக்கள் தெளிவற்ற நிலையில் உள்ளன. காப்பாற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. நீண்டகாலமாக, சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள், இக்"குரான் திருமறை" மீது பெரும் கவனம் செலுத்தின. சீனத் தேசிய தொல் பொருள் பணியகமும், இத்திருமறையைப் பாதுகாப்பதற்காக, 15 லட்சம் யுவானை முதலீடு செய்யவுள்ளது. அண்மையில், சீனாவின் தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர் Xi San Cai, நான் ஜிங் அருங்காட்சியகத்தின் இதர சில நிபுணர்களுக்கு தலைமை தாங்கி, இக்"குரான் திருமறை" பிரதியைப் பாதுகாத்து மேம்படுத்தினார்.


இயற்பியல் முறையில் முக்கியமாக இப்பிரதியை பாதுகாக்க வேண்டும். இது மிகவும் மதிப்புடையது என்பதால், அதன் இயல்பான தோற்றத்தை பேணிக்காக்க வேண்டும். கூடிய அளவில் இதை மாற்றாமல் இருக்க வேண்டும்" என்றார். நிபுணர்கள் குழு, பாரம்பரியத் தொழில் நுட்பத்தையும் நவீன அறிவியல் தொழில் நுட்பத்தையும் ஒன்றிணைக்கும் முறையில், இக்கை எழுத்து பிரதியைச் சுத்தம் செய்து, நச்சு நீக்கி, பூச்சிகளைக் கொன்று, பழுது பார்த்து, சீர்படுத்தியது. இதனால், அதற்கான பாதுகாப்பு பணியை அவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர். சால இன மக்களின் தேசிய இன உணர்வையும், இத்தொன் நூலுடன் அவர்கள் கொண்டுள்ள சிறப்பு வரலாற்று உறவையும் கருத்தில் கொண்டு, சீன அரசும் உள்ளூர் வாரியங்களும், உள்ளூரில் அதனைப் பாதுகாப்பதற்கான கோட்பாட்டினை முன்வைத்தன. செங் வான் மாவட்டத்து மதவியல் பணியகத்தின் தலைவர் ஹங் யுன் சு அறிமுகப்படுத்தியதாவது: "சால இனத்தின் வரலாறும், இந்த "குரான் திருமறையின்" கையெழுத்து பிரதியும் நெருங்கி ஒன்றிணைந்துள்ளன. இக்"குரான் திருமறையை", தங்களின் தேசிய இனத்தின் ஒரு பகுதியாக அவர்கள் கருதுகின்றனர். உள்ளூர் பாதுகாப்பு என்பது, தேசிய இன உணர்வை நெருக்கமாக்க முடியும். அன்றி, அவர்களின் மதவியல் உணர்வையும் மதிப்பிடலாம்" என்றார், அவர்.




சீராக்கப்பட்டுள்ள இந்த "குரான் திருமறை" சிங்ஹேய் மாநிலத்து சால இனத் தன்னாட்சி மாவட்டத்தில் புதிதாக கட்டியமைக்கப்பட்ட "குரான் திருமறை" அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தவிரவும், நிபுணர்கள், நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு, மற்றொரு பிரதியை படியாக்கம் செய்யவுள்ளனர்.
நங்கின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல் பொருள் பாதுகாப்பு நிபுணர் Xi San Cai பேசுகையில், சால இனத்தின் இக்"குரான் திருமறையை" பழுதுபார்த்து செப்பனிடும் பணி பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார். இக்"குரான் திருமறை" சால இனத்தின் தோற்றம், வரலாறு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு முக்கிய பங்களிக்கும். அன்றி, உலக இஸ்லாமிய மதப் பண்பாட்டின் ஆராய்ச்சிக்கும் இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

videolink: cctv
Posted by Unknown Labels:
நூற்றுக்கணக்கான தளங்களை ஒரே திரையில் பார்க்கும் வசதி எந்த ஒரு இணையத்தளம் எமக்கு பிடித்திருந்தாலும் அல்லது இன்னொரு தடவை செல்ல வேண்டும் என எண்ணினாலும் Book mark இல் போடலாம்.இதற்கு பதிலாக உங்களுக்க பிடித்த தளமெல்லாம் ஒரு இணையத்தளத்தில் இருந்தால் எப்படி இருக்கும்.
Posted by Unknown
Visit the Site
MARVEL and SPIDER-MAN: TM & 2007 Marvel Characters, Inc. Motion Picture © 2007 Columbia Pictures Industries, Inc. All Rights Reserved. 2007 Sony Pictures Digital Inc. All rights reserved. blogger template by blog forum.